இரண்டாம் ஆயிரம் திருமங்கை ஆழ்வார் பெரிய திருமொழி
|
திருவாலி:2 |
1197 | தூ விரிய மலர் உழக்கி துணையோடும் பிரியாதே பூ விரிய மது நுகரும் பொறி வரிய சிறு வண்டே தீ விரிய மறை வளர்க்கும் புகழ் ஆளர் திருவாலி ஏ வரி வெம் சிலையானுக்கு என் நிலைமை உரையாயே (1) | |
|
|
|
|
1198 | பிணி அவிழு நறு நீல மலர் கிழிய பெடையோடும் அணி மலர்மேல் மது நுகரும் அறு கால சிறு வண்டே மணி கழுநீர் மருங்கு அலரும் வயல் ஆலி மணவாளன் பணி அறியேன் நீ சென்று என் பயலை நோய் உரையாயே (2) | |
|
|
|
|
1199 | நீர் வானம் மண் எரி கால் ஆய்நின்ற நெடுமால்-தன் தார் ஆய நறுந் துளவம் பெறும் தகையேற்கு அருளானே சீர் ஆரும் வளர் பொழில் சூழ் திருவாலி வயல் வாழும் கூர் வாய சிறு குருகே குறிப்பு அறிந்து கூறாயே (3) | |
|
|
|
|
1200 | தானாக நினையானேல் தன் நினைந்து நைவேற்கு ஓர் மீன் ஆய கொடி நெடு வேள் வலி செய்ய மெலிவேனோ? தேன் வாய வரி வண்டே திருவாலி நகர் ஆளும் ஆன்-ஆயற்கு என் உறு நோய் அறிய சென்று உரையாயே (4) | |
|
|
|
|
1201 | வாள் ஆய கண் பனிப்ப மென் முலைகள் பொன் அரும்ப நாள் நாளும் நின் நினைந்து நைவேற்கு ஓ மண் அளந்த தாளாளா தண் குடந்தை நகராளா வரை எடுத்த தோளாளா என்-தனக்கு ஓர் துணையாளன் ஆகாயே (5) | |
|
|
|
|
1202 | தார் ஆய தன் துளவம் வண்டு உழுதவரை மார்பன் போர் ஆனைக் கொம்பு ஒசித்த புள் பாகன் என் அம்மான் தேர் ஆரும் நெடு வீதித் திருவாலி நகர் ஆளும் கார் ஆயன் என்னுடைய கன வளையும் கவர்வானோ? (6) | |
|
|
|
|
1203 | கொண்டு அரவத் திரை உலவு குரை கடல்மேல் குலவரைபோல் பண்டு அரவின் அணைக் கிடந்து பார் அளந்த பண்பாளா வண்டு அமரும் வளர் பொழில் சூழ் வயல் ஆலி மைந்தா என் கண் துயில் நீ கொண்டாய்க்கு என் கன வளையும் கடவேனோ? (7) | |
|
|
|
|
1204 | குயில் ஆலும் வளர் பொழில் சூழ் தண் குடந்தைக் குடம் ஆடி துயிலாத கண்_இணையேன் நின் நினைந்து துயர்வேனோ? முயல் ஆலும் இள மதிக்கே வளை இழந்தேற்கு இது நடுவே வயல் ஆலி மணவாளா கொள்வாயோ மணி நிறமே? (8) | |
|
|
|
|
1205 | நிலை ஆளா நின் வணங்க வேண்டாயே ஆகிலும் என் முலை ஆள ஒருநாள் உன் அகலத்தால் ஆளாயே சிலையாளா மரம் எய்த திறல் ஆளா திருமெய்ய மலையாளா நீ ஆள வளை ஆள மாட்டோமே (9) | |
|
|
|
|
1206 | மை இலங்கு கருங் குவளை மருங்கு அலரும் வயல் ஆலி நெய் இலங்கு சுடர் ஆழிப் படையானை நெடுமாலை கை இலங்கு வேல் கலியன் கண்டு உரைத்த தமிழ்-மாலை ஐ இரண்டும் இவை வல்லார்க்கு அரு வினைகள் அடையாவே (10) | |
|
|
|
|