இரண்டாம் ஆயிரம் திருமங்கை ஆழ்வார் பெரிய திருமொழி
|
திருவழுந்தூர்: 4 |
1617 | அன்னம் மன்னு பைம் பூம் பொழில் சூழ்ந்த அழுந்தூர் மேல் திசை நின்ற அம்மானைக் கன்னி மன்னு திண் தோள் கலிகன்றி ஆலி நாடன் மங்கைக் குல வேந்தன் சொன்ன இன் தமிழ் நல் மணிக் கோவை தூய மாலை இவை-பத்தும் வல்லார் மன்னி மன்னவர் ஆய் உலகு ஆண்டு மான வெண் குடைக்கீழ் மகிழ்வாரே (10) | |
|
|
|
|
1618 | செங் கமலத் திருமகளும் புவியும் செம் பொன் திருவடியின் இணை வருட முனிவர் ஏத்த வங்கம் மலி தடங் கடலுள் அநந்தன் என்னும் வரி அரவின் அணைத் துயின்ற மாயோன் காண்மின்- எங்கும் மலி நிறை புகழ் நால் வேதம் ஐந்து வேள்விகளும் கேள்விகளும் இயன்ற தன்மை அம் கமலத்து அயன் அனையார் பயிலும் செல்வத்து அணி அழுந்தூர் நின்று உகந்த அமரர்-கோவே (1) | |
|
|
|
|
1619 | முன் இவ் உலகு ஏழும் இருள் மண்டி உண்ண முனிவரொடு தானவர்கள் திசைப்ப வந்து பன்னு கலை நால் வேதப் பொருளை எல்லாம் பரி முகம் ஆய் அருளிய எம் பரமன் காண்மின்- செந்நெல் மலி கதிர் கவரி வீச சங்கம் -அவை முரல செங் கமல மலரை ஏறி அன்னம் மலி பெடையோடும் அமரும் செல்வத்து அணி அழுந்தூர் நின்று உகந்த அமரர்-கோவே (2) | |
|
|
|
|
1620 | குலத் தலைய மத வேழம் பொய்கை புக்கு கோள் முதலை பிடிக்க அதற்கு அனுங்கி நின்று நிலத் திகழும் மலர்ச் சுடர் ஏய் சோதீ என்ன நெஞ்சு இடர் தீர்த்தருளிய என் நிமலன் காண்மின்- மலைத் திகழ் சந்து அகில் கனகம் மணியும் கொண்டு வந்து உந்தி வயல்கள்தொறும் மடைகள் பாய அலைத்து வரும் பொன்னி வளம் பெருகும் செல்வத்து அணி அழுந்தூர் நின்று உகந்த அமரர்-கோவே (3) | |
|
|
|
|
1621 | சிலம்பு முதல் கலன் அணிந்து ஓர் செங்கல் குன்றம் திகழ்ந்தது என திரு உருவம் பன்றி ஆகி இலங்கு புவி மடந்தை-தனை இடந்து புல்கி எயிற்றிடை வைத்தருளிய எம் ஈசன் காண்மின்- புலம்பு சிறை வண்டு ஒலிப்ப பூகம் தொக்க பொழில்கள்தொறும் குயில் கூவ மயில்கள் ஆல அலம்பு திரைப் புனல் புடை சூழ்ந்து அழகு ஆர் செல்வத்து அணி அழுந்தூர் நின்று உகந்த அமரர்-கோவே (4) | |
|
|
|
|
1622 | சினம் மேவும் அடல் அரியின் உருவம் ஆகி திறல் மேவும் இரணியனது ஆகம் கீண்டு மனம் மேவு வஞ்சனையால் வந்த பேய்ச்சி மாள உயிர் வவ்விய எம் மாயோன் காண்மின்- இனம் மேவு வரி வளைக் கை ஏந்தும் கோவை ஏய் வாய மரகதம்போல் கிளியின் இன் சொல் அனம் மேவு நடை மடவார் பயிலும் செல்வத்து அணி அழுந்தூர் நின்று உகந்த அமரர்-கோவே (5) | |
|
|
|
|
1623 | வானவர்-தம் துயர் தீர வந்து தோன்றி மாண் உரு ஆய் மூவடி மாவலியை வேண்டி தான் அமர ஏழ் உலகும் அளந்த வென்றித் தனி முதல் சக்கரப் படை என் தலைவன் காண்மின்- தேன் அமரும் பொழில் தழுவும் எழில் கொள் வீதி செழு மாட மாளிகைகள் கூடம்தோறும் ஆன தொல் சீர் மறையாளர் பயிலும் செல்வத்து அணி அழுந்தூர் நின்று உகந்த அமரர்-கோவே (6) | |
|
|
|
|
1624 | பந்து அணைந்த மெல் விரலாள் சீதைக்கு ஆகி பகலவன் மீது இயங்காத இலங்கை வேந்தன் அந்தம் இல் திண் கரம் சிரங்கள் புரண்டு வீழ அடு கணையால் எய்து உகந்த அம்மான் காண்மின்- செந்தமிழும் வடகலையும் திகழ்ந்த நாவர் திசைமுகனை அனையவர்கள் செம்மை மிக்க அந்தணர்-தம் ஆகுதியின் புகை ஆர் செல்வத்து அணி அழுந்தூர் நின்று உகந்த அமரர்-கோவே (7) | |
|
|
|
|
1625 | கும்பம் மிகு மத வேழம் குலைய கொம்பு பறித்து மழ விடை அடர்த்து குரவை கோத்து வம்பு அவிழும் மலர்க் குழலாள் ஆய்ச்சி வைத்த தயிர் வெண்ணெய் உண்டு உகந்த மாயோன் காண்மின்- செம் பவளம் மரதகம் நல் முத்தம் காட்டத் திகழ் பூகம் கதலி பல வளம் மிக்கு எங்கும் அம் பொன் மதிள் பொழில் புடை சூழ்ந்து அழகு ஆர் செல்வத்து அணி அழுந்தூர் நின்று உகந்த அமரர்-கோவே (8) | |
|
|
|
|
1626 | ஊடு ஏறு கஞ்சனொடு மல்லும் வில்லும் ஒண் கரியும் உருள் சகடும் உடையச் செற்ற நீடு ஏறு பெரு வலித் தோள் உடைய வென்றி நிலவு புகழ் நேமி அங்கை நெடியோன் காண்மின்- சேடு ஏறு பொழில் தழுவும் எழில் கொள் வீதி திருவிழவில் மணி அணிந்த திண்ணைதோறும் ஆடு ஏறு மலர்க் குழலார் பயிலும் செல்வத்து அணி அழுந்தூர் நின்று உகந்த அமரர்-கோவே (9) | |
|
|
|
|