| இரண்டாம் ஆயிரம் திருமங்கை ஆழ்வார்
 பெரிய திருமொழி
 
 | 
		| திருக்குறுங்குடி: 2 | 
					
			
			
      | | 1797 | அக்கும் புலியின் அதளும் உடையார்-அவர் ஒருவர் பக்கம் நிற்க நின்ற பண்பர் ஊர்போலும்-
 தக்க மரத்தின் தாழ் சினை ஏறி தாய் வாயில்
 கொக்கின் பிள்ளை வெள் இறவு உண்ணும் குறுங்குடியே 1
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 1798 | துங்க ஆர் அரவத் திரை வந்து உலவ தொடு கடலுள் பொங்கு ஆர் அரவில் துயிலும் புனிதர் ஊர்போலும்-
 செங் கால் அன்னம் திகழ் தண் பணையில் பெடையோடும்
 கொங்கு ஆர் கமலத்து அலரில் சேரும் குறுங்குடியே 2
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 1799 | வாழக் கண்டோம் வந்து காண்மின் தொண்டீர்காள்!- கேழல் செங்கண் மா முகில் வண்ணர் மருவும் ஊர்-
 ஏழைச் செங்கால் இன் துணை நாரைக்கு இரை தேடி
 கூழைப் பார்வைக் கார் வயல் மேயும் குறுங்குடியே 3
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 1800 | சிரம் முன் ஐந்தும் ஐந்தும் சிந்தச் சென்று அரக்கன் உரமும் கரமும் துணித்த உரவோன் ஊர்போலும்-
 இரவும் பகலும் ஈன் தேன் முரல மன்று எல்லாம்
 குரவின் பூவே-தான் மணம் நாறும் குறுங்குடியே 4
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 1801 | கவ்வைக் களிற்று மன்னர் மாள கலி மாத் தேர் ஐவர்க்கு ஆய் அன்று அமரில் உய்த்தான் ஊர்போலும்-
 மை வைத்து இலங்கு கண்ணார்-தங்கள் மொழி ஒப்பான்
 கொவ்வைக் கனி வாய்க் கிள்ளை பேசும் குறுங்குடியே 5
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 1802 | தீ நீர் வண்ண மா மலர் கொண்டு விரை ஏந்தி தூ நீர் பரவித் தொழுமின் எழுமின் தொண்டீர்காள்!-
 மா நீர் வண்ணர் மருவி உறையும் இடம் வானில்
 கூன் நீர் மதியை மாடம் தீண்டும் குறுங்குடியே 6
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 1803 | வல்லிச் சிறு நுண் இடையாரிடை நீர் வைக்கின்ற அல்லல் சிந்தை தவிர அடைமின் அடியீர்காள்!-
 சொல்லில் திருவே அனையார் கனி வாய் எயிறு ஒப்பான்
 கொல்லை முல்லை மெல் அரும்பு ஈனும் குறுங்குடியே 7
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 1804 | நார் ஆர் இண்டை நாள் மலர் கொண்டு நம் தமர்காள் ஆரா அன்போடு எம்பெருமான் ஊர்-அடைமின்கள்-
 தாரா ஆரும் வார் புனல் மேய்ந்து வயல் வாழும்
 கூர் வாய் நாரை பேடையொடு ஆடும் குறுங்குடியே 8
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 1805 | நின்ற வினையும் துயரும் கெட மா மலர் ஏந்தி சென்று பணிமின் எழுமின் தொழுமின் தொண்டீர்காள்
 என்றும் இரவும் பகலும் வரி வண்டு இசை பாட
 குன்றின் முல்லை மன்றிடை நாறும் குறுங்குடியே 9
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 1806 | சிலையால் இலங்கை செற்றான் மற்று ஓர் சின வேழம் கொலை ஆர் கொம்பு கொண்டான் மேய குறுங்குடிமேல்
 கலை ஆர் பனுவல் வல்லான் கலியன் ஒலி மாலை
 நிலை ஆர் பாடல் பாடப் பாவம் நில்லாவே 10
 | 
 |  | 
		
			|  |  |  |