இரண்டாம் ஆயிரம் திருமங்கை ஆழ்வார் பெரிய திருமொழி
|
திருநறையூர்:1 |
1477 | கண்ணும் சுழன்று பீளையோடு ஈளை வந்து ஏங்கினால் பண் இன் மொழியார் பைய நடமின் என்னாதமுன் விண்ணும் மலையும் வேதமும் வேள்வியும் ஆயினான் நண்ணும் நறையூர் நாம் தொழுதும் எழு நெஞ்சமே (1) | |
|
|
|
|
1478 | கொங்கு உண் குழலார் கூடி இருந்து சிரித்து நீர் இங்கு என் இருமி எம்பால் வந்தது? என்று இகழாதமுன் திங்கள் எரி கால் செஞ் சுடர் ஆயவன் தேசு உடை நங்கள் நறையூர் நாம் தொழுதும் எழு நெஞ்சமே (2) | |
|
|
|
|
1479 | கொங்கு ஆர் குழலார் கூடி இருந்து சிரித்து எம்மை எம் கோலம் ஐயா என் இனிக் காண்பது? என்னாதமுன் செங்கோல் வலவன் தாள் பணிந்து ஏத்தித் திகழும் ஊர்- நம் கோன் நறையூர்-நாம் தொழுதும் எழு நெஞ்சமே (3) | |
|
|
|
|
1480 | கொம்பும் அரவமும் வல்லியும் வென்ற நுண் ஏர் இடை வம்பு உண் குழலார் வாசல் அடைத்து இகழாதமுன் செம் பொன் கமுகு-இனம்-தான் கனியும் செழும் சோலை சூழ் நம்பன் நறையூர் நாம் தொழுதும் எழு நெஞ்சமே (4) |
|
|
|
|
|
1481 | விலங்கும் கயலும் வேலும் ஒண் காவியும் வென்ற கண் சலம் கொண்ட சொல்லார்-தாங்கள் சிரித்து இகழாத முன் மலங்கும் வராலும் வாளையும் பாய் வயல் சூழ்தரு நலம் கொள் நறையூர் நாம் தொழுதும் எழு நெஞ்சமே (5) | |
|
|
|
|
1482 | மின் நேர் இடையார் வேட்கையை மாற்றியிருந்து என் நீர் இருமி எம்பால் வந்தது? என்று இகழாதமுன் தொல் நீர் இலங்கை மலங்க விலங்கு எரி ஊட்டினான் நல் நீர் நறையூர் நாம் தொழுதும் எழு நெஞ்சமே (6) | |
|
|
|
|
1483 | வில் ஏர் நுதலார் வேட்கையை மாற்றி சிரித்து இவன் பொல்லான் திரைந்தான் என்னும் புறன் -உரை கேட்பதன்முன் சொல் ஆர் மறை நான்கு ஓதி உலகில் நிலாயவர் நல்லார் நறையூர் நாம் தொழுதும் எழு நெஞ்சமே (7) | |
|
|
|
|
1484 | வாள் ஒண் கண் நல்லார் தாங்கள் மதனன் என்றார்-தம்மைக் கேள்மின்கள் ஈளையோடு ஏங்கு கிழவன் என்னாதமுன் வேள்வும் விழவும் வீதியில் என்றும் அறாத ஊர் நாளும் நறையூர் நாம் தொழுதும் எழு நெஞ்சமே (8) |
|
|
|
|
|
1485 | கனி சேர்ந்து இலங்கு நல் வாயவர் காதன்மை விட்டிட குனி சேர்ந்து உடலம் கோலில் தளர்ந்து இளையாதமுன் பனி சேர் விசும்பில் பால்மதி கோள் விடுத்தான் இடம் நனி சேர் நறையூர் நாம் தொழுதும் எழு நெஞ்சமே (9) | |
|
|
|
|
1486 | பிறை சேர் நுதலார் பேணுதல் நம்மை இலாதமுன் நறை சேர் பொழில் சூழ் நறையூர் தொழு நெஞ்சமே என்ற கறை ஆர் நெடு வேல் மங்கையர்-கோன் கலிகன்றி சொல் மறவாது உரைப்பவர் வானவர்க்கு இன் அரசு ஆவரே (10) | |
|
|
|
|