| இரண்டாம் ஆயிரம் திருமங்கை ஆழ்வார்
 பெரிய திருமொழி
 
 | 
		| தில்லைத் திருச்சித்திரகூடம் 2 | 
					
			
			
      | | 1167 | வாட மருது இடை போகி மல்லரைக் கொன்று ஒக்கலித்திட்டு ஆடல் நல் மா உடைத்து ஆயர் ஆ-நிரைக்கு அன்று இடர் தீர்ப்பான்
 கூடிய மா மழை காத்த கூத்தன் என வருகின்றான்-
 சேடு உயர் பூம் பொழில் தில்லைச் சித்திரகூடத்து உள்ளானே             (1)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 1168 | பேய் மகள் கொங்கை நஞ்சு உண்ட பிள்ளை பரிசு இது என்றால் மா நில மா மகள் மாதர் கேள்வன் இவன் என்றும் வண்டு உண்
 பூ-மகள் நாயகன் என்றும் புலன் கெழு கோவியர் பாடித்
 தே மலர் தூவ வருவான்-சித்திரகூடத்து உள்ளானே             (2)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 1169 | பண்டு இவன் வெண்ணெய் உண்டான் என்று ஆய்ச்சியர் கூடி இழிப்ப எண் திசையோரும் வணங்க இணை மருது ஊடு நடந்திட்டு
 அண்டரும் வானத்தவரும் ஆயிரம் நாமங்களோடு
 திண் திறல் பாட வருவான்-சித்திரகூடத்து உள்ளானே             (3)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 1170 | வளைக் கை நெடுங்கண் மடவார் ஆய்ச்சியர் அஞ்சி அழைப்ப தளைத்து அவிழ் தாமரைப் பொய்கைத் தண் தடம் புக்கு அண்டர் காண
 முளைத்த எயிற்று அழல் நாகத்து உச்சியில் நின்று அது வாடத்
 திளைத்து அமர் செய்து வருவான்-சித்திரகூடத்து உள்ளானே             (4)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 1171 | பருவக் கரு முகில் ஒத்து முத்து உடை மா கடல் ஒத்து அருவித் திரள் திகழ்கின்ற ஆயிரம் பொன்மலை ஒத்து
 உருவக் கருங் குழல் ஆய்ச்சிதிறத்து இன மால் விடை செற்று
 தெருவில் திளைத்து வருவான்-சித்திரகூடத்து உள்ளானே             (5)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 1172 | எய்யச் சிதைந்தது இலங்கை மலங்க வரு மழை காப்பான் உய்யப் பரு வரை தாங்கி ஆநிரை காத்தான் என்று ஏத்தி
 வையத்து எவரும் வணங்க அணங்கு எழு மா மலை போல
 தெய்வப் புள் ஏறி வருவான்-சித்திரகூடத்து உள்ளானே             (6)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 1173 | ஆவர் இவை செய்து அறிவார்? அஞ்சன மா மலை போல மேவு சினத்து அடல் வேழம் வீழ முனிந்து அழகு ஆய
 காவி மலர் நெடுங் கண்ணார் கை தொழ வீதி வருவான்-
 தேவர் வணங்கு தண் தில்லைச் சித்திரகூடத்து உள்ளானே            (7)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 1174 | பொங்கி அமரில் ஒருகால் பொன்பெயரோனை வெருவ அங்கு அவன் ஆகம் அளைந்திட்டு ஆயிரம் தோள் எழுந்து ஆட
 பைங் கண் இரண்டு எரி கான்ற நீண்ட எயிற்றொடு பேழ் வாய்ச்
 சிங்க உருவின் வருவான்-சித்திரகூடத்து உள்ளானே             (8)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 1175 | கரு முகில் போல்வது ஓர் மேனி கையன ஆழியும் சங்கும் பெரு விறல் வானவர் சூழ ஏழ் உலகும் தொழுது ஏத்த
 ஒரு மகள் ஆயர் மடந்தை ஒருத்தி நிலமகள் மற்றைத்
 திருமகளோடும் வருவான்-சித்திரகூடத்து உள்ளானே             (9)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 1176 | தேன் அமர் பூம் பொழில் தில்லைச் சித்திரகூடம் அமர்ந்த வானவர்-தங்கள் பிரானை மங்கையர்-கோன்மருவார்
 ஊன் அமர் வேல் கலிகன்றி ஒண் தமிழ் ஒன்பதோடு ஒன்றும்
 தான் இவை கற்று வல்லார்மேல் சாரா தீவினை-தானே             (10)
 | 
 |  | 
		
			|  |  |  |