| இரண்டாம் ஆயிரம் திருமங்கை ஆழ்வார்
 பெரிய திருமொழி
 
 | 
		| சிங்கவேழ்குன்றம் | 
					
			
			
      | | 1007 | அம் கண் ஞாலம் அஞ்ச அங்கு ஓர் ஆள் அரி ஆய் அவுணன் பொங்க ஆகம் வள் உகிரால் போழ்ந்த புனிதன் இடம்-
 பைங் கண் ஆனைக் கொம்பு கொண்டு பத்திமையால் அடிக்கீழ்
 செங் கண் ஆளி இட்டு இறைஞ்சும் சிங்கவேழ்குன்றமே             (1)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 1008 | அலைத்த பேழ் வாய் வாள் எயிற்று ஓர் கோளரி ஆய் அவுணன் கொலைக் கையாளன் நெஞ்சு இடந்த கூர் உகிராளன் இடம்-
 மலைத்த செல் சாத்து எறிந்த பூசல் வன் துடி வாய் கடுப்ப
 சிலைக் கை வேடர் தெழிப்பு அறாத சிங்கவேழ்குன்றமே             (2)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 1009 | ஏய்ந்த பேழ் வாய் வாள் எயிற்று ஓர் கோளரி ஆய் அவுணன் வாய்ந்த ஆகம் வள் உகிரால் வகிர்ந்த அம்மானது இடம் -
 ஓய்ந்த மாவும் உடைந்த குன்றும் அன்றியும் நின்று அழலால்
 தேய்ந்த வேயும் அல்லது இல்லாச் சிங்கவேழ்குன்றமே             (3)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 1010 | எவ்வம் வெவ் வேல் பொன்பெயரோன் ஏதலன் இன் உயிரை வவ்வி ஆகம் வள் உகிரால் வகிர்ந்த அம்மானது இடம்-
 கவ்வும் நாயும் கழுகும் உச்சிப்போதொடு கால் சுழன்று
 தெய்வம் அல்லால் செல்ல ஒண்ணாச் சிங்கவேழ்குன்றமே             (4)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 1011 | மென்ற பேழ்வாய் வாள் எயிற்று ஓர் கோளரி ஆய் அவுணன் பொன்ற ஆகம் வள் உகிரால் போழ்ந்த புனிதன் இடம்-
 நின்ற செந்தீ மொண்டு சூறை நீள் விசும்பூடு இரிய
 சென்று காண்டற்கு-அரிய கோயில் சிங்கவேழ்குன்றமே             (5)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 1012 | எரிந்த பைங் கண் இலங்கு பேழ் வாய் எயிற்றொடு இது எவ் உரு என்று இரிந்து வானோர் கலங்கி ஓட இருந்த அம்மானது இடம்-
 நெரிந்த வேயின் முழையுள் நின்று நீள் நெறிவாய் உழுழை
 திரிந்த ஆனைச் சுவடு பார்க்கும் சிங்கவேழ்குன்றமே             (6)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 1013 | முனைத்த சீற்றம் விண் சுடப் போய் மூவுலகும் பிறவும் அனைத்தும் அஞ்ச ஆள் அரி ஆய் இருந்த அம்மானது இடம்-
 கனைத்த தீயும் கல்லும் அல்லா வில் உடை வேடரும் ஆய்
 தினைத்தனையும் செல்ல ஒண்ணாச் சிங்கவேழ்குன்றமே             (7)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 1014 | நாத் தழும்ப நாஅன்முகனும் ஈசனும் ஆய் முறையால் ஏத்த அங்கு ஓர் ஆள் அரி ஆய் இருந்த அம்மானது இடம்-
 காய்த்த வாகை நெற்று ஒலிப்ப கல் அதர் வேய்ங்கழை போய்த்
 தேய்த்த தீயால் விண் சிவக்கும் சிங்கவேழ்குன்றமே             (8)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 1015 | நல்லை நெஞ்சே நாம் தொழுதும் நம்முடை நம் பெருமான் அல்லிமாதர் புல்க நின்ற ஆயிரந் தோளன் இடம்-
 நெல்லி மல்கி கல் உடைப்ப புல் இலை ஆர்த்து அதர்வாய்
 சில்லி சில் என்று ஒல் அறாத சிங்கவேழ்குன்றமே             (9)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 1016 | செங் கண் ஆளி இட்டு இறைஞ்சும் சிஙக்வேழ்குன்று உடைய எங்கள் ஈசன் எம் பிரானை இருந் தமிழ் நூல்-புலவன்
 மங்கை ஆளன் மன்னு தொல் சீர் வண்டு அரை தார்க் கலியன்
 செங்கையாளன் செஞ்சொல் மாலை வல்லவர் தீது இலரே             (10)
 | 
 |  | 
		
			|  |  |  |