இரண்டாம் ஆயிரம் திருமங்கை ஆழ்வார் பெரிய திருமொழி
|
திருக்கண்ணபுரம்: 4 |
1678 | விண்ணவர்-தங்கள் பெருமான் திருமார்வன் மண்ணவர் எல்லாம் வணங்கும் மலி புகழ் சேர் கண்ணபுரத்து எம் பெருமான் கதிர் முடிமேல் வண்ண நறுந் துழாய் வந்து ஊதாய்-கோல் தும்பீ (1) | |
|
|
|
|
1679 | வேத முதல்வன் விளங்கு புரி நூலன் பாதம் பரவிப் பலரும் பணிந்து ஏத்தி காதன்மை செய்யும் கண்ணபுரத்து எம் பெருமான் தாது நறுந் துழாய் தாழ்ந்து ஊதாய்-கோல் தும்பீ (2) | |
|
|
|
|
1680 | விண்ட மலர் எல்லாம் ஊதி நீ என் பெறுதி? அண்ட முதல்வன் அமரர்கள் எல்லாரும் கண்டு வணங்கும் கண்ணபுரத்து எம் பெருமான் வண்டு நறுந் துழாய் வந்து ஊதாய்-கோல் தும்பீ (3) | |
|
|
|
|
1681 | நீர் மலிகின்றது ஓர் மீன் ஆய் ஓர் ஆமையும் ஆய் சீர் மலிகின்றது ஓர் சிங்க உரு ஆகி கார் மலி வண்ணன் கண்ணபுரத்து எம் பெருமான் தார் மலி தண் துழாய் தாழ்ந்து ஊதாய்-கோல் தும்பீ (4) | |
|
|
|
|
1682 | ஏர் ஆர் மலர் எல்லாம் ஊதி நீ என் பெறுதி? பார் ஆர் உலகம் பரவ பெருங் கடலுள் கார் ஆமை ஆன கண்ணபுரத்து எம் பெருமான் தார் ஆர் நறுந் துழாய் தாழ்ந்து ஊதாய்-கோல் தும்பீ (5) | |
|
|
|
|
1683 | மார்வில் திருவன் வலன் ஏந்து சக்கரத்தன் பாரைப் பிளந்த பரமன் பரஞ்சோதி காரில் திகழ் காயா வண்ணன் கதிர் முடிமேல் தாரில் நறுந் துழாய் தாழ்ந்து ஊதாய்-கோல் தும்பீ (6) | |
|
|
|
|
1684 | வாமனன் கற்கி மதுசூதன் மாதவன் தார் மன்னு தாசரதி ஆய தடமார்வன் காமன்-தன் தாதை கண்ணபுரத்து எம் பெருமான் தாம நறுந் துழாய் தாழ்ந்து ஊதாய்-கோல் தும்பீ (7) | |
|
|
|
|
1685 | நீல மலர்கள் நெடு நீர் வயல் மருங்கில் சால மலர் எல்லாம் ஊதாதே வாள் அரக்கர் காலன் கண்ணபுரத்து எம் பெருமான் கதிர் முடிமேல் கோல நறுந் துழாய் கொண்டு ஊதாய்-கோல் தும்பீ (8) | |
|
|
|
|
1686 | நந்தன் மதலை நில மங்கை நல் துணைவன் அந்தம் முதல்வன் அமரர்கள்-தம் பெருமான் கந்தம் கமழ் காயா வண்ணன் கதிர் முடிமேல் கொந்து நறுந் துழாய் கொண்டு ஊதாய்-கோல் தும்பீ (9) | |
|
|
|
|