இரண்டாம் ஆயிரம் திருமங்கை ஆழ்வார் பெரிய திருமொழி
|
திருநாங்கூர் வண்புருடோத்தமம் |
1257 | கம்ப மா கடல் அடைத்து இலங்கைக்கு மன் கதிர் முடி-அவை பத்தும் அம்பினால் அறுத்து அரசு அவன் தம்பிக்கு அளித்தவன் உறை கோயில்- செம் பலா நிரை செண்பகம் மாதவி சூதகம் வாழைகள் சூழ் வம்பு உலாம் கமுகு ஓங்கிய நாங்கூர ்-வண்புருடோத்தமமே (1) | |
|
|
|
|
1258 | பல்லவம் திகழ் பூங் கடம்பு ஏறி அக் காளியன் பண அரங்கில் ஒல்லை வந்து உறப் பாய்ந்து அரு நடம்செய்த உம்பர்-கோன் உறை கோயில்- நல்ல வெம் தழல் மூன்று நால் வேதம் ஐ வேள்வியோடு ஆறு அங்கம் வல்ல அந்தணர் மல்கிய நாங்கூர் -வண்புருடோத்தமமே (2) | |
|
|
|
|
1259 | அண்டர் ஆனவர் வானவர்-கோனுக்கு என்று அமைத்த சோறு-அது எல்லாம் உண்டு கோ-நிரை மேய்த்து அவை காத்தவன் உகந்து இனிது உறை கோயில்- கொண்டல் ஆர் முழவின் குளிர் வார் பொழில் குல மயில் நடம் ஆட வண்டு -தான் இசை பாடிடும் நாங்கூர் -வண்புருடோத்தமமே (3) | |
|
|
|
|
1260 | பருங் கை யானையின் கொம்பினைப் பறித்து அதன் பாகனைச் சாடிப் புக்கு ஒருங்க மல்லரைக் கொன்று பின் கஞ்சனை உதைத்தவன் உறை கோயில்- கரும்பினூடு உயர் சாலிகள் விளைதரு கழனியில் மலி வாவி மருங்கு எலாம் பொழில் ஓங்கிய நாங்கூர் -வண்புருடோத்தமமே (4) | |
|
|
|
|
1261 | சாடு போய் விழத் தாள் நிமிர்ந்து ஈசன் தன் படையொடும் கிளையோடும் ஓட வாணனை ஆயிரம் தோள்களும் துணித்தவன் உறை கோயில்- ஆடு வான் கொடி அகல் விசும்பு அணவிப் போய்ப் பகலவன் ஒளி மறைக்கும் மாட மாளிகை சூழ்தரு நாங்கூர்- வண்புருடோத்தமமே (5) | |
|
|
|
|
1262 | அங் கையால் அடி மூன்று நீர் ஏற்று அயன் அலர் கொடு தொழுது ஏத்த கங்கை போதரக் கால் நிமிர்த்தருளிய கண்ணன் வந்து உறை கோயில்- கொங்கை கோங்கு-அவை காட்ட வாய் குமுதங்கள் காட்ட மா பதுமங்கள் மங்கைமார் முகம் காட்டிடும் நாங்கூர்- வண்புருடோத்தமமே (6) | |
|
|
|
|
1263 | உளைய ஒண் திறல் பொன்பெயரோன்-தனது உரம் பிளந்து உதிரத்தை அளையும் வெம் சினத்து அரி பரி கீறிய அப்பன் வந்து உறை கோயில்- இளைய மங்கையர் இணை-அடிச் சிலம்பினோடு எழில் கொள் பந்து அடிப்போர் கை வளையின் நின்று ஒலி மல்கிய நாங்கூர்- வண்புருடோத்தமமே (7) | |
|
|
|
|
1264 | வாளை ஆர் தடங் கண் உமை-பங்கன் வன் சாபம் மற்று அது நீங்க மூளை ஆர் சிரத்து ஐயம் முன் அளித்த எம் முகில் வண்ணன் உறை கோயில்- பாளை வான் கமுகு ஊடு உயர் தெங்கின் வண் பழம் விழ வெருவிப் போய் வாளை பாய் தடம் சூழ்தரு நாங்கூர்- வண்புருடோத்தமமே (8) | |
|
|
|
|
1265 | இந்து வார் சடை ஈசனைப் பயந்த நான் முகனைத் தன் எழில் ஆரும் உந்தி மா மலர்மீமிசைப் படைத்தவன் உகந்து இனிது உறை கோயில்- குந்தி வாழையின் கொழுங் கனி நுகர்ந்து தன் குருளையைத் தழுவிப் போய் மந்தி மாம்பணைமேல் வைகும் நாங்கூர்- வண்புருடோத்தமமே (9) | |
|
|
|
|
1266 | மண்ணுளார் புகழ் வேதியர் நாங்கூர் வண்புருடோத்தமத்துள் அண்ணல் சேவடிக்கீழ் அடைந்து உய்ந்தவன் ஆலி மன் அருள் மாரி பண்ணுள் ஆர்தரப் பாடிய பாடல் இப் பத்தும் வல்லார் உலகில் எண் இலாத பேர் இன்பம் உற்று இமையவ ரோடும் கூடுவரே (10) | |
|
|
|
|