இரண்டாம் ஆயிரம் திருமங்கை ஆழ்வார் பெரிய திருமொழி
|
| திருக்கண்ணபுரம்: 8 |
| 1717 | வானோர் அளவும் முது முந்நீர் வளர்ந்த காலம் வலி உருவின் மீன் ஆய் வந்து வியந்து உய்யக் கொண்ட தண் தாமரைக் கண்ணன் ஆனா உருவில் ஆன் ஆயன்-அவனை-அம் மா விளை வயலுள் கான் ஆர் புறவின் கண்ணபுரத்து-அடியேன் கண்டுகொண்டேனே (1) | |
|
| |
|
|
| 1718 | மலங்கு விலங்கு நெடு வெள்ளம் மறுக அங்கு ஓர் வரை நட்டு இலங்கு சோதி ஆர் அமுதம் எய்தும் அளவு ஓர் ஆமை ஆய் விலங்கல் திரியத் தடங் கடலுள் சுமந்து கிடந்த வித்தகனை- கலங்கல் முந்நீர்க் கண்ணபுரத்து-அடியேன் கண்டுகொண்டேனே (2) | |
|
| |
|
|
| 1719 | பார் ஆர் அளவும் முது முந்நீர் பரந்த காலம் வளை மருப்பின் ஏர் ஆர் உருவத்து ஏனம் ஆய் எடுத்த ஆற்றல் அம்மானை- கூர் ஆர் ஆரல் இரை கருதி குருகு பாய கயல் இரியும் கார் ஆர் புறவின் கண்ணபுரத்து-அடியேன் கண்டுகொண்டேனே (3) | |
|
| |
|
|
| 1720 | உளைந்த அரியும் மானிடமும் உடனாய்த் தோன்ற ஒன்றுவித்து விளைந்த சீற்றம் விண் வெதும்ப வேற்றோன் அகலம் வெம் சமத்துப் பிளந்து வளைந்த உகிரானை-பெருந் தண் செந்நெல் குலை தடிந்து களம் செய் புறவின் கண்ணபுரத்து-அடியேன் கண்டுகொண்டேனே (4) | |
|
| |
|
|
| 1721 | தொழும் நீர் வடிவின் குறள் உருவு ஆய் வந்து தோன்றி மாவலிபால் முழுநீர் வையம் முன் கொண்ட மூவா உருவின் அம்மானை- உழும் நீர் வயலுள் பொன் கிளைப்ப ஒருபால் முல்லை முகையோடும் கழுநீர் மலரும் கண்ணபுரத்து-அடியேன் கண்டுகொண்டேனே (5) | |
|
| |
|
|
| 1722 | வடிவாய் மழுவே படை ஆக வந்து தோன்றி மூவெழுகால் படி ஆர் அரசு களைகட்ட பாழியானை அம்மானை- குடியா வண்டு கொண்டு உண்ண கோல நீலம் மட்டு உகுக்கும் கடி ஆர் புறவின் கண்ணபுரத்து-அடியேன் கண்டுகொண்டேனே (6) | |
|
| |
|
|
| 1723 | வையம் எல்லாம் உடன் வணங்க வணங்கா மன்னனாய்த் தோன்றி வெய்ய சீற்றக் கடி இலங்கை குடிகொண்டு ஓட வெம் சமத்துச் செய்த வெம்போர் நம்பரனை-செழுந் தண் கானல் மணம் நாறும் கைதை வேலிக் கண்ணபுரத்து-அடியேன் கண்டுகொண்டேனே (7) | |
|
| |
|
|
| 1724 | ஒற்றைக் குழையும் நாஞ்சிலும் ஒருபால் தோன்ற தான் தோன்றி வெற்றித் தொழிலார் வேல் வேந்தர் விண்பால் செல்ல வெம் சமத்துச் செற்ற கொற்றத் தொழிலானை-செந்தீ மூன்றும் இல் இருப்ப கற்ற மறையோர் கண்ணபுரத்து-அடியேன் கண்டுகொண்டேனே (8) | |
|
| |
|
|
| 1725 | துவரிக் கனிவாய் நில மங்கை துயர் தீர்ந்து உய்ய பாரதத்துள் இவரித்து அரசர் தடுமாற இருள் நாள் பிறந்த அம்மானை- உவரி ஓதம் முத்து உந்த ஒருபால் ஒருபால் ஒண் செந்நெல் கவரி வீசும் கண்ணபுரத்து-அடியேன் கண்டுகொண்டேனே (9) | |
|
| |
|
|
| 1726 | மீனோடு ஆமை கேழல் அரி குறள் ஆய் முன்னும் இராமன் ஆய் தான் ஆய் பின்னும் இராமன் ஆய் தாமோதரன் ஆய் கற்கியும் ஆனான்-தன்னைக் கண்ணபுரத்து அடியன் கலியன் ஒலிசெய்த தேன் ஆர் இன் சொல் தமிழ்-மாலை செப்ப பாவம் நில்லாவே (10) | |
|
| |
|
|