இரண்டாம் ஆயிரம் திருமங்கை ஆழ்வார் பெரிய திருமொழி
|
திருக்கண்ணபுரம்: 10 |
1737 | வண்டு ஆர் பூ மா மலர்-மங்கை மண நோக்கம் உண்டானே!-உன்னை உகந்து-உகந்து உன்-தனக்கே தொண்டு ஆனேற்கு என் செய்கின்றாய்? சொல்லு-நால்வேதம் கண்டானே கண்ணபுரத்து உறை அம்மானே (1) | |
|
|
|
|
1738 | பெரு நீரும் விண்ணும் மலையும் உலகு ஏழும் ஒரு தாரா நின்னுள் ஒடுக்கிய நின்னை அல்லால் வரு தேவர் மற்று உளர் என்று என் மனத்து இறையும் கருதேன் நான்-கண்ணபுரத்து உறை அம்மானே (2) | |
|
|
|
|
1739 | மற்றும் ஓர் தெய்வம் உளது என்று இருப்பாரோடு உற்றிலேன் உற்றதும் உன் அடியார்க்கு அடிமை மற்று எல்லாம் பேசிலும் நின் திரு எட்டு எழுத்தும் கற்று நான்-கண்ணபுரத்து உறை அம்மானே (3) | |
|
|
|
|
1740 | பெண் ஆனாள் பேர் இளங் கொங்கையின் ஆர் அழல்போல் உண்ணா நஞ்சு உண்டு உகந்தாயை உகந்தேன் நான்- மண் ஆளா வாள் நெடுங் கண்ணி மது மலராள் கண்ணாளா கண்ணபுரத்து உறை அம்மானே (4) | |
|
|
|
|
1741 | பெற்றாரும் சுற்றமும் என்று இவை பேணேன் நான் மற்று ஆரும் பற்று இலேன் ஆதலால் நின் அடைந்தேன் உற்றான் என்று உள்ளத்து வைத்து அருள்செய் கண்டாய்- கற்றார் சேர் கண்ணபுரத்து உறை அம்மானே (5) | |
|
|
|
|
1742 | ஏத்தி உன் சேவடி எண்ணி இருப்பாரைப் பார்த்திருந்து அங்கு நமன்-தமர் பற்றாது சோத்தம் நாம் அஞ்சுதும் என்று தொடாமை நீ காத்திபோல்-கண்ணபுரத்து உறை அம்மானே (6) | |
|
|
|
|
1743 | வெள்ளை நீர் வெள்ளத்து அணைந்த அரவு-அணைமேல் துள்ளு நீர் மெள்ளத் துயின்ற பெருமானே வள்ளலே உன் தமர்க்கு என்றும் நமன்தமர் கள்ளர்போல்-கண்ணபுரத்து உறை அம்மானே (7) | |
|
|
|
|
1744 | மாண் ஆகி வையம் அளந்ததுவும் வாள் அவுணன் பூண் ஆகம் கீண்டதுவும் ஈண்டு நினைந்து இருந்தேன் பேணாத வல்வினையேன் இடர் எத்தனையும் காணேன் நான்-கண்ணபுரத்து உறை அம்மானே (8) | |
|
|
|
|
1745 | நாட்டினாய் என்னை உனக்கு முன் தொண்டு ஆக மாட்டினேன் அத்தனையே கொண்டு என் வல்வினையை பாட்டினால் உன்னை என் நெஞ்சத்து இருந்தமை காட்டினாய்-கண்ணபுரத்து உறை அம்மானே (9) | |
|
|
|
|
1746 | கண்ட சீர்க் கண்ணபுரத்து உறை அம்மானை கொண்ட சீர்த் தொண்டன் கலியன் ஒலி மாலை பண்டமாய்ப் பாடும் அடியவர்க்கு எஞ்ஞான்றும் அண்டம் போய் ஆட்சி அவர்க்கு அது அறிந்தோமே (10) | |
|
|
|
|