இரண்டாம் ஆயிரம் திருமங்கை ஆழ்வார் பெரிய திருமொழி
|
| திருக்கண்ணங்குடி |
| 1747 | வங்க மா முந்நீர் வரி நிறப் பெரிய வாள் அரவின் அணை மேவி சங்கம் ஆர் அம் கை தட மலர் உந்தி சாம மா மேனி என் தலைவன்- அங்கம் ஆறு ஐந்து வேள்வி நால் வேதம் அருங் கலை பயின்று எரி மூன்றும் செங் கையால் வளர்க்கும் துளக்கம் இல் மனத்தோர் திருக்கண்ணங்குடியுள் நின்றானே (1) | |
|
| |
|
|
| 1748 | கவள மா கதத்த கரி உய்ய-பொய்கைக் கராம் கொளக் கலங்கி உள் நினைந்து துவள மேல் வந்து தோன்றி வன் முதலை துணிபட-சுடு படை துரந்தோன்- குவளை நீள் முளரி குமுதம் ஒண் கழுநீர் கொய்ம் மலர் நெய்தல் ஒண் கழனி திவளும் மாளிகை சூழ் செழு மணிப் புரிசைத் திருக்கண்ணங்குடியுள் நின்றானே (2) | |
|
| |
|
|
| 1749 | வாதை வந்து அடர வானமும் நிலனும் மலைகளும் அலை கடல் குளிப்ப மீது கொண்டு உகளும் மீன் உரு ஆகி விரி புனல் வரி அகட்டு ஒளித்தோன்- போது அலர் புன்னை மல்லிகை மௌவல் புது விரை மது மலர் அணைந்து சீத ஒண் தென்றல் திசைதொறும் கமழும் திருக்கண்ணங்குடியுள் நின்றானே (3) | |
|
| |
|
|
| 1750 | வென்றி சேர் திண்மை விலங்கல் மா மேனி வெள் எயிற்று ஒள் எரித் தறு கண் பன்றி ஆய் அன்று பார்-மகள் பயலை தீர்த்தவன் பஞ்சவர் பாகன்- ஒன்று அலா உருவத்து உலப்பு இல் பல் காலத்து உயர் கொடி ஒளி வளர் மதியம் சென்று சேர் சென்னிச் சிகர நல் மாடத் திருக்கண்ணங்குடியுள் நின்றானே (4) | |
|
| |
|
|
| 1751 | மன்னவன் பெரிய வேள்வியில் குறள் ஆய் மூவடி நீரொடும் கொண்டு பின்னும் ஏழ் உலகும் ஈர் அடி ஆக பெருந் திசை அடங்கிட நிமிர்ந்தோன்- அன்னம் மென் கமலத்து அணி மலர்ப் பீடத்து அலை புனல் இலைக் குடை நீழல் செந்நெல் ஒண் கவரி அசைய வீற்றிருக்கும் திருக்கண்ணங்குடியுள் நின்றானே (5) | |
|
| |
|
|
| 1752 | மழுவினால் அவனி அரசை மூவெழுகால் மணி முடி பொடிபடுத்து உதிரக் குழுவு வார் புனலுள் குளித்து வெம் கோபம் தவிர்ந்தவன்-குலை மலி கதலிக் குழுவும் வார் கமுகும் குரவும் நல் பலவும் குளிர் தரு சூதம் மாதவியும் செழுமை ஆர் பொழில்கள் தழுவும் நல் மாடத் திருக்கண்ணங்குடியுள் நின்றானே (6) | |
|
| |
|
|
| 1753 | வான் உளார்-அவரை வலிமையால் நலியும் மறி கடல் இலங்கையார்-கோனை பானு நேர் சரத்தால் பனங்கனிபோலப் பரு முடி உதிர வில் வளைத்தோன்- கான் உலாம் மயிலின் கணங்கள் நின்று ஆட கண முகில் முரசம் நின்று அதிர தேன் உலாம் வரி வண்டு இன் இசை முரலும் திருக்கண்ணங்குடியுள் நின்றானே (7) | |
|
| |
|
|
| 1754 | அரவ நீள் கொடியோன் அவையுள் ஆசனத்தை அஞ்சிடாதே இட அதற்கு பெரிய மா மேனி அண்டம் ஊடுருவ பெருந் திசை அடங்கிட நிமிர்ந்தோன்- வரையின் மா மணியும் மரகதத் திரளும் வயிரமும் வெதிர் உதிர் முத்தும் திரை கொணர்ந்து உந்தி வயல்தொறும் குவிக்கும் திருக்கண்ணங்குடியுள் நின்றானே (8) | |
|
| |
|
|
| 1755 | பன்னிய பாரம் பார்-மகட்கு ஒழிய பாரத மா பெரும் போரில் மன்னர்கள் மடிய மணி நெடுந் திண் தேர் மைத்துனற்கு உய்த்த மா மாயன்- துன்னு மாதவியும் சுரபுனைப் பொழிலும் சூழ்ந்து எழு செண்பக மலர்வாய் தென்ன என்று அளிகள் முரன்று இசைபாடும் திருக்கண்ணங்குடியுள் நின்றானே (9) | |
|
| |
|
|
| 1756 | கலை உலா அல்குல் காரிகைதிறத்து கடல் பெரும் படையொடும் சென்று சிலையினால் இலங்கை தீ எழச் செற்ற திருக்கண்ணங்குடியுள் நின்றானை மலை குலாம் மாட மங்கையர் தலைவன் மான வேல் கலியன் வாய் ஒலிகள் உலவு சொல்-மாலை ஒன்பதோடு ஒன்றும் வல்லவர்க்கு இல்லை-நல்குரவே (10) | |
|
| |
|
|