இரண்டாம் ஆயிரம் திருமங்கை ஆழ்வார் பெரிய திருமொழி
|
| திருநறையூர்:6 |
| 1527 | பெடை அடர்த்த மட அன்னம் பிரியாது மலர்க் கமல மடல் எடுத்து மது நுகரும் வயல் உடுத்த திருநறையூர்- முடை அடர்த்த சிரம் ஏந்தி மூவுலகும் பலி திரிவோன் இடர் கெடுத்த திருவாளன் இணை-அடியே அடை நெஞ்சே (1) | |
|
| |
|
|
| 1528 | கழி ஆரும் கன சங்கம் கலந்து எங்கும் நிறைந்து ஏறி வழி ஆர முத்து ஈன்று வளம் கொடுக்கும் திருநறையூர்- பழி ஆரும் விறல் அரக்கன் பரு முடிகள்-அவை சிதற அழல் ஆரும் சரம் துரந்தான் அடி-இணையே அடை நெஞ்சே (2) | |
|
| |
|
|
| 1529 | சுளை கொண்ட பலங்கனிகள் தேன் பாய கதலிகளின் திளை கொண்ட பழம் கெழுமித் திகழ் சோலைத் திருநறையூர்- வளை கொண்ட வண்ணத்தன் பின் தோன்றல் மூவுலகோடு அளை வெண்ணெய் உண்டான்-தன்-அடி-இணையே அடை நெஞ்சே (3) | |
|
| |
|
|
| 1530 | துன்று ஒளித் துகில் படலம் துன்னி எங்கும் மாளிகைமேல் நின்று ஆர வான் மூடும் நீள் செல்வத் திருநறையூர்- மன்று ஆரக் குடம் ஆடி வரை எடுத்து மழை தடுத்த குன்று ஆரும் திரள் தோளன் குரை கழலே அடை நெஞ்சே (4) | |
|
| |
|
|
| 1531 | அகில் குறடும் சந்தனமும் அம் பொன்னும் அணி முத்தும் மிகக் கொணர்ந்து திரை உந்தும் வியன் பொன்னித் திருநறையூர்- பகல் கரந்த சுடர் ஆழிப் படையான் இவ் உலகு ஏழும் புகக் கரந்த திரு வயிற்றன் பொன்-அடியே அடை நெஞ்சே (5) | |
|
| |
|
|
| 1532 | பொன் முத்தும் அரி உகிரும் புழைக் கை மா கரிக் கோடும் மின்னத் தண் திரை உந்தும் வியன் பொன்னித் திருநறையூர்- மின் ஒத்த நுண் மருங்குல் மெல்-இயலைத் திரு மார்வில் மன்ன தான் வைத்து உகந்தான் மலர் அடியே அடை நெஞ்சே (6) | |
|
| |
|
|
| 1533 | சீர் தழைத்த கதிர்ச் செந்நெல் செங் கமலத்து இடை இடையில் பார் தழைத்துக் கரும்பு ஓங்கிப் பயன் விளைக்கும் திருநறையூர்- கார் தழைத்த திரு உருவன் கண்ண-பிரான் விண்ணவர்-கோன் தார் தழைத்த துழாய் முடியன் தளிர் அடியே அடை நெஞ்சே (7) | |
|
| |
|
|
| 1534 | குலை ஆர்ந்த பழுக் காயும் பசுங் காயும் பாளை முத்தும் தலை ஆர்ந்த இளங் கமுகின் தடஞ் சோலைத் திருநறையூர்- மலை ஆர்ந்த கோலம் சேர் மணி மாடம் மிக மன்னி நிலை ஆர நின்றான்-தன் நீள் கழலே அடை நெஞ்சே (8) | |
|
| |
|
|
| 1535 | மறை ஆரும் பெரு வேள்விக் கொழும் புகை போய் வளர்ந்து எங்கும் நிறை ஆர வான் மூடும் நீள் செல்வத் திருநறையூர்- பிறை ஆரும் சடையானும் பிரமனும் முன் தொழுது ஏத்த இறை ஆகி நின்றான் தன் இணை-அடியே அடை நெஞ்சே (9) |
|
|
| |
|
|
| 1536 | திண் களக மதிள் புடை சூழ் திருநறையூர் நின்றானை வண் களகம் நிலவு எறிக்கும் வயல் மங்கை நகராளன் பண்கள் அகம் பயின்ற சீர்ப் பாடல்-இவை பத்தும் வல்லார் விண்கள் அகத்து இமையவர் ஆய் வீற்றிருந்து வாழ்வாரே (10) | |
|
| |
|
|