இரண்டாம் ஆயிரம் திருமங்கை ஆழ்வார் பெரிய திருமொழி
|
| திருக்கண்ணபுரம்: 2 |
| 1657 | மா வளரும் மென் நோக்கி மாதராள் மாயவனைக் கண்டாள் என்று கா வளரும் கடி பொழில் சூழ் கண்ணபுரத்து அம்மானைக் கலியன் சொன்ன பா வளரும் தமிழ்-மாலை பன்னிய நூல் இவை ஐந்தும் ஐந்தும் வல்லார் பூ வளரும் கற்பகம் சேர் பொன் உலகில் மன்னவர் ஆய்ப் புகழ் தக்கோரே (10) | |
|
| |
|
|
| 1658 | தெள்ளியீர் தேவர்க்கும் தேவர் திருத் தக்கீர் வெள்ளியீர் வெய்ய விழு நிதி வண்ணர் ஓ துள்ளு நீர்க் கண்ணபுரம் தொழுதாள் இவள் கள்வியோ? கை வளை கொள்வது தக்கதே? (1) | |
|
| |
|
|
| 1659 | நீள் நிலாமுற்றத்து நின்று இவள் நோக்கினாள் காணுமோ கண்ணபுரம் என்று காட்டினாள் பாணனார் திண்ணம் இருக்க இனி இவள் நாணுமோ? நன்று நன்று நறையூரர்க்கே (2) | |
|
| |
|
|
| 1660 | அருவி சோர் வேங்கடம் நீர்மலை என்று வாய்- வெருவினாள் மெய்யம் வினவி இருக்கின்றாள் பெருகு சீர்க் கண்ணபுரம் என்று பேசினாள் உருகினாள் உள்மெலிந்தாள் இது என்கொலோ? (3) | |
|
| |
|
|
| 1661 | உண்ணும் நாள் இல்லை உறக்கமும்-தான் இல்லை பெண்மையும் சால நிறைந்திலள் பேதை-தான் கண்ணன் ஊர் கண்ணபுரம் தொழும் கார்க் கடல் வண்ணர்மேல் எண்ணம் இவட்கு இது என்கொலோ? (4) | |
|
| |
|
|
| 1662 | கண்ணன் ஊர் கண்ணபுரம் தொழும் காரிகை பெண்மை என்? தன்னுடை உண்மை உரைக்கின்றாள் வெண்ணெய் உண்டு ஆப்புண்ட வண்ணம் விளம்பினால் வண்ணமும் பொன் நிறம் ஆவது ஒழியுமே (5) | |
|
| |
|
|
| 1663 | வட வரை நின்றும் வந்து இன்று கணபுரம் இடவகை கொள்வது யாம் என்று பேசினாள் மடவரல் மாதர் என் பேதை இவர்க்கு இவள் கடவது என்-கண் துயில் இன்று இவர் கொள்ளவே? (6) | |
|
| |
|
|
| 1664 | தரங்க நீர் பேசினும் தண் மதி காயினும் இரங்குமோ? எத்தனை நாள் இருந்து எள்கினாள் துரங்கம் வாய் கீண்டு உகந்தானது தொன்மை ஊர் அரங்கமே என்பது இவள்-தனக்கு ஆசையே (7) | |
|
| |
|
|
| 1665 | தொண்டு எல்லாம் நின் அடியே தொழுது உய்யுமா கண்டு தான் கண்ணபுரம் தொழப் போயினாள் வண்டு உலாம் கோதை என் பேதை மணி நிறம் கொண்டு தான் கோயின்மை செய்வது தக்கதே? (8) | |
|
| |
|
|
| 1666 | முள் எயிறு ஏய்ந்தில கூழை முடிகொடா தெள்ளியள் என்பது ஓர் தேசு இலள் என் செய்கேன் கள் அவிழ் சோலைக் கணபுரம் கை தொழும் பிள்ளையைப் பிள்ளை என்று எண்ணப் பெறுவரே? (9) | |
|
| |
|
|