இரண்டாம் ஆயிரம் திருமங்கை ஆழ்வார் பெரிய திருமொழி
|
| திருநாங்கூர்ச் செம்பொன்செய்கோயில் |
| 1267 | பேர் அணிந்து உலகத்தவர் தொழுது ஏத்தும் பேர் அருளாளன் எம் பிரானை வார் அணி முலையாள் மலர்-மகளோடு மண்-மகளும் உடன் நிற்ப சீர் அணி மாட நாங்கை நல் நடுவுள் செம்பொன்செய்கோயிலினுள்ளே கார் அணி மேகம் நின்றது ஒப்பானை- கண்டுகொண்டு உய்ந்தொழிந்தேனே (1) | |
|
| |
|
|
| 1268 | பிறப்பொடு மூப்பு ஒன்று இல்லவன்-தன்னை பேதியா இன்ப வெள்ளத்தை இறப்பு எதிர் காலம் கழிவும் ஆனானை ஏழ் இசையின் சுவை-தன்னை சிறப்பு உடை மறையோர் நாங்கை நல் நடுவுள் செம்பொன்செய்கோயிலினுள்ளே மறைப் பெரும் பொருளை வானவர்-கோனை- கண்டு நான் வாழ்ந்தொழிந்தேனே (2) | |
|
| |
|
|
| 1269 | திட விசும்பு எரி நீர் திங்களும் சுடரும் செழு நிலத்து உயிர்களும் மற்றும் படர் பொருள்களும் ஆய் நின்றவன்-தன்னை பங்கயத்து அயன்-அவன் அனைய திட மொழி மறையோர் நாங்கை நல் நடுவுள் செம்பொன்செய்கோயிலினுள்ளே கடல் நிற வண்ணன்-தன்னை-நான் அடியேன் கண்டுகொண்டு உய்ந்தொழிந்தேனே (3) | |
|
| |
|
|
| 1270 | வசை அறு குறள் ஆய் மாவலி வேள்வி மண் அளவிட்டவன்-தன்னை அசைவு அறும் அமரர் அடி-இணை வணங்க அலை கடல் துயின்ற அம்மானை திசைமுகன் அனையோர் நாங்கை நல் நடுவுள் செம்பொன்செய்கோயிலினுள்ளே உயர் மணி மகுடம் சூடி நின்றானை- கண்டுகொண்டு உய்ந்தொழிந்தேனே (4) | |
|
| |
|
|
| 1271 | தீ மனத்து அரக்கர் திறல் அழித்தவனே என்று சென்று அடைந்தவர்-தமக்குத் தாய் மனத்து இரங்கி அருளினைக் கொடுக்கும் தயரதன் மதலையை சயமே தே மலர்ப் பொழில் சூழ் நாங்கை நல் நடுவுள் செம்பொன்செய்கோயிலினுள்ளே காமனைப் பயந்தான்-தன்னை-நான் அடியேன் கண்டுகொண்டு உய்ந்தொழிந்தேனே (5) | |
|
| |
|
|
| 1272 | மல்லை மா முந்நீர் அதர்பட மலையால் அணைசெய்து மகிழ்ந்தவன்-தன்னை கல்லின்மீது இயன்ற கடி மதிள் இலங்கை கலங்க ஓர் வாளி தொட்டானை- செல்வ நான்மறையோர் நாங்கை நல் நடுவுள் செம்பொன்செய்கோயிலினுள்ளே அல்லி மா மலராள்-தன்னொடும் அடியேன் கண்டுகொண்டு அல்லல் தீர்ந்தேனே (6) | |
|
| |
|
|
| 1273 | வெம் சினக் களிறும் வில்லொடு மல்லும் வெகுண்டு இறுத்து அடர்த்தவன்-தன்னை கஞ்சனைக் காய்ந்த காளை அம்மானை கரு முகில் திரு நிறத்தவனை செஞ்சொல் நான்மறையோர் நாங்கை நல் நடுவுள் செம்பொன்செய்கோயிலினுள்ளே அஞ்சனக் குன்றம் நின்றது ஒப்பானை- கண்டுகொண்டு அல்லல் தீர்ந்தேனே (7) | |
|
| |
|
|
| 1274 | அன்றிய வாணன் ஆயிரம் தோளும் துணிய அன்று ஆழி தொட்டானை மின் திகழ் குடுமி வேங்கட மலைமேல் மேவிய வேத நல் விளக்கை தென் திசைத் திலதம் அனையவர் நாங்கைச் செம்பொன்செய்கோயிலினுள்ளே மன்று-அது பொலிய மகிழ்ந்து நின்றானை- வணங்கி நான் வாழ்ந்தொழிந்தேனே (8) | |
|
| |
|
|
| 1275 | களங்கனி வண்ணா கண்ணனே என்-தன் கார் முகிலே என நினைந்திட்டு உளம் கனிந்திருக்கும் அடியவர்-தங்கள் உள்ளத்துள் ஊறிய தேனை தெளிந்த நான்மறையோர் நாங்கை நல் நடுவுள் செம்பொன்செய்கோயிலினுள்ளே வளம் கொள் பேர் இன்பம் மன்னி நின்றானை- வணங்கி நான் வாழ்ந்தொழிந்தேனே (9) | |
|
| |
|
|
| 1276 | தேன் அமர் சோலை நாங்கை நல் நடுவுள் செம்பொன்செய்கோயிலினுள்ளே வானவர்-கோனைக் கண்டமை சொல்லும் மங்கையார் வாள் கலிகன்றி ஊனம் இல் பாடல் ஒன்பதோடு ஒன்றும் ஒழிவு இன்றிக் கற்றுவல்லார்கள் மான வெண் குடைக்கீழ் வையகம் ஆண்டு வானவர் ஆகுவர் மகிழ்ந்தே (10) | |
|
| |
|
|