இரண்டாம் ஆயிரம் திருமங்கை ஆழ்வார் பெரிய திருமொழி
|
திருவரங்கம்: 1 |
1377 | உந்திமேல் நான்முகனைப் படைத்தான் உலகு உண்டவன் எந்தை பெம்மான் இமையோர்கள் தாதைக்கு இடம் என்பரால்- சந்தினோடு மணியும் கொழிக்கும் புனல் காவிரி அந்திபோலும் நிறத்து ஆர் வயல் சூழ் தென் அரங்கமே (1) |
|
|
|
|
|
1378 | வையம் உண்டு ஆல் இலை மேவும் மாயன் மணி நீள் முடி பை கொள் நாகத்து அணையான் பயிலும் இடம் என்பரால்- தையல் நல்லார் குழல் மாலையும் மற்று அவர் தட முலைச் செய்ய சாந்தும் கலந்து இழி புனல் சூழ் தென் அரங்கமே (2) | |
|
|
|
|
1379 | பண்டு இவ் வையம் அளப்பான் சென்று மாவலி கையில் நீர கொண்ட ஆழித் தடக் கைக் குறளன் இடம் என்பரால்- வண்டு பாடும் மது வார் புனல் வந்து இழி காவிரி அண்டம் நாறும் பொழில் சூழ்ந்து அழகு ஆர் தென் அரங்கமே (3) | |
|
|
|
|
1380 | விளைத்த வெம் போர் விறல் வாள் அரக்கன் நகர் பாழ்பட வளைத்த வல் வில் தடக்கை-அவனுக்கு இடம் என்பரால்- துளைக் கை யானை மருப்பும் அகிலும் கொணர்ந்து உந்தி முன ்திளைக்கும் செல்வப் புனல் காவிரி சூழ் தென் அரங்கமே (4) | |
|
|
|
|
1381 | வம்பு உலாம் கூந்தல் மண்டோதரி காதலன் வான் புக அம்பு-தன்னால் முனிந்த அழகன் இடம் என்பரால்- உம்பர்-கோனும் உலகு ஏழும் வந்து ஈண்டி வணங்கும் நல ்செம்பொன் ஆரும் மதிள் சூழ்ந்து அழகு ஆர் தென் அரங்கமே (5) | |
|
|
|
|
1382 | கலை உடுத்த அகல் அல்குல் வன் பேய் மகள் தாய் என முலை கொடுத்தாள் உயிர் உண்டவன் வாழ் இடம் என்பரால்- குலை எடுத்த கதலிப் பொழிலூடும் வந்து உந்தி முன் அலை எடுக்கும் புனல் காவிரி சூழ் தென் அரங்கமே (6) | |
|
|
|
|
1383 | கஞ்சன் நெஞ்சும் கடு மல்லரும் சகடமும் காலினால் துஞ்ச வென்ற சுடர் ஆழியான் வாழ் இடம் என்பரால்- மஞ்சு சேர் மாளிகை நீடு அகில் புகையும் மா மறையோர் செஞ்சொல் வேள்விப் புகையும் கமழும் தென் அரங்கமே (7) | |
|
|
|
|
1384 | ஏனம் மீன் ஆமையோடு அரியும் சிறு குறளும் ஆய ் தானும்ஆய தரணித் தலைவன் இடம் என்பரால்- வானும் மண்ணும் நிறையப் புகுந்து ஈண்டி வணங்கும் நல ்தேனும் பாலும் கலந்தன்னவர் சேர் தென் அரங்கமே (8) | |
|
|
|
|
1385 | சேயன் என்றும் மிகப் பெரியன் நுண் நேர்மையன் ஆய இம் மாயை ஆரும் அறியா வகையான் இடம் என்பரால்- வேயின் முத்தும் மணியும் கொணர்ந்து ஆர் புனல் காவிர ஆய பொன் மா மதிள் சூழ்ந்து அழகு ஆர் தென் அரங்கமே (9) | |
|
|
|
|
1386 | அல்லி மாதர் அமரும் திரு மார்வன் அரங்கத்தைக் கல்லின் மன்னு மதிள் மங்கையர்-கோன் கலிகன்றி சொல ்நல் இசை மாலைகள் நால் இரண்டும் இரண்டும் உடன் வல்லவர்-தாம் உலகு ஆண்டு பின் வான் உலகு ஆள்வரே (10) | |
|
|
|
|