இரண்டாம் ஆயிரம் திருமங்கை ஆழ்வார் பெரிய திருமொழி
|
| திருப்புள்ளம்பூதங்குடி |
| 1347 | அறிவது அறியான் அனைத்து உலகும் உடையான் என்னை ஆள் உடையான் குறிய மாணி உரு ஆய கூத்தன் மன்னி அமரும் இடம்- நறிய மலர்மேல் சுரும்பு ஆர்க்க எழில் ஆர் மஞ்ஞை நடம் ஆட பொறி கொள் சிறை வண்டு இசை பாடும்- புள்ளம்பூதங்குடி-தானே (1) | |
|
| |
|
|
| 1348 | கள்ளக் குறள் ஆய் மாவலியை வஞ்சித்து உலகம் கைப்படுத்து பொள்ளைக் கரத்த போதகத்தின் துன்பம் தவிர்த்த புனிதன் இடம்- பள்ளச் செறுவில் கயல் உகள பழனக் கழனி-அதனுள் போய புள்ளு பிள்ளைக்கு இரை தேடும்- புள்ளம்பூதங்குடி-தானே (2) |
|
|
| |
|
|
| 1349 | மேவா அரக்கர் தென் இலங்கை வேந்தன் வீயச் சரம் துரந்து மா வாய் பிளந்து மல் அடர்த்து மருதம் சாய்த்த மாலது இடம்- கா ஆர் தெங்கின் பழம் வீழ கயல்கள் பாய குருகு இரியும் பூ ஆர் கழனி எழில் ஆரும்- புள்ளம்பூதங்குடி-தானே (3) | |
|
| |
|
|
| 1350 | வெற்பால் மாரி பழுது ஆக்கி விறல் வாள் அரக்கர் தலைவன்-தன் வற்பு ஆர் திரள் தோள் ஐந் நான்கும் துணித்த வல் வில் இராமன் இடம்- கற்பு ஆர் புரிசைசெய் குன்றம் கவின் ஆர் கூடம் மாளிகைகள் பொற்பு ஆர் மாடம் எழில் ஆரும்- புள்ளம்பூதங்குடி-தானே (4) | |
|
| |
|
|
| 1351 | மை ஆர் தடங் கண் கருங் கூந்தல் ஆய்ச்சி மறைய வைத்த தயிர் நெய் ஆர் பாலோடு அமுது செய்த நேமி அங் கை மாயன் இடம்- செய் ஆர் ஆரல் இரை கருதிச் செங் கால் நாரை சென்று அணையும் பொய்யா நாவின் மறையாளர்- புள்ளம்பூதங்குடி-தானே (5) | |
|
| |
|
|
| 1352 | மின்னின் அன்ன நுண் மருங்குல் வேய் ஏய் தடந் தோள் மெல்லியற்கா மன்னு சினத்த மழ விடைகள் ஏழ் அன்று அடர்த்த மாலது இடம்- மன்னும் முது நீர் அரவிந்த மலர்மேல் வரி வண்டு இசை பாட புன்னை பொன் ஏய் தாது உதிர்க்கும்- புள்ளம்பூதங்குடி-தானே (6) | |
|
| |
|
|
| 1353 | குடையா விலங்கல் கொண்டு ஏந்தி மாரி பழுதா நிரை காத்து சடையான் ஓட அடல் வாணன் தடந் தோள் துணித்த தலைவன் இடம்- குடியா வண்டு கள் உண்ண கோல நீலம் மட்டு உகுக்கும புடை ஆர் கழனி எழில் ஆரும்- புள்ளம்பூதங்குடி-தானே (7) |
|
|
| |
|
|
| 1354 | கறை ஆர் நெடு வேல் மற மன்னர் வீய விசயன் தேர் கடவி இறையான் கையில் நிறையாத முண்டம் நிறைத்த எந்தை இடம்- மறையால் முத்தீ-அவை வளர்க்கும் மன்னு புகழால் வண்மையால் பொறையால் மிக்க அந்தணர் வாழ்- புள்ளம்பூதங்குடி-தானே (8) | |
|
| |
|
|
| 1355 | துன்னி மண்ணும் விண் நாடும் தோன்றாது இருள் ஆய் மூடிய நாள் அன்னம் ஆகி அரு மறைகள் அருளிச்செய்த அமலன் இடம்- மின்னு சோதி நவமணியும் வேயின் முத்தும் சாமரையும் பொன்னும் பொன்னி கொணர்ந்து அலைக்கும்- புள்ளம்பூதங்குடி-தானே (9) | |
|
| |
|
|
| 1356 | கற்றா மறித்து காளியன்-தன் சென்னி நடுங்க நடம்பயின்ற பொன் தாமரையாள்-தன் கேள்வன் புள்ளம்பூதங்குடி-தன்மேல ் கற்றார் பரவும் மங்கையர்-கோன் கார் ஆர் புயல்கைக் கலிகன்றி சொல்- தான் ஈர் ஐந்து இவை பாட சோர நில்லா-துயர்-தாமே (10) | |
|
| |
|
|