| இரண்டாம் ஆயிரம் திருமங்கை ஆழ்வார்
 பெரிய திருமொழி
 
 | 
		| திருக்கண்ணங்குடி | 
					
			
			
      | | 1747 | வங்க மா முந்நீர் வரி நிறப் பெரிய வாள் அரவின் அணை மேவி
 சங்கம் ஆர் அம் கை தட மலர் உந்தி
 சாம மா மேனி என் தலைவன்-
 அங்கம் ஆறு ஐந்து வேள்வி நால் வேதம்
 அருங் கலை பயின்று எரி மூன்றும்
 செங் கையால் வளர்க்கும் துளக்கம் இல் மனத்தோர்
 திருக்கண்ணங்குடியுள் நின்றானே            (1)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 1748 | கவள மா கதத்த கரி உய்ய-பொய்கைக் கராம் கொளக் கலங்கி உள் நினைந்து
 துவள மேல் வந்து தோன்றி வன் முதலை
 துணிபட-சுடு படை துரந்தோன்-
 குவளை நீள் முளரி குமுதம் ஒண் கழுநீர்
 கொய்ம் மலர் நெய்தல் ஒண் கழனி
 திவளும் மாளிகை சூழ் செழு மணிப் புரிசைத்
 திருக்கண்ணங்குடியுள் நின்றானே            (2)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 1749 | வாதை வந்து அடர வானமும் நிலனும் மலைகளும் அலை கடல் குளிப்ப
 மீது கொண்டு உகளும் மீன் உரு ஆகி
 விரி புனல் வரி அகட்டு ஒளித்தோன்-
 போது அலர் புன்னை மல்லிகை மௌவல்
 புது விரை மது மலர் அணைந்து
 சீத ஒண் தென்றல் திசைதொறும் கமழும்
 திருக்கண்ணங்குடியுள் நின்றானே            (3)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 1750 | வென்றி சேர் திண்மை விலங்கல் மா மேனி வெள் எயிற்று ஒள் எரித் தறு கண்
 பன்றி ஆய் அன்று பார்-மகள் பயலை
 தீர்த்தவன் பஞ்சவர் பாகன்-
 ஒன்று அலா உருவத்து உலப்பு இல் பல் காலத்து
 உயர் கொடி ஒளி வளர் மதியம்
 சென்று சேர் சென்னிச் சிகர நல் மாடத்
 திருக்கண்ணங்குடியுள் நின்றானே            (4)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 1751 | மன்னவன் பெரிய வேள்வியில் குறள் ஆய் மூவடி நீரொடும் கொண்டு
 பின்னும் ஏழ் உலகும் ஈர் அடி ஆக
 பெருந் திசை அடங்கிட நிமிர்ந்தோன்-
 அன்னம் மென் கமலத்து அணி மலர்ப் பீடத்து
 அலை புனல் இலைக் குடை நீழல்
 செந்நெல் ஒண் கவரி அசைய வீற்றிருக்கும்
 திருக்கண்ணங்குடியுள் நின்றானே             (5)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 1752 | மழுவினால் அவனி அரசை மூவெழுகால் மணி முடி பொடிபடுத்து உதிரக்
 குழுவு வார் புனலுள் குளித்து வெம் கோபம்
 தவிர்ந்தவன்-குலை மலி கதலிக்
 குழுவும் வார் கமுகும் குரவும் நல் பலவும்
 குளிர் தரு சூதம் மாதவியும்
 செழுமை ஆர் பொழில்கள் தழுவும் நல் மாடத்
 திருக்கண்ணங்குடியுள் நின்றானே            (6)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 1753 | வான் உளார்-அவரை வலிமையால் நலியும் மறி கடல் இலங்கையார்-கோனை
 பானு நேர் சரத்தால் பனங்கனிபோலப்
 பரு முடி உதிர வில் வளைத்தோன்-
 கான் உலாம் மயிலின் கணங்கள் நின்று ஆட
 கண முகில் முரசம் நின்று அதிர
 தேன் உலாம் வரி வண்டு இன் இசை முரலும்
 திருக்கண்ணங்குடியுள் நின்றானே            (7)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 1754 | அரவ நீள் கொடியோன் அவையுள் ஆசனத்தை அஞ்சிடாதே இட அதற்கு
 பெரிய மா மேனி அண்டம் ஊடுருவ
 பெருந் திசை அடங்கிட நிமிர்ந்தோன்-
 வரையின் மா மணியும் மரகதத் திரளும்
 வயிரமும் வெதிர் உதிர் முத்தும்
 திரை கொணர்ந்து உந்தி வயல்தொறும் குவிக்கும்
 திருக்கண்ணங்குடியுள் நின்றானே            (8)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 1755 | பன்னிய பாரம் பார்-மகட்கு ஒழிய பாரத மா பெரும் போரில்
 மன்னர்கள் மடிய மணி நெடுந் திண் தேர்
 மைத்துனற்கு உய்த்த மா மாயன்-
 துன்னு மாதவியும் சுரபுனைப் பொழிலும்
 சூழ்ந்து எழு செண்பக மலர்வாய்
 தென்ன என்று அளிகள் முரன்று இசைபாடும்
 திருக்கண்ணங்குடியுள் நின்றானே            (9)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 1756 | கலை உலா அல்குல் காரிகைதிறத்து கடல் பெரும் படையொடும் சென்று
 சிலையினால் இலங்கை தீ எழச் செற்ற
 திருக்கண்ணங்குடியுள் நின்றானை
 மலை குலாம் மாட மங்கையர் தலைவன்
 மான வேல் கலியன் வாய் ஒலிகள்
 உலவு சொல்-மாலை ஒன்பதோடு ஒன்றும்
 வல்லவர்க்கு இல்லை-நல்குரவே             (10)
 | 
 |  | 
		
			|  |  |  |