இரண்டாம் ஆயிரம் திருமங்கை ஆழ்வார் பெரிய திருமொழி
|
| திருக்கண்ணபுரம்: 3 |
| 1667 | கார் மலி கண்ணபுரத்து எம் அடிகளைப் பார் மலி மங்கையர்-கோன் பரகாலன் சொல் சீர் மலி பாடல் இவை பத்தும் வல்லவர் நீர் மலி வையத்து நீடு நிற்பார்களே (10) | |
|
| |
|
|
| 1668 | கரை எடுத்த சுரி சங்கும் கன பவளத்து எழு கொடியும் திரை எடுத்து வரு புனல் சூழ் திருக்கண்ணபுரத்து உறையும் விரை எடுத்த துழாய் அலங்கல் விறல் வரைத் தோள் புடைபெயர வரை எடுத்த பெருமானுக்கு இழந்தேன்-என் வரி வளையே (1) | |
|
| |
|
|
| 1669 | அரி விரவு முகில் கணத்தால் அகில் புகையால் வரையோடும் தெரிவு அரிய மணி மாடத் திருக்கண்ணபுரத்து உறையும் வரி அரவின் அணைத் துயின்று மழை மதத்த சிறு தறு கண் கரி வெருவ மருப்பு ஒசித்தாற்கு இழந்தேன்-என் கன வளையே (2) | |
|
| |
|
|
| 1670 | துங்க மா மணி மாட நெடு முகட்டின் சூலிகை போம் திங்கள் மா முகில் துணிக்கும் திருக்கண்ணபுரத்து உறையும் பைங் கண் மால் விடை அடர்த்து பனி மதி கோள் விடுத்து உகந்த செங் கண் மால் அம்மானுக்கு இழந்தேன்-என் செறி வளையே (3) | |
|
| |
|
|
| 1671 | கணம் மருவும் மயில் அகவு கடி பொழில் சூழ் நெடு மறுகின் திணம் மருவு கன மதிள் சூழ் திருக்கண்ணபுரத்து உறையும் மணம் மருவு தோள் ஆய்ச்சி ஆர்க்க போய் உரலோடும் புணர் மருதம் இற நடந்தாற்கு இழந்தேன்-என் பொன் வளையே (4) | |
|
| |
|
|
| 1672 | வாய் எடுத்த மந்திரத்தால் அந்தணர் தம் செய் தொழில்கள் தீ எடுத்து மறை வளர்க்கும் திருக்கண்ணபுரத்து உறையும் தாய் எடுத்த சிறு கோலுக்கு உளைந்து ஓடி தயிர் உண்ட வாய் துடைத்த மைந்தனுக்கு இழந்தேன்-என் வரி வளையே (5) | |
|
| |
|
|
| 1673 | மடல் எடுத்த நெடுந் தாழை மருங்கு எல்லாம் வளர் பவளம் திடல் எடுத்து சுடர் இமைக்கும் திருக்கண்ணபுரத்து உறையும் அடல் அடர்த்து அன்று இரணியனை முரண் அழிய அணி உகிரால் உடல் எடுத்த பெருமானுக்கு இழந்தேன்-என் ஒளி வளையே (6) | |
|
| |
|
|
| 1674 | வண்டு அமரும் மலர்ப் புன்னை வரி நீழல் அணி முத்தம் தெண் திரைகள் வரத் திரட்டும் திருக்கண்ணபுரத்து உறையும் எண் திசையும் எழு கடலும் இரு நிலனும் பெரு விசும்பும் உண்டு உமிழ்ந்த பெருமானுக்கு இழந்தேன்-என் ஒளி வளையே (7) | |
|
| |
|
|
| 1675 | கொங்கு மலி கருங் குவளை கண் ஆகத் தெண் கயங்கள் செங் கமலம் முகம் அலர்த்தும் திருக்கண்ணபுரத்து உறையும் வங்கம் மலி தடங் கடலுள் வரி அரவின் அணைத் துயின்ற செங்கமலநாபனுக்கு இழந்தேன்-என் செறி வளையே (8) | |
|
| |
|
|
| 1676 | வார் ஆளும் இளங் கொங்கை நெடும் பணைத் தோள் மடப் பாவை சீர் ஆளும் வரை மார்வன் திருக்கண்ணபுரத்து உறையும் பேராளன் ஆயிரம் பேர் ஆயிர வாய் அரவு-அணைமேல் பேராளர் பெருமானுக்கு இழந்தேன்-என் பெய் வளையே (9) | |
|
| |
|
|
| 1677 | தே மருவு பொழில் புடை சூழ் திருக்கண்ணபுரத்து உறையும் வாமனனை மறி கடல் சூழ் வயல் ஆலி வள நாடன் காமரு சீர்க் கலிகன்றி கண்டு உரைத்த தமிழ்-மாலை நா மருவி இவை பாட வினை ஆய நண்ணாவே (10) | |
|
| |
|
|