| இரண்டாம் ஆயிரம் திருமங்கை ஆழ்வார்
 பெரிய திருமொழி
 
 | 
		| திருப்புல்லாணி: 1 | 
					
			
			
      | | 1767 | தன்னை நைவிக்கிலேன் வல் வினையேன் தொழுதும் எழு- பொன்னை நைவிக்கும் அப் பூஞ் செருந்தி மண நீழல்வாய்
 என்னை நைவித்து எழில் கொண்டு அகன்ற பெருமான் இடம்
 புன்னை முத்தம் பொழில் சூழ்ந்து அழகு ஆய புல்லாணியே            (1)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 1768 | உருகி நெஞ்சே நினைந்து இங்கு இருந்து என்? தொழுதும் எழு- முருகு வண்டு உன் மலர்க் கைதையின் நீழலில் முன் ஒருநாள்
 பெருகு காதன்மை என் உள்ளம் எய்தப் பிரிந்தான் இடம்
 பொருது முந்நீர் கரைக்கே மணி உந்து புல்லாணியே             (2)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 1769 | ஏது செய்தால் மறக்கேன்? மனமே தொழுதும் எழு- தாது மல்கு தடம் சூழ் பொழில் தாழ்வர் தொடர்ந்து பின்
 பேதை நின்னைப் பிரியேன் இனி என்று அகன்றான் இடம்
 போது நாளும் கமழும் பொழில் சூழ்ந்த புல்லாணியே             (3)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 1770 | கொங்கு உண் வண்டே கரியாக வந்தான் கொடியேற்கு முன் நங்கள் ஈசன் நமக்கே பணித்த மொழி செய்திலன்
 மங்கை நல்லாய் தொழுதும் எழு-போய் அவன் மன்னும் ஊர்
 பொங்கு முந்நீர் கரைக்கே மணி உந்து புல்லாணியே             (4)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 1771 | உணரில் உள்ளம் சுடுமால் வினையேன் தொழுதும் எழு- துணரி நாழல் நறும் போது நம் சூழ் குழல் பெய்து பின்
 தணரில் ஆவி தளரும் என அன்பு தந்தான் இடம்
 புணரி ஓதம் பணில மணி உந்து புல்லாணியே             (5)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 1772 | எள்கி நெஞ்சே நினைந்து இங்கு இருந்து என்? தொழுதும் எழு- வள்ளல் மாயன் மணிவண்ணன் எம்மான் மருவும் இடம்
 கள் அவிழும் மலர்க் காவியும் தூ மடல் கைதையும்
 புள்ளும் அள்ளல் பழனங்களும் சூழ்ந்த புல்லாணியே            (6)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 1773 | பரவி நெஞ்சே தொழுதும் எழு-போய் அவன் பாலம் ஆய் இரவும் நாளும் இனி கண் துயிலாது இருந்து என் பயன்?
 விரவி முத்தம் நெடு வெண் மணல் மேல் கொண்டு வெண் திரை
 புரவி என்னப் புதம்செய்து வந்து உந்து புல்லாணியே            (7)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 1774 | அலமும் ஆழிப் படையும் உடையார் நமக்கு அன்பர் ஆய் சலம்-அது ஆகி தகவு ஒன்று இலர் நாம் தொழுதும் எழு-
 உலவு கால் நல் கழி ஓங்கு தண் பைம் பொழிலூடு இசை
 புலவு கானல் களி வண்டு இனம் பாடு புல்லாணியே             (8)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 1775 | ஓதி நாமம் குளித்து உச்சி-தன்னால் ஒளி மா மலர்ப் பாதம் நாளும் பணிவோம் நமக்கே நலம் ஆதலின்
 ஆது தாரான் எனிலும் தரும் அன்றியும் அன்பர் ஆய்ப்
 போதும் மாதே தொழுதும்-அவன் மன்னு புல்லாணியே            (9)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 1776 | இலங்கு முத்தும் பவளக் கொழுந்தும் எழில் தாமரைப் புலங்கள் முற்றும் பொழில் சூழ்ந்த அழகு ஆய புல்லாணிமேல்
 கலங்கல் இல்லாப் புகழான் கலியன் ஒலிமாலைகள்
 வலம்கொள் தொண்டர்க்கு இடம் ஆவது-பாடு இல் வைகுந்தமே (10)
 | 
 |  | 
		
			|  |  |  |