| இரண்டாம் ஆயிரம் திருமங்கை ஆழ்வார்
 பெரிய திருமொழி
 
 | 
		| திருவேங்கடம் 2 | 
					
			
			
      | | 1027 | தாயே தந்தை என்றும் தாரமே கிளை மக்கள் என்றும் நோயே பட்டொழிந்தேன் நுன்னைக் காண்பது ஓர் ஆசையினால்-
 வேய் ஏய் பூம் பொழில் சூழ் விரை ஆர் திருவேங்கடவா!-
 நாயேன் வந்து அடைந்தேன் நல்கி ஆள் என்னைக் கொண்டருளே (1)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 1028 | மான் ஏய் கண் மடவார் மயக்கில் பட்டு மா நிலத்து நானே நானாவித நரகம் புகும் பாவம் செய்தேன்-
 தேன் ஏய் பூம் பொழில் சூழ் திருவேங்கட மா மலை என்
 ஆனாய்!-வந்து அடைந்தேன் அடியேனை ஆட் கொண்டருளே            (2)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 1029 | கொன்றேன் பல் உயிரை குறிக்கோள் ஒன்று இலாமையினால் என்றேனும் இரந்தார்க்கு இனிது ஆக உரைத்து அறியேன்-
 குன்று ஏய் மேகம் அதிர் குளிர் மா மலை வேங்கடவா
 அன்றே வந்து அடைந்தேன் அடியேனை ஆட் கொண்டருளே (3)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 1030 | குலம்-தான் எத்தனையும் பிறந்தே இறந்து எய்த்தொழிந்தேன் நலம்-தான் ஒன்றும் இலேன் நல்லது ஓர் அறம் செய்தும் இலேன்-
 நிலம் தோய் நீள் முகில் சேர் நெறி ஆர் திருவேங்கடவா!-
 அலந்தேன் வந்து அடைந்தேன் அடியேனை ஆட் கொண்டருளே            (4)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 1031 | எப் பாவம் பலவும் இவையே செய்து இளைத்தொழிந்தேன் துப்பா நின் அடியே தொடர்ந்து ஏத்தவும் கிற்கின்றிலேன்-
 செப்பு ஆர் திண் வரை சூழ் திருவேங்கட மா மலை என்
 அப்பா!-வந்து அடைந்தேன் அடியேனை ஆட் கொண்டருளே (5)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 1032 | மண் ஆய் நீர் எரி கால் மஞ்சு உலாவும் ஆகாசமும் ஆம் புண் ஆர் ஆக்கை-தன்னுள் புலம்பித் தளர்ந்து எய்த்தொழிந்தேன்-
 விண் ஆர் நீள் சிகர விரைஆர் திருவேங்கடவா!-
 அண்ணா வந்து அடைந்தேன் அடியேனை ஆட் கொண்டருளே             (6)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 1033 | தெரியேன் பாலகனாய் பல தீமைகள் செய்துமிட்டேன் பெரியேன் ஆயினபின் பிறர்க்கே உழைத்து ஏழை ஆனேன்-
 கரி சேர் பூம் பொழில் சூழ் கன மா மலை வேங்கடவா!-
 அரியே வந்து அடைந்தேன் அடியேனை ஆட் கொண்டருளே (7)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 1034 | நோற்றேன் பல் பிறவி நுன்னைக் காண்பது ஓர் ஆசையினால் ஏற்றேன் இப் பிறப்பே இடர் உற்றனன்-எம் பெருமான்
 கோல் தேன் பாய்ந்து ஒழுகும் குளிர் சோலை சூழ் வேங்கடவா
 ஆற்றேன் வந்து அடைந்தேன் அடியேனை ஆட் கொண்டருளே (8)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 1035 | பற்றேல் ஒன்றும் இலேன் பாவமே செய்து பாவி ஆனேன் மற்றேல் ஒன்று அறியேன்-மாயனே எங்கள் மாதவனே
 கல் தேன் பாய்ந்து ஒழுகும் கமலச் சுனை வேங்கடவா!-
 அற்றேன் வந்து அடைந்தேன் அடியேனை ஆட் கொண்டருளே (9)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 1036 | கண் ஆய் ஏழ் உலகுக்கு உயிர் ஆய எம் கார் வண்ணனை விண்ணோர்-தாம் பரவும் பொழில் வேங்கட வேதியனை
 திண் ஆர் மாடங்கள் சூழ் திரு மங்கையர்-கோன் கலியன்
 பண் ஆர் பாடல் பத்தும் பயில்வார்க்கு இல்லை பாவங்களே             (10)
 | 
 |  | 
		
			|  |  |  |