இரண்டாம் ஆயிரம் திருமங்கை ஆழ்வார் பெரிய திருமொழி
|
| திருநாங்கூர் அரிமேயவிண்ணகரம் |
| 1237 | திரு மடந்தை மண் மடந்தை இருபாலும் திகழத் தீவினைகள் போய் அகல அடியவர்கட்கு என்றும் அருள் நடந்து இவ் ஏழ் உலகத்தவர் பணிய வானோர் அமர்ந்து ஏத்த இருந்த இடம்-பெரும் புகழ் வேதியர் வாழ்- தரும் இடங்கள் மலர்கள் மிகு கைதைகள் செங்கழுநீர் தாமரைகள் தடங்கள்தொறும் இடங்கள்தொறும் திகழ அரு இடங்கள் பொழில் தழுவி எழில் திகழும் நாங்கூர் அரிமேயவிண்ணகரம்-வணங்கு மட நெஞ்சே (1) |
|
|
| |
|
|
| 1238 | வென்றி மிகு நரகன் உரம்-அது அழிய விசிறும் விறல் ஆழித் தடக் கையன் விண்ணவர்கட்கு அன்று குன்று கொடு குரை கடலைக் கடைந்து அமுதம் அளிக்கும் குருமணி என் ஆர் அமுதம் குலவி உறை கோயில்- என்றும் மிகு பெருஞ் செல்வத்து எழில் விளங்கு மறையோர் ஏழ் இசையும் கேள்விகளும் இயன்ற பெருங் குணத்தோர் அன்று உலகம் படைத்தவனை அனையவர்கள் நாங்கூர் அரிமேயவிண்ணகரம்-வணங்கு மட நெஞ்சே (2) | |
|
| |
|
|
| 1239 | உம்பரும் இவ் ஏழ் உலகும் ஏழ் கடலும் எல்லாம் உண்ட பிரான் அண்டர்கள் முன் கண்டு மகிழ்வு எய்தக் கும்பம் மிகு மத யானை மருப்பு ஒசித்து கஞ்சன் குஞ்சி பிடித்து அடித்த பிரான் கோயில்-மருங்கு எங்கும் பைம் பொனொடு வெண் முத்தம் பல புன்னை காட்ட பலங்கனிகள் தேன் காட்ட பட அரவு ஏர் அல்குல் அம்பு அனைய கண் மடவார் மகிழ்வு எய்தும் நாங்கூர் அரிமேயவிண்ணகரம்-வணங்கு மட நெஞ்சே (3) | |
|
| |
|
|
| 1240 | ஓடாத ஆள் அரியின் உருவம்-அது கொண்டு அன்று உலப்பில் மிகு பெரு வரத்த இரணியனைப் பற்றி வாடாத வள் உகிரால் பிளந்து அவன்-தன் மகனுக்கு அருள்செய்தான் வாழும் இடம்-மல்லிகை செங்கழுநீர் சேடு ஏறு மலர்ச் செருந்தி செழுங் கமுகம் பாளை செண்பகங்கள் மணம் நாறும் வண் பொழிலின் ஊடே ஆடு ஏறு வயல் ஆலைப் புகை கமழும் நாங்கூர் அரிமேயவிண்ணகரம்-வணங்கு மட நெஞ்சே (4) | |
|
| |
|
|
| 1241 | கண்டவர்-தம் மனம் மகிழ மாவலி-தன் வேள்விக் களவு இல் மிகு சிறு குறள் ஆய் மூவடி என்று இரந்திட்டு அண்டமும் இவ் அலை கடலும் அவனிகளும் எல்லாம் அளந்த பிரான் அமரும் இடம்-வளங் கொள் பொழில் அயலே அண்டம் உறு முழவு ஒலியும் வண்டு இனங்கள் ஒலியும் அரு மறையின் ஒலியும் மடவார் சிலம்பின் ஒலியும் அண்டம் உறும் அலை கடலின் ஒலி திகழும் நாங்கூர் அரிமேயவிண்ணகரம்-வணங்கு மட நெஞ்சே (5) | |
