இரண்டாம் ஆயிரம் திருமங்கை ஆழ்வார் பெரிய திருமொழி
|
| திருநாங்கூர்த் திருவெள்ளக்குளம் |
| 1307 | கண் ஆர் கடல்போல் திருமேனி கரியாய் நண்ணார் முனை வென்றி கொள்வார் மன்னும் நாங்கூர்த் திண் ஆர் மதிள் சூழ் திருவெள்ளக்குளத்துள் அண்ணா அடியேன் இடரைக் களையாயே (1) | |
|
| |
|
|
| 1308 | கொந்து ஆர் துளவ மலர் கொண்டு அணிவானே நந்தாத பெரும் புகழ் வேதியர் நாங்கூர்ச் செந்தாமரை நீர்த் திருவெள்ளக்குளத்துள் எந்தாய் அடியேன் இடரைக் களையாயே (2) | |
|
| |
|
|
| 1309 | குன்றால் குளிர் மாரி தடுத்து உகந்தானே நன்று ஆய பெரும் புகழ் வேதியர் நாங்கூர்ச் சென்றார் வணங்கும் திருவெள்ளக்குளத்துள் நின்றாய் நெடியாய் அடியேன் இடர் நீக்கே (3) | |
|
| |
|
|
| 1310 | கான் ஆர் கரிக் கொம்பு-அது ஒசித்த களிறே நானாவகை நல்லவர் மன்னிய நாங்கூர்த் தேன் ஆர் பொழில் சூழ் திருவெள்ளக்குளத்துள் ஆனாய் அடியேனுக்கு அருள்புரியாயே (4) | |
|
| |
|
|
| 1311 | வேடு ஆர் திருவேங்கடம் மேய விளக்கே நாடு ஆர் புகழ் வேதியர் மன்னிய நாங்கூர்ச் சேடு ஆர் பொழில் சூழ் திருவெள்ளக்குளத்தாய் பாடாவருவேன் வினை ஆயின பாற்றே (5) | |
|
| |
|
|
| 1312 | கல்லால் கடலை அணை கட்டி உகந்தாய் நல்லார் பலர் வேதியர் மன்னிய நாங்கூர்ச் செல்வா திருவெள்ளக்குளத்து உறைவானே எல்லா இடரும் கெடுமாறு அருளாயே (6) | |
|
| |
|
|
| 1313 | கோலால் நிரை மேய்த்த எம் கோவலர்-கோவே நால் ஆகிய வேதியர் மன்னிய நாங்கூர்ச் சேல் ஆர் வயல் சூழ் திருவெள்ளக்குளத்துள் மாலே என வல் வினை தீர்த்தருளாயே (7) | |
|
| |
|
|
| 1314 | வாராகம்-அது ஆகி இம் மண்ணை இடந்தாய் நாராயணனே நல்ல வேதியர் நாங்கூர்ச் சீர் ஆர் பொழில் சூழ் திருவெள்ளக்குளத்துள் ஆராஅமுதே அடியேற்கு அருளாயே (8) | |
|
| |
|
|
| 1315 | பூ ஆர் திரு மா மகள் புல்கிய மார்பா நா ஆர் புகழ் வேதியர் மன்னிய நாங்கூர்த் தேவா திருவெள்ளக்குளத்து உறைவானே ஆ ஆ அடியான் இவன் என்று அருளாயே (9) | |
|
| |
|
|
| 1316 | நல் அன்பு உடை வேதியர் மன்னிய நாங்கூர்ச் செல்வன் திருவெள்ளக்குளத்து உறைவானை கல்லின் மலி தோள் கலியன் சொன்ன மாலை வல்லர் என வல்லவர் வானவர்-தாமே (10) | |
|
| |
|
|