| இரண்டாம் ஆயிரம் திருமங்கை ஆழ்வார்
 பெரிய திருமொழி
 
 | 
		| திருநாங்கூர்த் திருத்தெற்றியம்பலம் | 
					
			
			
      | | 1277 | மாற்றரசர் மணி முடியும் திறலும் தேசும் மற்று அவர்-தம் காதலிமார் குழையும் தந்தை
 கால் தளையும் உடன் கழல வந்து தோன்றி
 கத நாகம் காத்து அளித்த கண்ணர் கண்டீர்-
 நூற்றிதழ் கொள் அரவிந்தம் நுழைந்த பள்ளத்து
 இளங் கமுகின் முது பாளை பகு வாய் நண்டின்
 சேற்று அளையில் வெண் முத்தம் சிந்தும் நாங்கூர்த்
 திருத்தெற்றியம்பலத்து என் செங் கண் மாலே (1)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 1278 | பொற்றொடித் தோள் மட மகள்- தன் வடிவு கொண்ட பொல்லாத வன் பேய்ச்சி கொங்கை வாங்கி
 பெற்று எடுத்த தாய்போல மடுப்ப ஆரும்
 பேணா நஞ்சு உண்டு உகந்த பிள்ளை கண்டீர்-
 நெல் தொடுத்த மலர் நீலம் நிறைந்த சூழல்
 இருஞ் சிறைய வண்டு ஒலியும் நெடுங் கணார்-தம்
 சிற்றடிமேல் சிலம்பு ஒலியும் மிழற்றும் நாங்கூர்த்
 திருத்தெற்றியம்பலத்து என் செங் கண் மாலே             (2)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 1279 | படல் அடைத்த சிறு குரம்பை நுழைந்து புக்கு பசு வெண்ணெய் பதம் ஆர பண்ணை முற்றும்
 அடல் அடர்த்த வேல் கணார் தோக்கை பற்றி
 அலந்தலைமை செய்து உழலும் ஐயன் கண்டீர்-
 மடல் எடுத்த நெடுந் தெங்கின் பழங்கள் வீழ
 மாங்கனிகள் திரட்டு உருட்டாவரு நீர்ப் பொன்னி
 திடல் எடுத்து மலர் சுமந்து அங்கு இழியும் நாங்கூர்த்
 திருத்தெற்றியம்பலத்து என் செங் கண் மாலே (3)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 1280 | வார் ஆரும் முலை மடவாள் பின்னைக்கு ஆகி வளை மருப்பின் கடுஞ் சினத்து வன் தாள் ஆர்ந்த
 கார் ஆர் திண் விடை அடர்த்து வதுவை ஆண்ட
 கரு முகில்போல் திரு நிறத்து என் கண்ணர் கண்டீர்-
 ஏர் ஆரும் மலர்ப் பொழில்கள் தழுவி எங்கும்
 எழில் மதியைக் கால் தொடர விளங்கு சோதிச்
 சீர் ஆரும் மணி மாடம் திகழும் நாங்கூர்த்
 திருத்தெற்றியம்பலத்து என் செங் கண் மாலே             (4)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 1281 | கலை இலங்கும் அகல் அல்குல் கமலப் பாவை கதிர் முத்த வெண் நகையாள் கருங் கண் ஆய்ச்சி
 முலை இலங்கும் ஒளி மணிப் பூண் வடமும் தேய்ப்ப
 மூவாத வரை நெடுந் தோள் மூர்த்தி கண்டீர்-
 மலை இலங்கு நிரைச் சந்தி மாட வீதி
 ஆடவரை மட மொழியார் முகத்து இரண்டு
 சிலை விலங்கி மனம் சிறை கொண்டு இருக்கும் நாங்கூர்த்
 திருத்தெற்றியம்பலத்து என் செங் கண் மாலே            (5)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 1282 | தான்போலும் ஏன்று எழுந்தான் தரணியாளன் அது கண்டு தரித்திருப்பான் அரக்கர்-தங்கள்
 கோன்போலும் ஏன்று எழுந்தான் குன்றம் அன்ன
 இருபது தோள் உடன் துணித்த ஒருவன் கண்டீர்-
 மான்போலும் மென் நோக்கின் செய்ய வாயார்
 மரகதம்போல் மடக் கிளியைக் கைமேல் கொண்டு
 தேன்போலும் மென் மழலை பயிற்றும் நாங்கூர்த்
 திருத்தெற்றியம்பலத்து என் செங் கண் மாலே             (6)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 1283 | பொங்கு இலங்கு புரி நூலும் தோலும் தாழப் பொல்லாத குறள் உரு ஆய் பொருந்தா வாணன்
 மங்கலம் சேர் மறை வேள்வி-அதனுள் புக்கு
 மண் அகலம் குறை இரந்த மைந்தன் கண்டீர்-
 கொங்கு அலர்ந்த மலர்க் குழலார் கொங்கை தோய்ந்த
 குங்குமத்தின் குழம்பு அளைந்த கோலம்-தன்னால்
 செங் கலங்கல் வெண் மணல்மேல் தவழும் நாங்கூர்த்
 திருத்தெற்றியம்பலத்து என் செங் கண் மாலே             (7)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 1284 | சிலம்பின் இடைச் சிறு பரல்போல் பெரிய மேரு திருக் குளம்பில் கணகணப்ப திரு ஆகாரம்
 குலுங்க நில-மடந்தை-தனை இடந்து புல்கிக்
 கோட்டிடை வைத்தருளிய எம் கோமான் கண்டீர்-
 இலங்கிய நால் மறை அனைத்தும் அங்கம் ஆறும்
 ஏழ் இசையும் கேள்விகளும் எண் திக்கு எங்கும்
 சிலம்பிய நல் பெருஞ் செல்வம் திகழும் நாங்கூர்த்
 திருத்தெற்றியம்பலத்து என் செங் கண் மாலே             (8)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 1285 | ஏழ் உலகும் தாழ் வரையும் எங்கும் மூடி எண் திசையும் மண்டலமும் மண்டி அண்டம்
 மோழை எழுந்து ஆழி மிகும் ஊழி வெள்ளம்
 முன் அகட்டில் ஒடுக்கிய எம் மூர்த்தி கண்டீர்-
 ஊழிதொறும் ஊழிதொறும் உயர்ந்த செல்வத்து
 ஓங்கிய நான்மறை அனைத்தும் தாங்கும் நாவர்
 சேழ் உயர்ந்த மணி மாடம் திகழும் நாங்கூர்த்
 திருத்தெற்றியம்பலத்து என் செங் கண் மாலே             (9)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 1286 | சீர் அணிந்த மணி மாடம் திகழும் நாங்கூர்த் திருத்தெற்றியம்பலத்து என் செங் கண் மாலை
 கூர் அணிந்த வேல் வலவன் ஆலி நாடன்
 கொடி மாட மங்கையர்-கோன் குறையல் ஆளி
 பார் அணிந்த தொல் புகழான் கலியன் சொன்ன
 பாமாலை இவை ஐந்தும் ஐந்தும் வல்லார்
 சீர் அணிந்த உலகத்து மன்னர் ஆகி
 சேண் விசும்பில் வானவர் ஆய்த் திகழ்வர்-தாமே             (10)
 | 
 |  | 
		
			|  |  |  |