இரண்டாம் ஆயிரம் திருமங்கை ஆழ்வார் பெரிய திருமொழி
|
திருவாலி:3 |
1207 | கள்வன்கொல்? யான் அறியேன்-கரியான் ஒரு காளை வந்து வள்ளி மருங்குல் என்-தன் மட மானினைப் போத என்று வெள்ளி வளைக் கைப் பற்ற பெற்ற தாயரை விட்டு அகன்று அள்ளல் அம் பூங் கழனி அணி ஆலி புகுவர்கொலோ? (1) | |
|
|
|
|
1208 | பண்டு இவன் ஆயன் நங்காய் படிறன் புகுந்து என் மகள்-தன் தொண்டை அம் செங் கனி வாய் நுகர்ந்தானை உகந்து அவன்பின் கெண்டை ஒண் கண் மிளிர கிளிபோல் மிழற்றி நடந்து வண்டு அமர் கானல் மல்கும் வயல் ஆலி புகுவர்கொலோ? (2) | |
|
|
|
|
1209 | அஞ்சுவன் வெம் சொல் நங்காய் அரக்கர் குலப் பாவை-தன்னை வெம் சின மூக்கு அரிந்த விறலோன் திறம் கேட்கில் மெய்யே பஞ்சிய மெல் அடி எம் பணைத் தோளி பரக்கழிந்து வஞ்சி அம் தண் பணை சூழ் வயல் ஆலி புகுவர்கொலோ? (3) | |
|
|
|
|
1210 | ஏது அவன் தொல் பிறப்பு? இளையவன் வளை ஊதி மன்னர் தூதுவன் ஆயவன் ஊர் சொல்வீர்கள் சொலீர் அறியேன் மாதவன் தன் துணையா நடந்தாள் தடம் சூழ் புறவில் போது வண்டு ஆடு செம்மல் புனல் ஆலி புகுவர்கொலோ? (4) | |
|
|
|
|
1211 | தாய் எனை என்று இரங்காள் தடந் தோளி தனக்கு அமைந்த மாயனை மாதவனை மதித்து என்னை அகன்ற இவள் வேய் அன தோள் விசிறி பெடை அன்னம் என நடந்து போயின பூங் கொடியாள் புனல் ஆலி புகுவர்கொலோ? (5) | |
|
|
|
|
1212 | என் துணை என்று எடுத்தேற்கு இறையேனும் இரங்கிற்றிலள் தன் துணை ஆய என்-தன் தனிமைக்கும் இரங்கிற்றிலள் வன் துணை வானவர்க்கு ஆய் வரம் செற்று அரங்கத்து உறையும் இன் துணைவனொடும் போய் எழில் ஆலி புகுவர்கொலோ? (6) | |
|
|
|
|
1213 | அன்னையும் அத்தனும் என்று அடியோமுக்கு இரங்கிற்றிலள் பின்னை-தன் காதலன்-தன் பெருந் தோள் நலம் பேணினளால் மின்னையும் வஞ்சியையும் வென்று இலங்கும் இடையாள் நடந்து புன்னையும் அன்னமும் சூழ் புனல் ஆலி புகுவர்கொலோ? (7) | |
|
|
|
|
1214 | முற்றிலும் பைங் கிளியும் பந்தும் ஊசலும் பேசுகின்ற சிற்றில் மென் பூவையும் விட்டு அகன்ற செழுங் கோதை-தன்னைப் பெற்றிலேன் முற்று இழையை பிறப்பிலி பின்னே நடந்து மற்று எல்லாம் கைதொழப் போய் வயல் ஆலி புகுவர்கொலோ? (8) | |
|
|
|
|
1215 | காவி அம் கண்ணி எண்ணில் கடி மா மலர்ப் பாவை ஒப்பாள் பாவியேன் பெற்றமையால் பணைத் தோளி பரக்கழிந்து தூவி சேர் அன்னம் அன்ன நடையாள் நெடுமாலொடும் போய் வாவி அம் தண் பணை சூழ் வயல் ஆலி புகுவர்கொலோ? (9) | |
|
|
|
|
1216 | தாய் மனம் நின்று இரங்க தனியே நெடுமால் துணையா போயின பூங் கொடியாள் புனல் ஆலி புகுவர் என்று காய் சின வேல் கலியன் ஒலிசெய் தமிழ்-மாலை பத்தும் மேவிய நெஞ்சு உடையார் தஞ்சம் ஆவது விண் உலகே (10) | |
|
|
|
|