முதல் ஆயிரம் மதுரகவி ஆழ்வார்
|
| கண்ணி நுண் சிறுத்தாம்பு |
| 936 | கண்ணி நுண் சிறுத் தாம்பினால் கட்டு உண்ணப் பண்ணிய பெரு மாயன் என் அப்பனில் நண்ணித் தென் குருகூர் நம்பி என்றக்கால் அண்ணிக்கும் அமுது ஊறும் என் நாவுக்கே (1) | |
|
| |
|
|
| 937 | நாவினால் நவிற்று இன்பம் எய்தினேன் மேவினேன் அவன் பொன்னடி மெய்ம்மையே தேவு மற்று அறியேன் குருகூர் நம்பி பாவின் இன்னிசை பாடித் திரிவனே (2) | |
|
| |
|
|
| 938 | திரிதந்து ஆகிலும் தேவபிரான் உடைக் கரிய கோலத் திருவுருக் காண்பன் நான் பெரிய வண் குருகூர் நகர் நம்பிக்கு ஆள்- உரியனாய் அடியேன் பெற்ற நன்மையே (3) | |
|
| |
|
|
| 939 | நன்மையால் மிக்க நான்மறையாளர்கள் புன்மை ஆகக் கருதுவர் ஆதலில் அன்னையாய் அத்தனாய் என்னை ஆண்டிடும் தன்மையான் சடகோபன் என் நம்பியே (4) | |
|
| |
|
|
| 940 | நம்பினேன் பிறர் நன்பொருள் தன்னையும் நம்பினேன் மடவாரையும் முன் எலாம் செம்பொன் மாடத் திருக் குருகூர் நம்பிக்கு அன்பனாய் அடியேன் சதிர்த்தேன் இன்றே (5) | |
|
| |
|
|
| 941 | இன்று தொட்டும் எழுமையும் எம்பிரான் நின்று தன் புகழ் ஏத்த அருளினான் குன்ற மாடத் திருக் குருகூர் நம்பி என்றும் என்னை இகழ்வு இலன் காண்மினே (6) | |
|
| |
|
|
| 942 | கண்டு கொண்டு என்னைக் காரிமாறப் பிரான் பண்டை வல் வினை பாற்றி அருளினான் எண் திசையும் அறிய இயம்புகேன் ஒண் தமிழ்ச் சடகோபன் அருளையே (7) | |
|
| |
|
|
| 943 | அருள் கொண்டாடும் அடியவர் இன்புற அருளினான் அவ் அரு மறையின் பொருள் அருள்கொண்டு ஆயிரம் இன் தமிழ் பாடினான் அருள் கண்டீர் இவ் உலகினில் மிக்கதே (8) | |
|
| |
|
|
| 944 | மிக்க வேதியர் வேதத்தின் உட்பொருள் நிற்கப் பாடி என் நெஞ்சுள் நிறுத்தினான் தக்க சீர்ச் சடகோபன் என் நம்பிக்கு ஆட்- புக்க காதல் அடிமைப் பயன் அன்றே (9) | |
|
| |
|
|
| 945 | பயன் அன்று ஆகிலும் பாங்கு அலர் ஆகிலும் செயல் நன்றாகத் திருத்திப் பணி கொள்வான் குயில் நின்று ஆர் பொழில் சூழ் குருகூர் நம்பி முயல்கின்றேன் அவன் மொய் கழற்கு அன்பையே (10) | |
|
| |
|
|
| 946 | அன்பன் தன்னை அடைந்தவர்கட்கு எல்லாம் அன்பன் தென் குருகூர் நகர் நம்பிக்கு அன்பனாய் மதுரகவி சொன்ன சொல் நம்புவார் பதி வைகுந்தம் காண்மினே (11) | |
|
| |
|
|