| இரண்டாம் ஆயிரம் திருமங்கை ஆழ்வார்
 பெரிய திருமொழி
 
 | 
		| திருப்பரமேச்சுரவிண்ணகரம் | 
					
			
			
      | | 1127 | சொல்லு வன் சொல் பொருள் தான் அவை ஆய் சுவை ஊறு ஒலி நாற்றமும் தோற்றமும் ஆய்
 நல் அரன் நாரணன் நான்முகனுக்கு
 இடம்-தான்-தடம் சூழ்ந்து அழகு ஆய கச்சி
 பல்லவன் வில்லவன் என்று உலகில்
 பலராய்ப் பல வேந்தர் வணங்கு கழல்
 பல்லவன் மல்லையர்-கோன் பணிந்த
 பரமேச்சுரவிண்ணகரம்-அதுவே             (1)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 1128 | கார் மன்னு நீள் விசும்பும் கடலும் சுடரும் நிலனும் மலையும் தன் உந்தித்
 தார் மன்னு தாமரைக்கண்ணன் இடம்-
 தடம் மா மதிள் சூழ்ந்து அழகு ஆய கச்சி
 தேர் மன்னு தென்னவனை முனையில்
 செருவில் திறல் வாட்டிய திண் சிலையோன்
 பார் மன்னு பல்லவர்-கோன் பணிந்த
 பரமேச்சுரவிண்ணகரம்-அதுவே             (2)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 1129 | உரம் தரு மெல் அணைப் பள்ளி கொண்டான் ஒருகால் முன்னம் மா உருவாய்க் கடலுள்
 வரம் தரு மா மணிவண்ணன் இடம்
 -மணி மாடங்கள் சூழ்ந்து அழகு ஆய கச்சி
 நிரந்தவர் மண்ணையில் புண் நுகர் வேல்
 நெடு வாயில் உக செருவில் முன நாள்
 பரந்தவன் பல்லவர்-கோன் பணிந்த
 பரமேச்சுரவிண்ணகரம்-அதுவே             (3)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 1130 | அண்டமும் எண் திசையும் நிலனும் அலை நீரொடு வான் எரி கால் முதலா
 உண்டவன் எந்தை பிரானது இடம்
 -ஒளி மாடங்கள் சூழ்ந்து அழகு ஆய கச்சி
 விண்டவர் இண்டைக் குழாமுடனே
 விரைந்தார் இரிய செருவில் முனிந்து
 பண்டு ஒருகால் வளைத்தான் பணிந்த
 பரமேச்சுரவிண்ணகரம்-அதுவே             (4)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 1131 | தூம்பு உடைத் திண் கை வன் தாள் களிற்றின் துயர் தீர்த்து அரவம் வெருவ முன நாள்
 பூம் புனல் பொய்கை புக்கான்-அவனுக்கு
 இடம்-தான்-தடம் சூழ்ந்து அழகு ஆய கச்சி
 தேம் பொழில் குன்று எயில் தென்னவனைத்
 திசைப்ப செருமேல் வியந்து அன்று சென்ற
 பாம்பு உடைப் பல்லவர்-கோன் பணிந்த
 பரமேச்சுரவிண்ணகரம்-அதுவே             (5)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 1132 | திண் படைக் கோளரியின் உரு ஆய் திறலோன் அகலம் செருவில் முன நாள்
 புண் படப் போழ்ந்த பிரானது இடம்-
 பொரு மாடங்கள் சூழ்ந்து அழகு ஆய கச்சி
 வெண் குடை நீழல் செங்கோல் நடப்ப
 விடை வெல் கொடி வேல்-படை முன் உயர்த்த
 பண்பு உடைப் பல்லவர்-கோன் பணிந்த
 பரமேச்சுரவிண்ணகரம்-அதுவே             (6)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 1133 | இலகிய நீள் முடி மாவலி-தன் பெரு வேள்வியில் மாண் உரு ஆய் முன நாள்
 சலமொடு மா நிலம் கொண்டவனுக்கு
 இடம்-தான்-தடம் சூழ்ந்து அழகு ஆய கச்சி
 உலகு உடை மன்னவன் தென்னவனைக்
 கன்னி மா மதிள் சூழ் கருவூர் வெருவ
 பல படை சாய வென்றான் பணிந்த
 பரமேச்சுரவிண்ணகரம்-அதுவே             (7)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 1134 | குடைத் திறல் மன்னவன் ஆய் ஒருகால் குரங்கைப் படையா மலையால் கடலை
 அடைத்தவன் எந்தை பிரானது இடம்-
 அணி மாடங்கள் சூழ்ந்து அழகு ஆய கச்சி
 விடைத் திறல் வில்லவன் நென்மெலியில்
 வெருவ செரு வேல் வலங் கைப் பிடித்த
 படைத் திறல் பல்லவர்-கோன் பணிந்த
 பரமேச்சுரவிண்ணகரம்-அதுவே             (8)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 1135 | பிறை உடை வாள் நுதல் பின்னைதிறத்து முன்னே ஒருகால் செருவில் உருமின்
 மறை உடை மால் விடை ஏழ் அடர்த்தாற்கு
 இடம்-தான்-தடம் சூழ்ந்து அழகு ஆய கச்சி
 கறை உடை வாள் மற மன்னர் கெட
 கடல்போல முழங்கும் குரல் கடுவாய்ப்
 பறை உடைப் பல்லவர்-கோன் பணிந்த
 பரமேச்சுரவிண்ணகரம்-அதுவே             (9)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 1136 | பார் மன்னு தொல் புகழ்ப் பல்லவர்-கோன் பணிந்த பரமேச்சுரவிண்ணகர்மேல்
 கார் மன்னு நீள் வயல் மங்கையர்-தம்
 தலைவன் கலிகன்றி குன்றாது உரைத்த
 சீர் மன்னு செந்தமிழ் மாலை வல்லார்
 திரு மா மகள்-தன் அருளால் உலகில்
 தேர் மன்னராய் ஒலி மா கடல் சூழ்
 செழு நீர் உலகு ஆண்டு திகழ்வர்களே            (10)
 | 
 |  | 
		
			|  |  |  |