| இரண்டாம் ஆயிரம் திருமங்கை ஆழ்வார்
 பெரிய திருமொழி
 
 | 
		| திருநறையூர்:5 | 
					
			
			
      | | 1517 | மான் கொண்ட தோல் மார்வின் மாணி ஆய் மாவலி மண் தான் கொண்டு தாளால் அளந்த பெருமானை
 தேன் கொண்ட சாரல் திருவேங்கடத்தானை
 நான் சென்று நாடி நறையூரில் கண்டேனே             (1)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 1518 | முந்நீரை முன் நாள் கடைந்தானை மூழ்த்த நாள் அந் நீரை மீன் ஆய் அமைத்த பெருமானை
 தென் ஆலி மேய திருமாலை எம்மானை
 நல் நீர் சூழ் நறையூரில் கண்டேனே             (2)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 1519 | தூ வாய புள் ஊர்ந்து வந்து துறை வேழம் மூவாமை நல்கி முதலை துணித்தானை
 தேவாதிதேவனை செங் கமலக் கண்ணானை
 நாவாய் உளானை நறையூரில் கண்டேனே             (3)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 1520 | ஓடா அரி ஆய் இரணியனை ஊன் இடந்த சேடு ஆர் பொழில் சூழ் திருநீர்மலையானை
 வாடா மலர்த் துழாய் மாலை முடியானை
 நாள்தோறும் நாடி நறையூரில் கண்டேனே             (4)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 1521 | கல் ஆர் மதிள் சூழ் கதி இலங்கைக் கார் அரக்கன் வல் ஆகம் கீள வரி வெம் சரம் துரந்த
 வில்லானை செல்வ விபீடணற்கு வேறாக
 நல்லானை நாடி நறையூரில் கண்டேனே             (5)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 1522 | உம்பர்-உலகோடு உயிர் எல்லாம் உந்தியில் வம்பு மலர்மேல் படைத்தானை மாயோனை
 அம்பு அன்ன கண்ணாள் அசோதை-தன் சிங்கத்தை
 நம்பனை நாடி நறையூரில் கண்டேனே             (6)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 1523 | கட்டு ஏறு நீள் சோலைக் காண்டவத்தைத் தீ மூட்டி விட்டானை மெய்யம் அமர்ந்த பெருமானை
 மட்டு ஏறு கற்பகத்தை மாதர்க்கு ஆய் வண் துவரை
 நட்டானை நாடி நறையூரில் கண்டேனே             (7)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 1524 | மண்ணின் மீ பாரம் கெடுப்பான் மற மன்னர் பண்ணின்மேல் வந்த படை எல்லாம் பாரதத்து
 விண்ணின் மீது ஏற விசயன் தேர் ஊர்ந்தானை
 நண்ணி நான் நாடி நறையூரில் கண்டேனே             (8)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 1525 | பொங்கு ஏறு நீள் சோதிப் பொன் ஆழி-தன்னோடும் சங்கு ஏறு கோலத் தடக் கைப் பெருமானை
 கொங்கு ஏறு சோலைக் குடந்தைக் கிடந்தானை
 நம் கோனை நாடி நறையூரில் கண்டேனே             (9)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 1526 | மன்னும் மதுரை வசுதேவர் வாழ் முதலை நல் நறையூர் நின்ற நம்பியை வம்பு அவிழ் தார்
 கல் நவிலும் தோளான் கலியன் ஒலி வல்லார்
 பொன்-உலகில் வானவர்க்குப் புத்தேளிர் ஆகுவரே             (10)
 | 
 |  | 
		
			|  |  |  |