இரண்டாம் ஆயிரம் திருமங்கை ஆழ்வார் பெரிய திருமொழி
|
| திருநறையூர்:9 |
| 1557 | புள் ஆய் ஏனமும் ஆய் புகுந்து என்னை உள்ளம் கொண்ட கள்வா என்றலும் என் கண்கள் நீர்கள் சோர்தருமால் உள்ளே நின்று உருகி நெஞ்சம் உன்னை உள்ளியக்கால் நள்ளேன் உன்னை அல்லால் நறையூர் நின்ற நம்பீயோ (1) | |
|
| |
|
|
| 1558 | ஓடா ஆள் அரியின் உரு ஆய் மருவி என்-தன் மாடே வந்து அடியேன் மனம் கொள்ள வல்ல மைந்தா பாடேன் தொண்டர்-தம்மைக் கவிதைப் பனுவல்கொண்டு நாடேன் உன்னை அல்லால் நறையூர் நின்ற நம்பீயோ (2) | |
|
| |
|
|
| 1559 | எம்மானும் எம் அனையும் என்னைப் பெற்று ஒழிந்ததற்பின் அம்மானும் அம்மனையும் அடியேனுக்கு ஆகி நின்ற நல் மான ஒண் சுடரே நறையூர் நின்ற நம்பீ உன் மைம் மான வண்ணம் அல்லால் மகிழ்ந்து ஏத்தமாட்டேனே (3) | |
|
| |
|
|
| 1560 | சிறியாய் ஓர் பிள்ளையும் ஆய் உலகு உண்டு ஓர் ஆல் இலைமேல் உறைவாய் என் நெஞ்சின் உள்ளே உறைவாய் உறைந்தது-தான் அறியாது இருந்தறியேன் அடியேன்-அணி வண்டு கிண்டும் நறை வாரும் பொழில் சூழ் நறையூர் நின்ற நம்பீயோ (4) | |
|
| |
|
|
| 1561 | நீண்டாயை வானவர்கள் நினைந்து ஏத்திக் காண்பு அரிதால் ஆண்டாய் என்று ஆதரிக்கப்படுவாய்க்கு நான் அடிமை பூண்டேன் என் நெஞ்சின் உள்ளே புகுந்தாயைப் போகல் ஒட்டேன் நான்-தான் உனக்கு ஒழிந்தேன்-நறையூர் நின்ற நம்பீயோ (5) | |
|
| |
|
|
| 1562 | எம் தாதை தாதை அப்பால் எழுவர் பழ அடிமை வந்தார் என் நெஞ்சின் உள்ளே வந்தாயைப் போகல் ஒட்டேன் அந்தோ!-என் ஆர் உயிரே அரசே அருள் எனக்கு நந்தாமல் தந்த எந்தாய் நறையூர் நின்ற நம்பீயோ (6) | |
|
| |
|
|
| 1563 | மன் அஞ்ச ஆயிரம் தோள் மழுவில் துணித்த மைந்தா என் நெஞ்சத்துள் இருந்து இங்கு இனிப் போய்ப் பிறர் ஒருவர் வல் நெஞ்சம் புக்கு இருக்க ஒட்டேன் வளைத்து வைத்தேன்- நல் நெஞ்ச அன்னம் மன்னும் நறையூர் நின்ற நம்பீயோ (7) | |
|
| |
|
|
| 1564 | எப்போதும் பொன் மலர் இட்டு இமையோர் தொழுது தங்கள் கைப்போது கொண்டு இறைஞ்சி கழல்மேல் வணங்க நின்றாய் இப்போது என் நெஞ்சின் உள்ளே புகுந்தாயைப் போகல் ஒட்டேன்- நல் போது வண்டு கிண்டும் நறையூர் நின்ற நம்பீயோ (8) | |
|
| |
|
|
| 1565 | ஊன் நேர் ஆக்கை-தன்னை உழந்து ஓம்பி வைத்தமையால் யான் ஆய் என்-தனக்கு ஆய் அடியேன் மனம் புகுந்த தேனே தீங் கரும்பின் தெளிவே என் சிந்தை-தன்னால் நானே எய்தப் பெற்றேன்-நறையூர் நின்ற நம்பீயோ (9) | |
|
| |
|
|
| 1566 | நல் நீர் வயல் புடை சூழ் நறையூர் நின்ற நம்பியைக் கல் நீர மால் வரைத் தோள் கலிகன்றி மங்கையர்-கோன் சொல் நீர சொல்-மாலை சொல்லுவார்கள் சூழ் விசும்பில் நல் நீர்மையால் மகிழ்ந்து நெடுங் காலம் வாழ்வாரே (10) | |
|
| |
|
|