|
| |
|
|
| 1242 | வாள் நெடுங் கண் மலர்க் கூந்தல் மைதிலிக்கா இலங்கை மன்னன் முடி ஒருபதும் தோள் இருபதும் போய் உதிரத் தாள் நெடுந் திண் சிலை வளைத்த தயரதன் சேய் என்-தன் தனிச் சரண் வானவர்க்கு அரசு கருதும் இடம்-தடம் ஆர் சேண் இடம் கொள் மலர்க் கமலம் சேல் கயல்கள் வாளை செந்நெலொடும் அடுத்து அரிய உதிர்ந்த செழு முத்தம் வாள் நெடுங் கண் கடைசியர்கள் வாரும் அணி நாங்கூர் அரிமேயவிண்ணகரம்-வணங்கு மட நெஞ்சே (6) | |
|
| |
|
|
| 1243 | தீ மனத்தான் கஞ்சனது வஞ்சனையில் திரியும் தேனுகனும் பூதனை-தன் ஆர் உயிரும் செகுத்தான் காமனைத்தான் பயந்த கரு மேனி உடை அம்மான் கருதும் இடம்-பொருது புனல் துறை துறை முத்து உந்தி நா மனத்தால் மந்திரங்கள் நால் வேதம் ஐந்து வேள்வியோடு ஆறு அங்கம் நவின்று கலை பயின்று அங்கு ஆம் மனத்து மறையவர்கள் பயிலும் அணி நாங்கூர் அரிமேயவிண்ணகரம்-வணங்கு மட நெஞ்சே (7) | |
|
| |
|
|
| 1244 | கன்று-அதனால் விளவு எறிந்து கனி உதிர்த்த காளை காமரு சீர் முகில் வண்ணன் காலிகள் முன் காப்பான் குன்று-அதனால் மழை தடுத்து குடம் ஆடு கூத்தன் குலவும் இடம்-கொடி மதிள்கள் மாளிகை கோபுரங்கள் துன்று மணி மண்டபங்கள் சாலைகள் தூ மறையோர் தொக்கு ஈண்டித் தொழுதியொடு மிகப் பயிலும் சோலை அன்று அலர்வாய் மது உண்டு அங்கு அளி முரலும் நாங்கூர் அரிமேயவிண்ணகரம்-வணங்கு மட நெஞ்சே (8) | |
|
| |
|
|
| 1245 | வஞ்சனையால் வந்தவள்-தன் உயிர் உண்டு வாய்த்த தயிர் உண்டு வெண்ணெய் அமுது உண்டு வலி மிக்க கஞ்சன் உயிர்-அது உண்டு இவ் உலகு உண்ட காளை கருதும் இடம்-காவிரி சந்து அகில் கனகம் உந்தி மஞ்சு உலவு பொழிலூடும் வயலூடும் வந்து வளம் கொடுப்ப மா மறையோர் மா மலர்கள் தூவி அஞ்சலித்து அங்கு அரி சரண் என்று இறைஞ்சும் அணி நாங்கூர் அரிமேயவிண்ணகரம்-வணங்கு மட நெஞ்சே (9) | |
|
| |
|
|
| 1246 | சென்று சின விடை ஏழும் பட அடர்ந்து பின்னை செவ்வித் தோள் புணர்ந்து உகந்த திருமால்-தன் கோயில் அன்று அயனும் அரன் சேயும் அனையவர்கள் நாங்கூர் அரிமேயவிண்ணகரம் அமர்ந்த செழுங் குன்றை கன்றி நெடு வேல் வலவன் மங்கையர்-தம் கோமான் கலிகன்றி ஒலி மாலை ஐந்தினொடு மூன்றும் ஒன்றினொடும் ஒன்றும் இவை கற்று வல்லார் உலகத்து உத்தமர்கட்கு உத்தமர் ஆய் உம்பரும் ஆவர்களே (10) | |
|
| |
|
|