இரண்டாம் ஆயிரம் திருமங்கை ஆழ்வார் பெரிய திருமொழி
|
| திருநறையூர்:4 |
| 1507 | ஆளும் பணியும் அடியேனைக் கொண்டான் விண்ட நிசாசரரைத் தோளும் தலையும் துணிவு எய்தச் சுடு வெம் சிலைவாய்ச் சரம் துரந்தான்- வேளும் சேயும் அனையாரும் வேல்-கணாரும் பயில் வீதி நாளும் விழவின் ஒலி ஓவா நறையூர் நின்ற நம்பியே (1) | |
|
| |
|
|
| 1508 | முனி ஆய் வந்து மூவெழுகால் முடி சேர் மன்னர் உடல் துணிய தனி வாய் மழுவின் படை ஆண்ட தார் ஆர் தோளான்-வார் புறவில் பனி சேர் முல்லை பல் அரும்ப பானல் ஒருபால் கண் காட்ட நனி சேர் வயலுள் முத்து அலைக்கும் நறையூர் நின்ற நம்பியே (2) | |
|
| |
|
|
| 1509 | தெள் ஆர் கடல்வாய் விட வாயச் சின வாள் அரவில் துயில் அமர்ந்து துள்ளா வரு மான் விழ வாளி துரந்தான் இரந்தான் மாவலி மண்- புள் ஆர் புறவில் பூங் காவி பொலன் கொள் மாதர் கண் காட்ட நள் ஆர் கமலம் முகம் காட்டும் நறையூர் நின்ற நம்பியே (3) | |
|
| |
|
|
| 1510 | ஒளியா வெண்ணெய் உண்டான் என்று உரலோடு ஆய்ச்சி ஒண் கயிற்றால் விளியா ஆர்க்க ஆப்புண்டு விம்மி அழுதான்-மென் மலர்மேல் களியா வண்டு கள் உண்ண காமர் தென்றல் அலர் தூற்ற நளிர்வாய் முல்லை முறுவலிக்கும் நறையூர் நின்ற நம்பியே (4) | |
|
| |
|
|
| 1511 | வில் ஆர் விழவில் வட மதுரை விரும்பி விரும்பா மல் அடர்த்து கல் ஆர் திரள் தோள் கஞ்சனைக் காய்ந்தான் பாய்ந்தான் காளியன்மேல்- சொல் ஆர் சுருதி முறை ஓதிச் சோமுச் செய்யும் தொழிலினோர் நல்லார் மறையோர் பலர் வாழும் நறையூர் நின்ற நம்பியே (5) | |
|
| |
|
|
| 1512 | வள்ளி கொழுநன் முதலாய மக்களோடு முக்கணான் வெள்கி ஓட விறல் வாணன் வியன் தோள் வனத்தைத் துணித்து உகந்தான்- பள்ளி கமலத்திடைப் பட்ட பகு வாய் அலவன் முகம் நோக்கி நள்ளி ஊடும் வயல் சூழ்ந்த நறையூர் நின்ற நம்பியே (6) | |
|
| |
|
|
| 1513 | மிடையா வந்த வேல் மன்னர் வீய விசயன் தேர் கடவி குடையா வரை ஒன்று எடுத்து ஆயர் -கோ ஆய் நின்றான் கூர் ஆழிப் படையான்-வேதம் நான்கு ஐந்து வேள்வி அங்கம் ஆறு இசை ஏழ் நடையா வல்ல அந்தணர் வாழ் நறையூர் நின்ற நம்பியே (7) | |
|
| |
|
|
| 1514 | பந்து ஆர் விரலாள் பாஞ்சாலி கூந்தல் முடிக்க பாரதத்து கந்து ஆர் களிற்றுக் கழல் மன்னர் கலங்க சங்கம் வாய் வைத்தான்- செந்தாமரைமேல் அயனோடு சிவனும் அனைய பெருமையோர் நந்தா வண் கை மறையோர் வாழ் நறையூர் நின்ற நம்பியே (8) | |
|
| |
|
|
| 1515 | ஆறும் பிறையும் அரவமும் அடம்பும் சடைமேல் அணிந்து உடலம் நீறும் பூசி ஏறு ஊரும் இறையோன் சென்று குறை இரப்ப மாறு ஒன்று இல்லா வாச நீர் வரை மார்வு அகலத்து அளித்து உகந்தான்- நாறும் பொழில் சூழ்ந்து அழகு ஆய நறையூர் நின்ற நம்பியே (9) | |
|
| |
|
|
| 1516 | நன்மை உடைய மறையோர் வாழ் நறையூர் நின்ற நம்பியைக் கன்னி மதிள் சூழ் வயல் மங்கைக் கலியன் ஒலிசெய் தமிழ்-மாலை பன்னி உலகில் பாடுவார் பாடு சாரா பழ வினைகள் மன்னி உலகம் ஆண்டு போய் வானோர் வணங்க வாழ்வாரே (10) | |
|
| |
|
|