இரண்டாம் ஆயிரம் திருமங்கை ஆழ்வார் பெரிய திருமொழி
|
திருநாங்கூர்த் திருமணிக்கூடம் |
1287 | தூம்பு உடைப் பனைக் கை வேழம் துயர் கெடுத்தருளி மன்னும் காம்பு உடைக் குன்றம் ஏந்திக் கடு மழை காத்த எந்தை- பூம் புனல் பொன்னி முற்றும் புகுந்து பொன் வரன்ற எங்கும் தேம் பொழில் கமழும் நாங்கூர்த் திருமணிக்கூடத்தானே (1) |
|
|
|
|
|
1288 | கவ்வை வாள் எயிற்று வன் பேய்க் கதிர் முலை சுவைத்து இலங்கை வவ்விய இடும்பை தீரக் கடுங் கணை துரந்த எந்தை- கொவ்வை வாய் மகளிர் கொங்கைக் குங்குமம் கழுவிப் போந்த தெய்வ நீர் கமழும் நாங்கூர்த் திருமணிக்கூடத்தானே (2) |
|
|
|
|
|
1289 | மாத் தொழில் மடங்கச் செற்று மருது இற நடந்து வன் தாள் சேத் தொழில் சிதைத்துப் பின்னை செவ்வித் தோள் புணர்ந்த எந்தை- நாத் தொழில் மறை வல்லார்கள் நயந்து அறம் பயந்த வண் கைத் தீத் தொழில் பயிலும் நாங்கூர்த் திருமணிக்கூடத்தானே (3) |
|
|
|
|
|
1290 | தாங்கு-அரும் சினத்து வன் தாள் தடக் கை மா மருப்பு வாங்கி பூங் குருந்து ஒசித்து புள் வாய் பிளந்து எருது அடர்த்த எந்தை- மாங்கனி நுகர்ந்த மந்தி வந்து வண்டு இரிய வாழைத் தீங் கனி நுகரும் நாங்கூர்த் திருமணிக்கூடத்தானே (4) |
|
|
|
|
|
1291 | கரு மகள் இலங்கையாட்டி பிலங் கொள் வாய் திறந்து தன்மேல் வரும்-அவள் செவியும் மூக்கும் வாளினால் தடிந்த எந்தை- பெரு மகள் பேதை மங்கை தன்னொடும் பிரிவு இலாத திருமகள் மருவும் நாங்கூர்த் திருமணிக்கூடத்தானே (5) |
|
|
|
|
|
1292 | கெண்டையும் குறளும் புள்ளும் கேழலும் அரியும் மாவும் அண்டமும் சுடரும் அல்லா ஆற்றலும் ஆய எந்தை- ஒண் திறல் தென்னன் ஓட வட அரசு ஓட்டம் கண்ட திண் திறலாளர் நாங்கூர்த் திருமணிக்கூடத்தானே (6) |
|
|
|
|
|
1293 | குன்றமும் வானும் மண்ணும் குளிர் புனல் திங்களோடு நின்ற வெம் சுடரும் அல்லா நிலைகளும் ஆய எந்தை- மன்றமும் வயலும் காவும் மாடமும் மணங் கொண்டு எங்கும் தென்றல் வந்து உலவும் நாங்கூர்த் திருமணிக்கூடத்தானே (7) |
|
|
|
|
|
1294 | சங்கையும் துணிவும் பொய்யும் மெய்யும் இத் தரணி ஓம்பும் பொங்கிய முகிலும் அல்லாப் பொருள்களும் ஆய எந்தை- பங்கயம் உகுத்த தேறல் பருகிய வாளை பாய செங் கயல் உகளும் நாங்கூர்த் திருமணிக்கூடத்தானே (8) |
|
|
|
|
|
1295 | பாவமும் அறமும் வீடும் இன்பமும் துன்பம்-தானும் கோவமும் அருளும் அல்லாக் குணங்களும் ஆய எந்தை- மூவரில் எங்கள் மூர்த்தி இவன் என முனிவரோடு தேவர் வந்து இறைஞ்சும் நாங்கூர்த் திருமணிக்கூடத்தானே (9) |
|
|
|
|
|
1296 | திங்கள் தோய் மாட நாங்கூர்த் திருமணிக்கூடத்தானை மங்கையர் தலைவன் வண் தார்க் கலியன் வாய் ஒலிகள் வல்லார் பொங்கு நீர் உலகம் ஆண்டு பொன்-உலகு ஆண்டு பின்னும் வெம் கதிர்ப் பரிதி வட்டத்து ஊடு போய் விளங்குவாரே (10) |
|
|
|
|
|