இரண்டாம் ஆயிரம் திருமங்கை ஆழ்வார் பெரிய திருமொழி
|
திருவரங்கம்: 3 |
1397 | கைம் மான மழ களிற்றை கடல் கிடந்த கருமணியை மைம் மான மரகதத்தை மறை உரைத்த திருமாலை எம்மானை எனக்கு என்றும் இனியானை பனி காத்த அம்மானை யான் கண்டது-அணி நீர்த் தென் அரங்கத்தே (1) | |
|
|
|
|
1398 | பேரானை குறுங்குடி எம் பெருமானை திருத்தண்கால் ஊரானை கரம்பனூர் உத்தமனை முத்து இலங்கு கார் ஆர் திண் கடல் ஏழும் மலை ஏழ் இவ் உலகு ஏழ் உண்டு ஆராது என்று இருந்தானைக் கண்டது-தென் அரங்கத்ே்\"த (2) | |
|
|
|
|
1399 | ஏன் ஆகி உலகு இடந்து அன்று இரு நிலனும் பெரு விசும்பும ்தான் ஆய பெருமானை தன் அடியார் மனத்து என்றும் தேன் ஆகி அமுது ஆகித் திகழ்ந்தானை மகிழ்ந்து ஒருகால் ஆன்-ஆயன் ஆனானைக் கண்டது-தென் அரங்கத்தே (3) | |
|
|
|
|
1400 | வளர்ந்தவனைத் தடங் கடலுள் வலி உருவில் திரி சகடம் தளர்ந்து உதிர உதைத்தவனை தரியாது அன்று இரணியனைப் பிளந்தவனை பெரு நிலம் ஈர் அடி நீட்டிப் பண்டு ஒருநாள் அளந்தவனை யான் கண்டது-அணி நீர்த் தென் அரங்கத்தே (4) | |
|
|
|
|
1401 | நீர் அழல் ஆய் நெடு நிலன் ஆய் நின்றானை அன்று அரக்கன்- ஊர் அழலால் உண்டானை கண்டார் பின் காணாமே பேர் அழல் ஆய் பெரு விசும்பு ஆய் பின் மறையோர் மந்திரத்தின் ஆர் அழலால் உண்டானைக் கண்டது-தென் அரங்கத்தே (5) | |
|
|
|
|
1402 | தம் சினத்தைத் தவிர்த்து அடைந்தார் தவ நெறியை தரியாது கஞ்சனைக் கொன்று அன்று உலகம் உண்டு உமிழ்ந்த கற்பகத்தை வெம் சினத்த கொடுந் தொழிலோன் விசை உருவை அசைவித்த அம் சிறைப் புள் பாகனை யான் கண்டது-தென் அரங்கத்தே (6) | |
|
|
|
|
1403 | சிந்தனையை தவநெறியை திருமாலை பிரியாது வந்து எனது மனத்து இருந்த வடமலையை வரி வண்டு ஆர் கொந்து அணைந்த பொழில் கோவல் உலகு அளப்பான் அடி நிமிர்த்த அந்தணனை யான் கண்டது-அணி நீர்த் தென் அரங்கத்தே (7) | |
|
|
|
|
1404 | துவரித்த உடையவர்க்கும் தூய்மை இல்லாச் சமணர்க்கும் அவர்கட்கு அங்கு அருள் இல்லா அருளானை தன் அடைந்த எமர்கட்கும் அடியேற்கும் எம்மாற்கும் எம் அனைக்கும் அமரர்க்கும் பிரானாரைக் கண்டது-தென் அரங்கத்தே (8) | |
|
|
|
|
1405 | பொய் வண்ணம் மனத்து அகற்றி புலன் ஐந்தும் செல வைத்து மெய் வண்ணம் நினைந்தவர்க்கு மெய்ந் நின்ற வித்தகனை மை வண்ணம் கரு முகில்போல் திகழ் வண்ணம் மரகதத்தின் அவ் வண்ண வண்ணனை யான் கண்டது-தென் அரங்கத்தே (9) | |
|
|
|
|
1406 | ஆ மருவி நிரை மேய்த்த அணி அரங்கத்து அம்மானைக் காமரு சீர்க் கலிகன்றி ஒலிசெய்த மலி புகழ் சேர் நா மருவு தமிழ்-மாலை நால் இரண்டோடு இரண்டினையும் தாம் மருவி வல்லார்மேல் சாரா தீவினை தாமே (10) | |
|
|
|
|