இரண்டாம் ஆயிரம் திருமங்கை ஆழ்வார் பெரிய திருமொழி
|
| திருக்கூடலூர் |
| 1357 | தாம் தம் பெருமை அறியார் தூது வேந்தர்க்கு ஆய வேந்தர் ஊர்போல்- காந்தள் விரல் மென் கலை நல் மடவார் கூந்தல் கமழும்-கூடலூரே (1) | |
|
| |
|
|
| 1358 | செறும் திண் திமில் ஏறு உடைய பின்னை பெறும் தண் கோலம் பெற்றார் ஊர்போல்- நறும் தண் தீம் தேன் உண்ட வண்டு குறிஞ்சி பாடும்-கூடலூரே (2) | |
|
| |
|
|
| 1359 | பிள்ளை உருவாய்த் தயிர் உண்டு அடியேன் உள்ளம் புகுந்த ஒருவர் ஊர்போல்- கள்ள நாரை வயலுள் கயல்மீன் கொள்ளை கொள்ளும்-கூடலூரே (3) | |
|
| |
|
|
| 1360 | கூற்று ஏர் உருவின் குறள் ஆய் நிலம் நீர் ஏற்றான் எந்தை பெருமான் ஊர்போல்- சேற்று ஏர் உழவர் கோதைப் போது ஊண் கோல் தேன் முரலும்-கூடலூரே (4) | |
|
| |
|
|
| 1361 | தொண்டர் பரவ சுடர் சென்று அணவ அண்டத்து அமரும் அடிகள் ஊர்போல்- வண்டல் அலையுள் கெண்டை மிளிர கொண்டல் அதிரும்-கூடலூரே (5) | |
|
| |
|
|
| 1362 | தக்கன் வேள்வி தகர்த்த தலைவன் துக்கம் துடைத்த துணைவர் ஊர்போல்- எக்கல் இடு நுண் மணல்மேல் எங்கும் கொக்கின் பழம் வீழ்-கூடலூரே (6) | |
|
| |
|
|
| 1363 | கருந் தண் கடலும் மலையும் உலகும் அருந்தும் அடிகள் அமரும் ஊர்போல-் பெருந் தண் முல்லைப்பிள்ளை ஓடிக் குருந்தம் தழுவும்-கூடலூரே (7) | |
|
| |
|
|
| 1364 | கலை வாழ் பிணையோடு அணையும் திருநீர்- மலை வாழ் எந்தை மருவும் ஊர்போல்- இலை தாழ் தெங்கின் மேல்நின்று இளநீர்க் குலை தாழ் கிடங்கின்-கூடலூரே (8) | |
|
| |
|
|
| 1365 | பெருகு காதல் அடியேன் உள்ளம் உருகப் புகுந்த ஒருவர் ஊர் போல்- அருகு கைதை மலர கெண்டை குருகு என்று அஞ்சும்-கூடலூரே (9) | |
|
| |
|
|
| 1366 | காவிப் பெருநீர் வண்ணன் கண்ணன் மேவித் திகழும் கூடலூர்மேல் கோவைத் தமிழால் கலியன் சொன்ன பாவைப் பாட பாவம் போமே (10) | |
|
| |
|
|