| முதல் ஆயிரம் குலசேகராழ்வார்
 பெருமாள் திருமொழி
 
 | 
		| தாலாட்டு | 
					
			
			
      | | 718 | மன்னு புகழ்க் கௌசலைதன் மணிவயிறு வாய்த்தவனே தென் இலங்கைக் கோன் முடிகள் சிந்துவித்தாய் செம்பொன் சேர்
 கன்னி நன் மா மதில் புடைசூழ் கணபுரத்து என் கருமணியே
 என்னுடைய இன்னமுதே இராகவனே தாலேலோ             (1)
 | 
 | 718பதிவிறக்கம் செய்ய 
 | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 719 | புண்டரிக மலரதன்மேல் புவனி எல்லாம் படைத்தவனே திண் திறலாள் தாடகைதன் உரம் உருவச் சிலை வளைத்தாய்
 கண்டவர்தம் மனம் வழங்கும் கணபுரத்து என் கருமணியே
 எண் திசையும் ஆளுடையாய் இராகவனே தாலேலோ             (2)
 | 
 | 719பதிவிறக்கம் செய்ய 
 | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 720 | கொங்கு மலி கருங்குழலாள் கௌசலைதன் குல மதலாய் தங்கு பெரும் புகழ்ச்சனகன் திரு மருகா தாசரதீ
 கங்கையிலும் தீர்த்த மலி கணபுரத்து என் கருமணியே
 எங்கள் குலத்து இன்னமுதே இராகவனே தாலேலோ             (3)
 | 
 | 720பதிவிறக்கம் செய்ய 
 | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 721 | தாமரை மேல் அயனவனைப் படைத்தவனே தயரதன்தன் மா மதலாய் மைதிலிதன் மணவாளா வண்டினங்கள்
 காமரங்கள் இசைபாடும் கணபுரத்து என் கருமணியே
 ஏமருவும் சிலை வலவா இராகவனே தாலேலோ             (4)
 | 
 | 721பதிவிறக்கம் செய்ய 
 | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 722 | பார் ஆளும் படர் செல்வம் பரத நம்பிக்கே அருளி ஆரா அன்பு இளையவனோடு அருங்கானம் அடைந்தவனே
 சீர் ஆளும் வரை மார்பா திருக் கண்ணபுரத்து அரசே
 தார் ஆரும் நீண் முடி என் தாசரதீ தாலேலோ             (5)
 | 
 | 722பதிவிறக்கம் செய்ய 
 | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 723 | சுற்றம் எல்லாம் பின் தொடரத் தொல் கானம் அடைந்தவனே அற்றவர்கட்கு அருமருந்தே அயோத்தி நகர்க்கு அதிபதியே
 கற்றவர்கள்தாம் வாழும் கணபுரத்து என் கருமணியே
 சிற்றவைதன் சொற் கொண்ட சீராமா தாலேலோ             (6)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 724 | ஆலின் இலைப் பாலகனாய் அன்று உலகம் உண்டவனே வாலியைக் கொன்று அரசு இளைய வானரத்துக்கு அளித்தவனே
 காலின் மணி கரை அலைக்கும் கணபுரத்து என் கருமணியே
 ஆலி நகர்க்கு அதிபதியே அயோத்திமனே தாலேலோ             (7)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 725 | மலையதனால் அணை கட்டி மதில்-இலங்கை அழித்தவனே அலை கடலைக் கடைந்து அமரர்க்கு அமுது அருளிச் செய்தவனே
 கலை வலவர்தாம் வாழும் கணபுரத்து என் கருமணியே
 சிலை வலவா சேவகனே சீராமா தாலேலோ             (8)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 726 | தளை அவிழும் நறுங் குஞ்சித் தயரதன்தன் குல மதலாய் வளைய ஒரு சிலையதனால் மதில்-இலங்கை அழித்தவனே
 களை கழுநீர் மருங்கு அலரும் கணபுரத்து என் கருமணியே
 இளையவர்கட்கு அருள் உடையாய் இராகவனே தாலேலோ             (9)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 727 | தேவரையும் அசுரரையும் திசைகளையும் படைத்தவனே யாவரும் வந்து அடி வணங்க அரங்கநகர்த் துயின்றவனே
 காவிரி நல் நதி பாயும் கணபுரத்து என் கருமணியே
 ஏ வரி வெஞ்சிலை வலவா இராகவனே தாலேலோ             (10)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 728 | கன்னி நன் மா மதில் புடைசூழ் கணபுரத்து என் காகுத்தன் தன் அடிமேல் தாலேலோ என்று உரைத்த தமிழ்மாலை
 கொல் நவிலும் வேல் வலவன் குடைக் குலசேகரன் சொன்ன
 பன்னிய நூல் பத்தும் வல்லார் பாங்காய பத்தர்களே             (11)
 | 
 |  | 
		
			|  |  |  |