| இரண்டாம் ஆயிரம் திருமங்கை ஆழ்வார்
 பெரிய திருமொழி
 
 | 
		| திருநாங்கூர் மணிமாடக்கோயில் | 
					
			
			
      | | 1217 | நந்தா விளக்கே அளத்தற்கு அரியாய் நர நாரணனே கரு மா முகில்போல்
 எந்தாய் எமக்கே அருளாய் என நின்று
 இமையோர் பரவும் இடம்-எத் திசையும்
 கந்தாரம் அம் தேன் இசை பாட மாடே
 களி வண்டு மிழற்ற நிழல் துதைந்து
 மந்தாரம் நின்று மணம் மல்கும் நாங்கூர்
 மணிமாடக்கோயில்-வணங்கு என் மனனே (1)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 1218 | முதலைத் தனி மா முரண் தீர அன்று முது நீர்த் தடச் செங் கண் வேழம் உய்ய
 விதலைத்தலைச் சென்று அதற்கே உதவி
 வினை தீர்த்த அம்மான் இடம்-விண் அணவும்
 பதலைக் கபோதத்து ஒளி மாட நெற்றிப்
 பவளக் கொழுங் கால பைங் கால் புறவம்
 மதலைத் தலை மென் பெடை கூடும் நாங்கூர்
 மணிமாடக்கோயில்-வணங்கு என் மனனே            (2)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 1219 | கொலைப் புண் தலைக் குன்றம் ஒன்று உய்ய அன்று கொடு மா முதலைக்கு இடர்செய்து கொங்கு ஆர்
 இலை புண்டரீகத்தவள் இன்பம் அன்போடு
 அணைந்திட்ட அம்மான் இடம்-ஆள் அரியால்
 அலைப்புண்ட யானை மருப்பும் அகிலும்
 அணி முத்தும் வெண் சாமரையோடு பொன்னி
 மலைப் பண்டம் அண்ட திரை உந்தும் நாங்கூர்
 மணிமாடக்கோயில்-வணங்கு என் மனனே             (3)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 1220 | சிறை ஆர் உவணப் புள் ஒன்று ஏறி அன்று திசை நான்கும் நான்கும் இரிய செருவில்
 கறை ஆர் நெடு வேல் அரக்கர் மடிய
 கடல் சூழ் இலங்கை கடந்தான் இடம்-தான்-
 முறையால் வளர்க்கின்ற முத் தீயர் நால் வேதர்
 ஐ வேள்வி ஆறு அங்கர் ஏழின் இசையோர்
 மறையோர் வணங்கப் புகழ் எய்தும் நாங்கூர்
 மணிமாடக்கோயில்-வணங்கு என் மனனே             (4)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 1221 | இழை ஆடு கொங்கைத் தலை நஞ்சம் உண்டிட்டு இளங் கன்று கொண்டு விளங்காய் எறிந்து
 தழை வாட வன் தாள் குருந்தம் ஒசித்து
 தடந் தாமரைப் பொய்கை புக்கான் இடம்-தான்-
 குழை ஆட வல்லிக் குலம் ஆட மாடே
 குயில் கூவ நீடு கொடி மாடம் மல்கு
 மழை ஆடு சோலை மயில் ஆலும் நாங்கூர்
 மணிமாடக்கோயில்-வணங்கு என் மனனே             (5)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 1222 | பண் நேர் மொழி ஆய்ச்சியர் அஞ்ச வஞ்சப் பகு வாய்க் கழுதுக்கு இரங்காது அவள்-தன்
 உண்ணா முலை மற்று அவள் ஆவியோடும்
 உடனே சுவைத்தான் இடம்-ஓங்கு பைந் தாள்
 கண் ஆர் கரும்பின் கழை தின்று வைகி
 கழுநீரில் மூழ்கி செழு நீர்த் தடத்து
 மண் ஏந்து இள மேதிகள் வைகும் நாங்கூர்
 மணிமாடக்கோயில்-வணங்கு என் மனனே             (6)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 1223 | தளைக் கட்டு அவிழ் தாமரை வைகு பொய்கைத் தடம் புக்கு அடங்கா விடம் கால் அரவம்
 இளைக்கத் திளைத்திட்டு அதன் உச்சி-தன்மேல்
 அடி வைத்த அம்மான் இடம்-மா மதியம்
 திளைக்கும் கொடி மாளிகை சூழ் தெருவில்
 செழு முத்து வெண்ணெற்கு எனச் சென்று முன்றில்
 வளைக்கை நுளைப் பாவையர் மாறும் நாங்கூர்
 மணிமாடக்கோயில்-வணங்கு என் மனனே             (7)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 1224 | துளை ஆர் கரு மென் குழல் ஆய்ச்சியர்-தம் துகில் வாரியும் சிற்றில் சிதைத்தும் முற்றா
 இளையார் விளையாட்டொடு காதல் வெள்ளம்
 விளைவித்த அம்மான் இடம்-வேல் நெடுங் கண்
 முளை வாள் எயிற்று மடவார் பயிற்று
 மொழி கேட்டிருந்து முதிராத இன் சொல்
 வளை வாய கிள்ளை மறை பாடும் நாங்கூர்
 மணிமாடக்கோயில்-வணங்கு என் மனனே             (8)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 1225 | விடை ஓட வென்று ஆய்ச்சி மென் தோள் நயந்த விகிர்தா விளங்கு சுடர் ஆழி என்னும்
 படையோடு சங்கு ஒன்று உடையாய் என நின்று
 இமையோர் பரவும் இடம்-பைந் தடத்துப்
 பெடையோடு செங் கால அன்னம் துகைப்ப
 தொகைப் புண்டரீகத்திடைச் செங்கழுநீர்
 மடை ஓட நின்று மது விம்மும் நாங்கூர்
 மணிமாடக்கோயில்-வணங்கு என் மனனே             (9)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 1226 | வண்டு ஆர் பொழில் சூழ்ந்து அழகு ஆய நாங்கூர் மணிமாடக்கோயில் நெடுமாலுக்கு என்றும்
 தொண்டு ஆய தொல் சீர் வயல் மங்கையர்-கோன்
 கலியன் ஒலிசெய் தமிழ்-மாலை வல்லார்
 கண்டார் வணங்கக் களி யானை மீதே
 கடல் சூழ் உலகுக்கு ஒரு காவலர் ஆய்
 விண் தோய் நெடு வெண் குடை நீழலின் கீழ்
 விரி நீர் உலகு ஆண்டு விரும்புவரே             (10)
 | 
 |  | 
		
			|  |  |  |