| இரண்டாம் ஆயிரம் திருமங்கை ஆழ்வார்
 பெரிய திருமொழி
 
 | 
		| திருமாலிருஞ்சோலை: 2 | 
					
			
			
      | | 1827 | மூவரில் முன் முதல்வன் முழங்கு ஆர் கடலுள் கிடந்து பூ வளர் உந்தி-தன்னுள் புவனம் படைத்து உண்டு உமிழ்ந்த
 தேவர்கள் நாயகனை திருமாலிருஞ்சோலை நின்ற
 கோவலர் கோவிந்தனை கொடி ஏர் இடை கூடும்கொலோ?            (1)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 1828 | புனை வளர் பூம் பொழில் ஆர் பொன்னி சூழ் அரங்க நகருள் முனைவனை மூவுலகும் படைத்த முதல் மூர்த்தி-தன்னை
 சினை வளர் பூம் பொழில் சூழ் திருமாலிருஞ்சோலை நின்றான்
 கனை கழல் காணும்கொலோ-கயல் கண்ணி எம் காரிகையே?            (2)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 1829 | உண்டு உலகு ஏழினையும் ஒரு பாலகன் ஆல் இலைமேல் கண்துயில் கொண்டு உகந்த கரு மாணிக்க மா மலையை
 திண் திறல் மா கரி சேர் திருமாலிருஞ்சோலை நின்ற
 அண்டர்-தம் கோவினை இன்று அணுகும்கொல்-என் ஆய்-இழையே?            (3)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 1830 | சிங்கம்-அது ஆய் அவுணன் திறல் ஆகம் முன் கீண்டு உகந்த பங்கய மா மலர்க் கண் பரனை எம் பரம் சுடரை
 திங்கள் நல் மா முகில் சேர் திருமாலிருஞ்சோலை நின்ற
 நங்கள் பிரானை இன்று நணுகும்கொல்-என் நல் நுதலே?            (4)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 1831 | தானவன் வேள்வி-தன்னில் தனியே குறள் ஆய் நிமிர்ந்து வானமும் மண்ணகமும் அளந்த திரிவிக்கிரமன்
 தேன் அமர் பூம் பொழில் சூழ் திருமாலிருஞ்சோலை நின்ற
 வானவர்-கோனை இன்று வணங்கித் தொழ வல்லள்கொலோ?            (5)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 1832 | நேசம் இலாதவர்க்கும் நினையாதவர்க்கும் அரியான் வாச மலர்ப் பொழில் சூழ் வட மா மதுரைப் பிறந்தான்
 தேசம் எல்லாம் வணங்கும் திருமாலிருஞ்சோலை நின்ற
 கேசவ நம்பி-தன்னைக் கெண்டை ஒண் கண்ணி காணும்கொலோ?            (6)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 1833 | புள்ளினை வாய் பிளந்து பொரு மா கரி கொம்பு ஒசித்து கள்ளச் சகடு உதைத்த கரு மாணிக்க மா மலையை
 தெள் அருவி கொழிக்கும் திருமாலிருஞ்சோலை நின்ற
 வள்ளலை வாள் நுதலாள் வணங்கித் தொழ வல்லள்கொலோ?            (7)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 1834 | பார்த்தனுக்கு அன்று அருளி பாரதத்து ஒரு தேர் முன் நின்று காத்தவன்-தன்னை விண்ணோர் கரு மாணிக்க மா மலையை
 தீர்த்தனை பூம் பொழில் சூழ் திருமாலிருஞ்சோலை நின்ற
 மூர்த்தியைக் கைதொழவும் முடியும் கொல்-என் மொய் குழற்கே?            (8)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 1835 | வலம்புரி ஆழியனை வரை ஆர் திரள் தோளன்-தன்னை புலம் புரி நூலவனை பொழில் வேங்கட வேதியனை
 சிலம்பு இயல் ஆறு உடைய திருமாலிருஞ்சோலை நின்ற
 நலம் திகழ் நாரணனை நணுகும் கொல்-என் நல் நுதலே?            (9)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 1836 | தேடற்கு அரியவனை திருமாலிருஞ்சோலை நின்ற ஆடல் பறவையனை அணி ஆய்-இழை காணும் என்று
 மாடக் கொடி மதிள் சூழ் மங்கையார் கலிகன்றி சொன்ன
 பாடல் பனுவல் பத்தும் பயில்வார்க்கு இல்லை-பாவங்களே            (10)
 | 
 |  | 
		
			|  |  |  |