முதல் ஆயிரம் குலசேகராழ்வார் பெருமாள் திருமொழி
|
| தாலாட்டு |
| 718 | மன்னு புகழ்க் கௌசலைதன் மணிவயிறு வாய்த்தவனே தென் இலங்கைக் கோன் முடிகள் சிந்துவித்தாய் செம்பொன் சேர் கன்னி நன் மா மதில் புடைசூழ் கணபுரத்து என் கருமணியே என்னுடைய இன்னமுதே இராகவனே தாலேலோ (1) | |
718
பதிவிறக்கம் செய்ய
|
| |
|
|
| 719 | புண்டரிக மலரதன்மேல் புவனி எல்லாம் படைத்தவனே திண் திறலாள் தாடகைதன் உரம் உருவச் சிலை வளைத்தாய் கண்டவர்தம் மனம் வழங்கும் கணபுரத்து என் கருமணியே எண் திசையும் ஆளுடையாய் இராகவனே தாலேலோ (2) | |
719
பதிவிறக்கம் செய்ய
|
| |
|
|
| 720 | கொங்கு மலி கருங்குழலாள் கௌசலைதன் குல மதலாய் தங்கு பெரும் புகழ்ச்சனகன் திரு மருகா தாசரதீ கங்கையிலும் தீர்த்த மலி கணபுரத்து என் கருமணியே எங்கள் குலத்து இன்னமுதே இராகவனே தாலேலோ (3) | |
720
பதிவிறக்கம் செய்ய
|
| |
|
|
| 721 | தாமரை மேல் அயனவனைப் படைத்தவனே தயரதன்தன் மா மதலாய் மைதிலிதன் மணவாளா வண்டினங்கள் காமரங்கள் இசைபாடும் கணபுரத்து என் கருமணியே ஏமருவும் சிலை வலவா இராகவனே தாலேலோ (4) | |
721
பதிவிறக்கம் செய்ய
|
| |
|
|
| 722 | பார் ஆளும் படர் செல்வம் பரத நம்பிக்கே அருளி ஆரா அன்பு இளையவனோடு அருங்கானம் அடைந்தவனே சீர் ஆளும் வரை மார்பா திருக் கண்ணபுரத்து அரசே தார் ஆரும் நீண் முடி என் தாசரதீ தாலேலோ (5) | |
722
பதிவிறக்கம் செய்ய
|
| |
|
|
| 723 | சுற்றம் எல்லாம் பின் தொடரத் தொல் கானம் அடைந்தவனே அற்றவர்கட்கு அருமருந்தே அயோத்தி நகர்க்கு அதிபதியே கற்றவர்கள்தாம் வாழும் கணபுரத்து என் கருமணியே சிற்றவைதன் சொற் கொண்ட சீராமா தாலேலோ (6) | |
|
| |
|
|
| 724 | ஆலின் இலைப் பாலகனாய் அன்று உலகம் உண்டவனே வாலியைக் கொன்று அரசு இளைய வானரத்துக்கு அளித்தவனே காலின் மணி கரை அலைக்கும் கணபுரத்து என் கருமணியே ஆலி நகர்க்கு அதிபதியே அயோத்திமனே தாலேலோ (7) | |
|
| |
|
|
| 725 | மலையதனால் அணை கட்டி மதில்-இலங்கை அழித்தவனே அலை கடலைக் கடைந்து அமரர்க்கு அமுது அருளிச் செய்தவனே கலை வலவர்தாம் வாழும் கணபுரத்து என் கருமணியே சிலை வலவா சேவகனே சீராமா தாலேலோ (8) | |
|
| |
|
|
| 726 | தளை அவிழும் நறுங் குஞ்சித் தயரதன்தன் குல மதலாய் வளைய ஒரு சிலையதனால் மதில்-இலங்கை அழித்தவனே களை கழுநீர் மருங்கு அலரும் கணபுரத்து என் கருமணியே இளையவர்கட்கு அருள் உடையாய் இராகவனே தாலேலோ (9) | |
|
| |
|
|
| 727 | தேவரையும் அசுரரையும் திசைகளையும் படைத்தவனே யாவரும் வந்து அடி வணங்க அரங்கநகர்த் துயின்றவனே காவிரி நல் நதி பாயும் கணபுரத்து என் கருமணியே ஏ வரி வெஞ்சிலை வலவா இராகவனே தாலேலோ (10) | |
|
| |
|
|
| 728 | கன்னி நன் மா மதில் புடைசூழ் கணபுரத்து என் காகுத்தன் தன் அடிமேல் தாலேலோ என்று உரைத்த தமிழ்மாலை கொல் நவிலும் வேல் வலவன் குடைக் குலசேகரன் சொன்ன பன்னிய நூல் பத்தும் வல்லார் பாங்காய பத்தர்களே (11) | |
|
| |
|
|