| இரண்டாம் ஆயிரம் திருமங்கை ஆழ்வார்
 பெரிய திருமொழி
 
 | 
		| திருவிண்ணகர்:1 | 
					
			
			
      | | 1447 | வண்டு உணும் நறு மலர் இண்டை கொண்டு பண்டை நம் வினை கெட என்று அடிமேல்
 தொண்டரும் அமரரும் பணிய நின்று அங்கு
 அண்டமொடு அகல்-இடம் அளந்தவனே
 ஆண்டாய் உனைக் காண்பது ஓர் அருள் எனக்கு அருளுதியேல்
 வேண்டேன் மனைவாழ்க்கையை-விண்ணகர் மேயவனே             (1)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 1448 | அண்ணல் செய்து அலை கடல் கடைந்து அதனுள் கண்ணுதல் நஞ்சு உண்ணக்கண்டவனே
 விண்ணவர் அமுது உண அமுதில் வரும்
 பெண் அமுது உண்ட எம் பெருமானே
 ஆண்டாய் உனைக் காண்பது ஓர் அருள் எனக்கு அருளுதியேல்
 வேண்டேன் மனைவாழ்க்கையை-விண்ணகர் மேயவனே             (2)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 1449 | குழல் நிற வண்ண நின்கூறு கொண்ட தழல் நிற வண்ணன் நண்ணார் நகரம்
 விழ நனி மலை சிலை வளைவு செய்து அங்கு
 அழல் நிற அம்பு-அதுஆனவனே
 ஆண்டாய் உனைக் காண்பது ஓர் அருள் எனக்கு அருளுதியேல்
 வேண்டேன் மனைவாழ்க்கையை-விண்ணகர் மேயவனே             (3)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 1450 | நிலவொடு வெயில் நிலவு இரு சுடரும் உலகமும் உயிர்களும் உண்டு ஒருகால்
 கலை தரு குழவியின் உருவினை ஆய்
 அலை கடல் ஆல் இலை வளர்ந்தவனே
 ஆண்டாய் உனைக் காண்பது ஓர் அருள் எனக்கு அருளுதியேல்
 வேண்டேன் மனைவாழ்க்கையை-விண்ணகர் மேயவனே             (4)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 1451 | பார் எழு கடல் எழு மலை எழும் ஆய் சீர் கெழும் இவ் உலகு ஏழும் எல்லாம்
 ஆர் கெழு வயிற்றினில் அடக்கி நின்று அங்கு
 ஓர் எழுத்து ஓர் உரு ஆனவனே
 ஆண்டாய் உனைக் காண்பது ஓர் அருள் எனக்கு அருளுதியேல்
 வேண்டேன் மனைவாழ்க்கையை-விண்ணகர் மேயவனே             (5)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 1452 | கார் கெழு கடல்களும் மலைகளும் ஆய் ஏர் கெழும் உலகமும் ஆகி முத
 லார்களும் அறிவு-அரும் நிலையினை ஆய்
 சீர் கெழு நான்மறை ஆனவனே
 ஆண்டாய் உனைக் காண்பது ஓர் அருள் எனக்கு அருளுதியேல்
 வேண்டேன் மனைவாழ்க்கையை-விண்ணகர் மேயவனே             (6)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 1453 | உருக்கு உறு நறு நெய் கொண்டு ஆர் அழலில் இருக்கு உறும் அந்தணர் சந்தியின்வாய்
 பெருக்கமொடு அமரர்கள் அமர நல்கும்
 இருக்கினில் இன் இசை ஆனவனே
 ஆண்டாய் உனைக் காண்பது ஓர் அருள் எனக்கு அருளுதியேல்
 வேண்டேன் மனைவாழ்க்கையை-விண்ணகர் மேயவனே             (7)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 1454 | காதல் செய்து இளையவர் கலவி தரும் வேதனை வினை அது வெருவுதல் ஆம்
 ஆதலின் உனது அடி அணுகுவன் நான்
 போது அலர் நெடுமுடிப் புண்ணியனே
 ஆண்டாய் உனைக் காண்பது ஓர் அருள் எனக்கு அருளுதியேல்
 வேண்டேன் மனைவாழ்க்கையை-விண்ணகர் மேயவனே             (8)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 1455 | சாதலும் பிறத்தலும் என்று இவற்றைக் காதல் செய்யாது உன கழல் அடைந்தேன்
 ஓதல் செய் நான்மறை ஆகி உம்பர்
 ஆதல் செய் மூவுரு ஆனவனே
 ஆண்டாய் உனைக் காண்பது ஓர் அருள் எனக்கு அருளுதியேல்
 வேண்டேன் மனைவாழ்க்கையை-விண்ணகர் மேயவனே             (9)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 1456 | பூ மரு பொழில் அணி விண்ணகர் மேல் காமரு சீர்க் கலிகன்றி சொன்ன
 பா மரு தமிழ்-இவை பாட வல்லார்
 வாமனன் அடி-இணை மருவுவரே             (10)
 | 
 |  | 
		
			|  |  |  |