| இரண்டாம் ஆயிரம் திருமங்கை ஆழ்வார்
 பெரிய திருமொழி
 
 | 
		| திருவழுந்தூர்: 4 | 
					
			
			
      | | 1617 | அன்னம் மன்னு பைம் பூம் பொழில் சூழ்ந்த அழுந்தூர் மேல் திசை நின்ற அம்மானைக்
 கன்னி மன்னு திண் தோள் கலிகன்றி
 ஆலி நாடன் மங்கைக் குல வேந்தன்
 சொன்ன இன் தமிழ் நல் மணிக் கோவை
 தூய மாலை இவை-பத்தும் வல்லார்
 மன்னி மன்னவர் ஆய் உலகு ஆண்டு
 மான வெண் குடைக்கீழ் மகிழ்வாரே             (10)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 1618 | செங் கமலத் திருமகளும் புவியும் செம் பொன் திருவடியின் இணை வருட முனிவர் ஏத்த
 வங்கம் மலி தடங் கடலுள் அநந்தன் என்னும்
 வரி அரவின் அணைத் துயின்ற மாயோன் காண்மின்-
 எங்கும் மலி நிறை புகழ் நால் வேதம் ஐந்து
 வேள்விகளும் கேள்விகளும் இயன்ற தன்மை
 அம் கமலத்து அயன் அனையார் பயிலும் செல்வத்து
 அணி அழுந்தூர் நின்று உகந்த அமரர்-கோவே            (1)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 1619 | முன் இவ் உலகு ஏழும் இருள் மண்டி உண்ண முனிவரொடு தானவர்கள் திசைப்ப வந்து
 பன்னு கலை நால் வேதப் பொருளை எல்லாம்
 பரி முகம் ஆய் அருளிய எம் பரமன் காண்மின்-
 செந்நெல் மலி கதிர் கவரி வீச சங்கம்
 -அவை முரல செங் கமல மலரை ஏறி
 அன்னம் மலி பெடையோடும் அமரும் செல்வத்து
 அணி அழுந்தூர் நின்று உகந்த அமரர்-கோவே             (2)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 1620 | குலத் தலைய மத வேழம் பொய்கை புக்கு கோள் முதலை பிடிக்க அதற்கு அனுங்கி நின்று
 நிலத் திகழும் மலர்ச் சுடர் ஏய் சோதீ என்ன
 நெஞ்சு இடர் தீர்த்தருளிய என் நிமலன் காண்மின்-
 மலைத் திகழ் சந்து அகில் கனகம் மணியும் கொண்டு
 வந்து உந்தி வயல்கள்தொறும் மடைகள் பாய
 அலைத்து வரும் பொன்னி வளம் பெருகும் செல்வத்து
 அணி அழுந்தூர் நின்று உகந்த அமரர்-கோவே             (3)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 1621 | சிலம்பு முதல் கலன் அணிந்து ஓர் செங்கல் குன்றம் திகழ்ந்தது என திரு உருவம் பன்றி ஆகி
 இலங்கு புவி மடந்தை-தனை இடந்து புல்கி
 எயிற்றிடை வைத்தருளிய எம் ஈசன் காண்மின்-
 புலம்பு சிறை வண்டு ஒலிப்ப பூகம் தொக்க
 பொழில்கள்தொறும் குயில் கூவ மயில்கள் ஆல
 அலம்பு திரைப் புனல் புடை சூழ்ந்து அழகு ஆர் செல்வத்து
 அணி அழுந்தூர் நின்று உகந்த அமரர்-கோவே             (4)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 1622 | சினம் மேவும் அடல் அரியின் உருவம் ஆகி திறல் மேவும் இரணியனது ஆகம் கீண்டு
 மனம் மேவு வஞ்சனையால் வந்த பேய்ச்சி
 மாள உயிர் வவ்விய எம் மாயோன் காண்மின்-
 இனம் மேவு வரி வளைக் கை ஏந்தும் கோவை
 ஏய் வாய மரகதம்போல் கிளியின் இன் சொல்
 அனம் மேவு நடை மடவார் பயிலும் செல்வத்து
 அணி அழுந்தூர் நின்று உகந்த அமரர்-கோவே             (5)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 1623 | வானவர்-தம் துயர் தீர வந்து தோன்றி மாண் உரு ஆய் மூவடி மாவலியை வேண்டி
 தான் அமர ஏழ் உலகும் அளந்த வென்றித்
 தனி முதல் சக்கரப் படை என் தலைவன் காண்மின்-
 தேன் அமரும் பொழில் தழுவும் எழில் கொள் வீதி
 செழு மாட மாளிகைகள் கூடம்தோறும்
 ஆன தொல் சீர் மறையாளர் பயிலும் செல்வத்து
 அணி அழுந்தூர் நின்று உகந்த அமரர்-கோவே (6)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 1624 | பந்து அணைந்த மெல் விரலாள் சீதைக்கு ஆகி பகலவன் மீது இயங்காத இலங்கை வேந்தன்
 அந்தம் இல் திண் கரம் சிரங்கள் புரண்டு வீழ
 அடு கணையால் எய்து உகந்த அம்மான் காண்மின்-
 செந்தமிழும் வடகலையும் திகழ்ந்த நாவர்
 திசைமுகனை அனையவர்கள் செம்மை மிக்க
 அந்தணர்-தம் ஆகுதியின் புகை ஆர் செல்வத்து
 அணி அழுந்தூர் நின்று உகந்த அமரர்-கோவே (7)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 1625 | கும்பம் மிகு மத வேழம் குலைய கொம்பு பறித்து மழ விடை அடர்த்து குரவை கோத்து
 வம்பு அவிழும் மலர்க் குழலாள் ஆய்ச்சி வைத்த
 தயிர் வெண்ணெய் உண்டு உகந்த மாயோன் காண்மின்-
 செம் பவளம் மரதகம் நல் முத்தம் காட்டத்
 திகழ் பூகம் கதலி பல வளம் மிக்கு எங்கும்
 அம் பொன் மதிள் பொழில் புடை சூழ்ந்து அழகு ஆர் செல்வத்து
 அணி அழுந்தூர் நின்று உகந்த அமரர்-கோவே            (8)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 1626 | ஊடு ஏறு கஞ்சனொடு மல்லும் வில்லும் ஒண் கரியும் உருள் சகடும் உடையச் செற்ற
 நீடு ஏறு பெரு வலித் தோள் உடைய வென்றி
 நிலவு புகழ் நேமி அங்கை நெடியோன் காண்மின்-
 சேடு ஏறு பொழில் தழுவும் எழில் கொள் வீதி
 திருவிழவில் மணி அணிந்த திண்ணைதோறும்
 ஆடு ஏறு மலர்க் குழலார் பயிலும் செல்வத்து
 அணி அழுந்தூர் நின்று உகந்த அமரர்-கோவே             (9)
 | 
 |  | 
		
			|  |  |  |