| இரண்டாம் ஆயிரம் திருமங்கை ஆழ்வார்
 பெரிய திருமொழி
 
 | 
		| திருவிண்ணகர்:3 | 
					
			
			
      | | 1467 | துறப்பேன் அல்லேன் இன்பம் துறவாது நின் உருவம் மறப்பேன் அல்லேன் என்றும் மறவாது யான் உலகில்
 பிறப்பேன் ஆக எண்ணேன் பிறவாமை பெற்றது நின்
 திறத்தேன் ஆதன்மையால்-திருவிண்ணகரானே             (1)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 1468 | துறந்தேன் ஆர்வச் செற்றச் சுற்றம் துறந்தமையால் சிறந்தேன் நின் அடிக்கே அடிமை திருமாலே
 அறம்-தான் ஆய்த் திரிவாய் உன்னை என் மனத்து அகத்தே
 திறம்பாமல் கொண்டேன்-திருவிண்ணகரானே             (2)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 1469 | மான் ஏய் நோக்கு நல்லார் மதிபோல் முகத்து உலவும் ஊன் ஏய் கண் வாளிக்கு உடைந்து ஓட்டந்து உன் அடைந்தேன்-
 கோனே குறுங்குடியுள் குழகா திருநறையூர்த்
 தேனே வரு புனல் சூழ் திருவிண்ணகரானே             (3)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 1470 | சாந்து ஏந்து மென் முலையார் தடந் தோள் புணர் இன்ப வெள்ளத்து ஆழ்ந்தேன் அரு நரகத்து அழுந்தும் பயன் படைத்தேன்
 போந்தேன் புண்ணியனே உன்னை எய்தி என் தீவினைகள்
 தீர்ந்தேன் நின் அடைந்தேன்-திருவிண்ணகரானே             (4)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 1471 | மற்று ஓர் தெய்வம் எண்ணேன் உன்னை என் மனத்து வைத்துப் பெற்றேன் பெற்றதுவும் பிறவாமை-எம் பெருமான்
 வற்றா நீள் கடல் சூழ் இலங்கை இராவணனைச்
 செற்றாய் கொற்றவனே திருவிண்ணகரானே             (5)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 1472 | மை ஒண் கருங் கடலும் நிலனும் மணி வரையும் செய்ய சுடர் இரண்டும் இவை ஆய நின்னை நெஞ்சில்
 உய்யும் வகை உணர்ந்தேன் உண்மையால் இனி யாதும் மற்று ஓர்
 தெய்வம் பிறிது அறியேன்-திருவிண்ணகரானே             (6)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 1473 | வேறே கூறுவது உண்டு அடியேன் விரித்து உரைக்கும் ஆறே நீ பணியாது அடை நின் திருமனத்து
 கூறேன் நெஞ்சு-தன்னால் குணம் கொண்டு மற்று ஓர் தெய்வம்
 தேறேன் உன்னை அல்லால்-திருவிண்ணகரானே             (7)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 1474 | முளிந்தீந்த வெம் கடத்து மூரிப் பெருங் களிற்றால் விளிந்தீந்த மா மரம்போல் வீழ்ந்தாரை நினையாதே
 அளிந்து ஓர்ந்த சிந்தை நின்பால் அடியேற்கு வான்-உலகம்
 தெளிந்தே என்று எய்துவது? திருவிண்ணகரானே             (8)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 1475 | சொல்லாய் திரு மார்வா உனக்கு ஆகித் தொண்டு பட்ட நல்லேனை வினைகள் நலியாமை நம்பு-நம்பீ
 மல்லா குடம் ஆடீ மதுசூதனே உலகில்
 செல்லா நல் இசையாய் திருவிண்ணகரானே             (9)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 1476 | தார் ஆர் மலர்க் கமலத் தடம் சூழ்ந்த தண் புறவில் சீர் ஆர் நெடு மறுகின் திருவிண்ணகரானைக்
 கார் ஆர் புயல் தடக் கைக் கலியன் ஒலி மாலை
 ஆர் ஆர் இவை வல்லார் அவர்க்கு அல்லல் நில்லாவே             (10)
 | 
 |  | 
		
			|  |  |  |