| இரண்டாம் ஆயிரம் திருமங்கை ஆழ்வார்
 பெரிய திருமொழி
 
 | 
		| திருவழுந்தூர்: 3 | 
					
			
			
      | | 1607 | திறல் முருகன் அனையார் தென் அழுந்தையில் மன்னி நின்ற அற முதல்வன்-அவனை அணி ஆலியர்-கோன் மருவார்
 கறை நெடு வேல் வலவன் கலிகன்றி சொல் ஐ இரண்டும்
 முறை வழுவாமை வல்லார் முழுது ஆள்வர்-வான்-உலகே             (10)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 1608 | திருவுக்கும் திரு ஆகிய செல்வா தெய்வத்துக்கு அரசே செய்ய கண்ணா
 உருவச் செஞ் சுடர் ஆழி வல்லானே
 உலகு உண்ட ஒருவா திரு மார்பா
 ஒருவற்கு ஆற்றி உய்யும் வகை இன்றால்
 உடன் நின்று ஐவர் என்னுள் புகுந்து ஒழியாது
 அருவித் தின்றிட அஞ்சி நின் அடைந்தேன்
 அழுந்தூர் மேல் திசை நின்ற அம்மானே             (1)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 1609 | பந்து ஆர் மெல் விரல் நல் வளைத் தோளி பாவை பூ-மகள்-தன்னொடும் உடனே
 வந்தாய் என் மனத்தே மன்னி நின்றாய்
 மால் வண்ணா மழைபோல் ஒளி வண்ணா
 சந்தோகா பௌழியா தைத்திரியா
 சாம வேதியனே நெடுமாலே
 அந்தோ நின் அடி அன்றி மற்று அறியேன்-
 அழுந்தூர் மேல் திசை நின்ற அம்மானே            (2)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 1610 | நெய் ஆர் ஆழியும் சங்கமும் ஏந்தும் நீண்ட தோள் உடையாய் அடியேனைச்
 செய்யாத உலகத்திடைச் செய்தாய்
 சிறுமைக்கும் பெருமைக்கும் உள் புகுந்து
 பொய்யால் ஐவர் என் மெய் குடி ஏறிப்
 போற்றி வாழ்வதற்கு அஞ்சி நின் அடைந்தேன்
 ஐயா நின் அடி அன்றி மற்று அறியேன்-
 அழுந்தூர் மேல் திசை நின்ற அம்மானே             (3)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 1611 | பரனே பஞ்சவன் பூழியன் சோழன் பார் மன்னர் மன்னர்-தாம் பணிந்து ஏத்தும்
 வரனே மாதவனே மதுசூதா
 மற்று ஓர் நல் துணை நின் அலால் இலேன் காண்
 நரனே நாரணனே திருநறையூர்
 நம்பீ எம் பெருமான் உம்பர் ஆளும்
 அரனே ஆதிவராகம் முன் ஆனாய்
 அழுந்தூர் மேல் திசை நின்ற அம்மானே             (4)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 1612 | விண்டான் விண் புக வெம் சமத்து அரி ஆய் பரியோன் மார்வு-அகம் பற்றிப் பிளந்து
 பண்டு ஆன் உய்ய ஓர் மால் வரை ஏந்தும்
 பண்பாளா பரனே பவித்திரனே
 கண்டேன் நான் கலியுகத்ததன் தன்மை
 கருமம் ஆவதும் என்-தனக்கு அறிந்தேன்
 அண்டா நின் அடி அன்றி மற்று அறியேன்
 -அழுந்தூர் மேல் திசை நின்ற அம்மானே             (5)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 1613 | தோயா இன் தயிர் நெய் அமுது உண்ண சொன்னார் சொல்லி நகும் பரிசே பெற்ற
 தாயால் ஆப்புண்டு இருந்து அழுது ஏங்கும்
 தாடாளா தரையோர்க்கும் விண்ணோர்க்கும்
 சேயாய் கிரேத திரேத துவாபர
 கலியுகம்-இவை நான்கும் முன் ஆனாய்
 ஆயா நின் அடி அன்றி மற்று அறியேன்
 -அழுந்தூர் மேல் திசை நின்ற அம்மானே             (6)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 1614 | கறுத்து கஞ்சனை அஞ்ச முனிந்தாய் கார் வண்ணா கடல்போல் ஒளி வண்ணா
 இறுத்திட்டு ஆன் விடை ஏழும் முன் வென்றாய்
 எந்தாய் அந்தரம் ஏழும் முன் ஆனாய்
 பொறுத்துக்கொண்டிருந்தால் பொறுக்கொணாப் போகமே
 நுகர்வான் புகுந்து ஐவர்
 அறுத்துத் தின்றிட அஞ்சி நின் அடைந்தேன்
 -அழுந்தூர் மேல் திசை நின்ற அம்மானே            (7)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 1615 | நெடியானே கடி ஆர்கலி நம்பீ நின்னையே நினைந்து இங்கு இருப்பேனைக்
 கடி ஆர் காளையர் ஐவர் புகுந்து
 காவல் செய்த அக் காவலைப் பிழைத்து
 குடிபோந்து உன் அடிக்கீழ் வந்து புகுந்தேன்
 கூறை சோறு இவை தந்து எனக்கு அருளி
 அடியேனைப் பணி ஆண்டுகொள்-எந்தாய்
 அழுந்தூர் மேல் திசை நின்ற அம்மானே             (8)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 1616 | கோ ஆய் ஐவர் என் மெய் குடி ஏறி கூறை சோறு இவை தா என்று குமைத்து
 போகார் நான் அவரைப் பொறுக்ககிலேன்
 புனிதா புள் கொடியாய் நெடுமாலே
 தீ வாய் நாகணையில் துயில்வானே
 திருமாலே இனிச் செய்வது ஒன்று அறியேன்
 ஆஆ என்று அடியேற்கு இறை இரங்காய்
 -அழுந்தூர் மேல் திசை நின்ற அம்மானே            (9)
 | 
 |  | 
		
			|  |  |  |