இரண்டாம் ஆயிரம் திருமங்கை ஆழ்வார் பெரிய திருமொழி
|
| திருநறையூர்:5 |
| 1517 | மான் கொண்ட தோல் மார்வின் மாணி ஆய் மாவலி மண் தான் கொண்டு தாளால் அளந்த பெருமானை தேன் கொண்ட சாரல் திருவேங்கடத்தானை நான் சென்று நாடி நறையூரில் கண்டேனே (1) | |
|
| |
|
|
| 1518 | முந்நீரை முன் நாள் கடைந்தானை மூழ்த்த நாள் அந் நீரை மீன் ஆய் அமைத்த பெருமானை தென் ஆலி மேய திருமாலை எம்மானை நல் நீர் சூழ் நறையூரில் கண்டேனே (2) |
|
|
| |
|
|
| 1519 | தூ வாய புள் ஊர்ந்து வந்து துறை வேழம் மூவாமை நல்கி முதலை துணித்தானை தேவாதிதேவனை செங் கமலக் கண்ணானை நாவாய் உளானை நறையூரில் கண்டேனே (3) | |
|
| |
|
|
| 1520 | ஓடா அரி ஆய் இரணியனை ஊன் இடந்த சேடு ஆர் பொழில் சூழ் திருநீர்மலையானை வாடா மலர்த் துழாய் மாலை முடியானை நாள்தோறும் நாடி நறையூரில் கண்டேனே (4) | |
|
| |
|
|
| 1521 | கல் ஆர் மதிள் சூழ் கதி இலங்கைக் கார் அரக்கன் வல் ஆகம் கீள வரி வெம் சரம் துரந்த வில்லானை செல்வ விபீடணற்கு வேறாக நல்லானை நாடி நறையூரில் கண்டேனே (5) | |
|
| |
|
|
| 1522 | உம்பர்-உலகோடு உயிர் எல்லாம் உந்தியில் வம்பு மலர்மேல் படைத்தானை மாயோனை அம்பு அன்ன கண்ணாள் அசோதை-தன் சிங்கத்தை நம்பனை நாடி நறையூரில் கண்டேனே (6) | |
|
| |
|
|
| 1523 | கட்டு ஏறு நீள் சோலைக் காண்டவத்தைத் தீ மூட்டி விட்டானை மெய்யம் அமர்ந்த பெருமானை மட்டு ஏறு கற்பகத்தை மாதர்க்கு ஆய் வண் துவரை நட்டானை நாடி நறையூரில் கண்டேனே (7) | |
|
| |
|
|
| 1524 | மண்ணின் மீ பாரம் கெடுப்பான் மற மன்னர் பண்ணின்மேல் வந்த படை எல்லாம் பாரதத்து விண்ணின் மீது ஏற விசயன் தேர் ஊர்ந்தானை நண்ணி நான் நாடி நறையூரில் கண்டேனே (8) | |
|
| |
|
|
| 1525 | பொங்கு ஏறு நீள் சோதிப் பொன் ஆழி-தன்னோடும் சங்கு ஏறு கோலத் தடக் கைப் பெருமானை கொங்கு ஏறு சோலைக் குடந்தைக் கிடந்தானை நம் கோனை நாடி நறையூரில் கண்டேனே (9) | |
|
| |
|
|
| 1526 | மன்னும் மதுரை வசுதேவர் வாழ் முதலை நல் நறையூர் நின்ற நம்பியை வம்பு அவிழ் தார் கல் நவிலும் தோளான் கலியன் ஒலி வல்லார் பொன்-உலகில் வானவர்க்குப் புத்தேளிர் ஆகுவரே (10) |
|
|
| |
|
|