| இரண்டாம் ஆயிரம் திருமங்கை ஆழ்வார்
 பெரிய திருமொழி
 
 | 
		| திருநறையூர்:4 | 
					
			
			
      | | 1507 | ஆளும் பணியும் அடியேனைக் கொண்டான் விண்ட நிசாசரரைத்
 தோளும் தலையும் துணிவு எய்தச்
 சுடு வெம் சிலைவாய்ச் சரம் துரந்தான்-
 வேளும் சேயும் அனையாரும்
 வேல்-கணாரும் பயில் வீதி
 நாளும் விழவின் ஒலி ஓவா
 நறையூர் நின்ற நம்பியே             (1)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 1508 | முனி ஆய் வந்து மூவெழுகால் முடி சேர் மன்னர் உடல் துணிய
 தனி வாய் மழுவின் படை ஆண்ட
 தார் ஆர் தோளான்-வார் புறவில்
 பனி சேர் முல்லை பல் அரும்ப
 பானல் ஒருபால் கண் காட்ட
 நனி சேர் வயலுள் முத்து அலைக்கும்
 நறையூர் நின்ற நம்பியே             (2)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 1509 | தெள் ஆர் கடல்வாய் விட வாயச் சின வாள் அரவில் துயில் அமர்ந்து
 துள்ளா வரு மான் விழ வாளி
 துரந்தான் இரந்தான் மாவலி மண்-
 புள் ஆர் புறவில் பூங் காவி
 பொலன் கொள் மாதர் கண் காட்ட
 நள் ஆர் கமலம் முகம் காட்டும்
 நறையூர் நின்ற நம்பியே             (3)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 1510 | ஒளியா வெண்ணெய் உண்டான் என்று உரலோடு ஆய்ச்சி ஒண் கயிற்றால்
 விளியா ஆர்க்க ஆப்புண்டு
 விம்மி அழுதான்-மென் மலர்மேல்
 களியா வண்டு கள் உண்ண
 காமர் தென்றல் அலர் தூற்ற
 நளிர்வாய் முல்லை முறுவலிக்கும்
 நறையூர் நின்ற நம்பியே             (4)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 1511 | வில் ஆர் விழவில் வட மதுரை விரும்பி விரும்பா மல் அடர்த்து
 கல் ஆர் திரள் தோள் கஞ்சனைக்
 காய்ந்தான் பாய்ந்தான் காளியன்மேல்-
 சொல் ஆர் சுருதி முறை ஓதிச்
 சோமுச் செய்யும் தொழிலினோர்
 நல்லார் மறையோர் பலர் வாழும்
 நறையூர் நின்ற நம்பியே             (5)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 1512 | வள்ளி கொழுநன் முதலாய மக்களோடு முக்கணான்
 வெள்கி ஓட விறல் வாணன்
 வியன் தோள் வனத்தைத் துணித்து உகந்தான்-
 பள்ளி கமலத்திடைப் பட்ட
 பகு வாய் அலவன் முகம் நோக்கி
 நள்ளி ஊடும் வயல் சூழ்ந்த
 நறையூர் நின்ற நம்பியே             (6)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 1513 | மிடையா வந்த வேல் மன்னர் வீய விசயன் தேர் கடவி
 குடையா வரை ஒன்று எடுத்து ஆயர்
 -கோ ஆய் நின்றான் கூர் ஆழிப்
 படையான்-வேதம் நான்கு ஐந்து
 வேள்வி அங்கம் ஆறு இசை ஏழ்
 நடையா வல்ல அந்தணர் வாழ்
 நறையூர் நின்ற நம்பியே             (7)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 1514 | பந்து ஆர் விரலாள் பாஞ்சாலி கூந்தல் முடிக்க பாரதத்து
 கந்து ஆர் களிற்றுக் கழல் மன்னர்
 கலங்க சங்கம் வாய் வைத்தான்-
 செந்தாமரைமேல் அயனோடு
 சிவனும் அனைய பெருமையோர்
 நந்தா வண் கை மறையோர் வாழ்
 நறையூர் நின்ற நம்பியே             (8)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 1515 | ஆறும் பிறையும் அரவமும் அடம்பும் சடைமேல் அணிந்து உடலம்
 நீறும் பூசி ஏறு ஊரும்
 இறையோன் சென்று குறை இரப்ப
 மாறு ஒன்று இல்லா வாச நீர்
 வரை மார்வு அகலத்து அளித்து உகந்தான்-
 நாறும் பொழில் சூழ்ந்து அழகு ஆய
 நறையூர் நின்ற நம்பியே             (9)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 1516 | நன்மை உடைய மறையோர் வாழ் நறையூர் நின்ற நம்பியைக்
 கன்னி மதிள் சூழ் வயல் மங்கைக்
 கலியன் ஒலிசெய் தமிழ்-மாலை
 பன்னி உலகில் பாடுவார்
 பாடு சாரா பழ வினைகள்
 மன்னி உலகம் ஆண்டு போய்
 வானோர் வணங்க வாழ்வாரே             (10)
 | 
 |  | 
		
			|  |  |  |