| இரண்டாம் ஆயிரம் திருமங்கை ஆழ்வார்
 பெரிய திருமொழி
 
 | 
		| திருநறையூர்:7 | 
					
			
			
      | | 1537 | கிடந்த நம்பி குடந்தை மேவி கேழல் ஆய் உலகை இடந்த நம்பி எங்கள் நம்பி எறிஞர் அரண் அழியக்
 கடந்த நம்பி கடி ஆர் இலங்கை உலகை ஈர் அடியால்
 நடந்த நம்பி நாமம் சொல்லில்-நமோ நாராயணமே             (1)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 1538 | விடம்-தான் உடைய அரவம் வெருவ செருவில் முன நாள் முன் தடந் தாமரை நீர்ப் பொய்கை புக்கு மிக்க தாள் ஆளன்
 இடந்தான் வையம் கேழல் ஆகி உலகை ஈர் அடியால்
 நடந்தானுடைய நாமம் சொல்லில்-நமோ நாராயணமே             (2)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 1539 | பூணாது அனலும் தறுகண் வேழம் மறுக வளை மருப்பைப் பேணான் வாங்கி அமுதம் கொண்ட பெருமான் திரு மார்வன்
 பாணா வண்டு முரலும் கூந்தல் ஆய்ச்சி தயிர் வெண்ணெய்
 நாணாது உண்டான் நாமம் சொல்லில்-நமோ நாராயணமே             (3)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 1540 | கல் ஆர் மதிள் சூழ் கச்சி நகருள் நச்சி பாடகத்துள் எல்லா உலகும் வணங்க இருந்த அம்மான் இலங்கைக்கோன்
 வல் ஆள் ஆகம் வில்லால் முனிந்த எந்தை விபீடணற்கு
 நல்லானுடைய நாமம் சொல்லில்-நமோ நாராயணமே             (4)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 1541 | குடையா வரையால் நிரை முன் காத்த பெருமான் மருவாத விடை-தான் ஏழும் வென்றான் கோவல் நின்றான் தென் இலங்கை
 அடையா அரக்கர் வீயப் பொருது மேவி வெம் கூற்றம்
 நடையா உண்ணக் கண்டான் நாமம்-நமோ நாராயணமே             (5)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 1542 | கான எண்கும் குரங்கும் முசுவும் படையா அடல் அரக்கர் மானம் அழித்து நின்ற வென்றி அம்மான் எனக்கு என்றும்
 தேனும் பாலும் அமுதும் ஆய திருமால் திருநாமம்-
 நானும் சொன்னேன் நமரும் உரைமின்-நமோ நாராயணமே             (6)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 1543 | நின்ற வரையும் கிடந்த கடலும் திசையும் இரு நிலனும் ஒன்றும் ஒழியா வண்ணம் எண்ணி நின்ற அம்மானார்
 குன்று குடையா எடுத்த அடிகளுடைய திருநாமம்-
 நன்று காண்மின் தொண்டீர் சொன்னேன்-நமோ நாராயணமே            (7)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 1544 | கடுங் கால் மாரி கல்லே பொழிய அல்லே எமக்கு என்று படுங்கால் நீயே சரண் என்று ஆயர் அஞ்ச அஞ்சாமுன்
 நெடுங்கால் குன்றம் குடை ஒன்று ஏந்தி நிரையைச் சிரமத்தால்
 நடுங்கா வண்ணம் காத்தான் நாமம்-நமோ நாராயணமே             (8)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 1545 | பொங்கு புணரிக் கடல் சூழ் ஆடை நில மா மகள் மலர் மா மங்கை பிரமன் சிவன் இந்திரன் வானவர் நாயகர் ஆய
 எங்கள் அடிகள் இமையோர் தலைவருடைய திருநாமம்-
 நங்கள் வினைகள் தவிர உரைமின்-நமோ நாராயணமே             (9)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 1546 | வாவித் தடம் சூழ் மணி முத்தாற்று நறையூர் நெடுமாலை நாவில் பரவி நெஞ்சில் கொண்டு நம்பி நாமத்தை
 காவித் தடங் கண் மடவார் கேள்வன் கலியன் ஒலி மாலை
 மேவிச் சொல்ல வல்லார் பாவம் நில்லா வீயுமே             (10)
 | 
 |  | 
		
			|  |  |  |