இரண்டாம் ஆயிரம் திருமங்கை ஆழ்வார் பெரிய திருமொழி
|
திருப்பரமேச்சுரவிண்ணகரம் |
1127 | சொல்லு வன் சொல் பொருள் தான் அவை ஆய் சுவை ஊறு ஒலி நாற்றமும் தோற்றமும் ஆய் நல் அரன் நாரணன் நான்முகனுக்கு இடம்-தான்-தடம் சூழ்ந்து அழகு ஆய கச்சி பல்லவன் வில்லவன் என்று உலகில் பலராய்ப் பல வேந்தர் வணங்கு கழல் பல்லவன் மல்லையர்-கோன் பணிந்த பரமேச்சுரவிண்ணகரம்-அதுவே (1) | |
|
|
|
|
1128 | கார் மன்னு நீள் விசும்பும் கடலும் சுடரும் நிலனும் மலையும் தன் உந்தித் தார் மன்னு தாமரைக்கண்ணன் இடம்- தடம் மா மதிள் சூழ்ந்து அழகு ஆய கச்சி தேர் மன்னு தென்னவனை முனையில் செருவில் திறல் வாட்டிய திண் சிலையோன் பார் மன்னு பல்லவர்-கோன் பணிந்த பரமேச்சுரவிண்ணகரம்-அதுவே (2) | |
|
|
|
|
1129 | உரம் தரு மெல் அணைப் பள்ளி கொண்டான் ஒருகால் முன்னம் மா உருவாய்க் கடலுள் வரம் தரு மா மணிவண்ணன் இடம் -மணி மாடங்கள் சூழ்ந்து அழகு ஆய கச்சி நிரந்தவர் மண்ணையில் புண் நுகர் வேல் நெடு வாயில் உக செருவில் முன நாள் பரந்தவன் பல்லவர்-கோன் பணிந்த பரமேச்சுரவிண்ணகரம்-அதுவே (3) | |
|
|
|
|
1130 | அண்டமும் எண் திசையும் நிலனும் அலை நீரொடு வான் எரி கால் முதலா உண்டவன் எந்தை பிரானது இடம் -ஒளி மாடங்கள் சூழ்ந்து அழகு ஆய கச்சி விண்டவர் இண்டைக் குழாமுடனே விரைந்தார் இரிய செருவில் முனிந்து பண்டு ஒருகால் வளைத்தான் பணிந்த பரமேச்சுரவிண்ணகரம்-அதுவே (4) | |
|
|
|
|
1131 | தூம்பு உடைத் திண் கை வன் தாள் களிற்றின் துயர் தீர்த்து அரவம் வெருவ முன நாள் பூம் புனல் பொய்கை புக்கான்-அவனுக்கு இடம்-தான்-தடம் சூழ்ந்து அழகு ஆய கச்சி தேம் பொழில் குன்று எயில் தென்னவனைத் திசைப்ப செருமேல் வியந்து அன்று சென்ற பாம்பு உடைப் பல்லவர்-கோன் பணிந்த பரமேச்சுரவிண்ணகரம்-அதுவே (5) | |
|
|
|
|
1132 | திண் படைக் கோளரியின் உரு ஆய் திறலோன் அகலம் செருவில் முன நாள் புண் படப் போழ்ந்த பிரானது இடம்- பொரு மாடங்கள் சூழ்ந்து அழகு ஆய கச்சி வெண் குடை நீழல் செங்கோல் நடப்ப விடை வெல் கொடி வேல்-படை முன் உயர்த்த பண்பு உடைப் பல்லவர்-கோன் பணிந்த பரமேச்சுரவிண்ணகரம்-அதுவே (6) | |
|
|
|
|
1133 | இலகிய நீள் முடி மாவலி-தன் பெரு வேள்வியில் மாண் உரு ஆய் முன நாள் சலமொடு மா நிலம் கொண்டவனுக்கு இடம்-தான்-தடம் சூழ்ந்து அழகு ஆய கச்சி உலகு உடை மன்னவன் தென்னவனைக் கன்னி மா மதிள் சூழ் கருவூர் வெருவ பல படை சாய வென்றான் பணிந்த பரமேச்சுரவிண்ணகரம்-அதுவே (7) | |
|
|
|
|
1134 | குடைத் திறல் மன்னவன் ஆய் ஒருகால் குரங்கைப் படையா மலையால் கடலை அடைத்தவன் எந்தை பிரானது இடம்- அணி மாடங்கள் சூழ்ந்து அழகு ஆய கச்சி விடைத் திறல் வில்லவன் நென்மெலியில் வெருவ செரு வேல் வலங் கைப் பிடித்த படைத் திறல் பல்லவர்-கோன் பணிந்த பரமேச்சுரவிண்ணகரம்-அதுவே (8) | |
|
|
|
|
1135 | பிறை உடை வாள் நுதல் பின்னைதிறத்து முன்னே ஒருகால் செருவில் உருமின் மறை உடை மால் விடை ஏழ் அடர்த்தாற்கு இடம்-தான்-தடம் சூழ்ந்து அழகு ஆய கச்சி கறை உடை வாள் மற மன்னர் கெட கடல்போல முழங்கும் குரல் கடுவாய்ப் பறை உடைப் பல்லவர்-கோன் பணிந்த பரமேச்சுரவிண்ணகரம்-அதுவே (9) | |
|
|
|
|
1136 | பார் மன்னு தொல் புகழ்ப் பல்லவர்-கோன் பணிந்த பரமேச்சுரவிண்ணகர்மேல் கார் மன்னு நீள் வயல் மங்கையர்-தம் தலைவன் கலிகன்றி குன்றாது உரைத்த சீர் மன்னு செந்தமிழ் மாலை வல்லார் திரு மா மகள்-தன் அருளால் உலகில் தேர் மன்னராய் ஒலி மா கடல் சூழ் செழு நீர் உலகு ஆண்டு திகழ்வர்களே (10) | |
|
|
|
|