| இரண்டாம் ஆயிரம் திருமங்கை ஆழ்வார்
 பெரிய திருமொழி
 
 | 
		| திருக்கோட்டியூர் | 
					
			
			
      | | 1837 | எங்கள் எம் இறை எம் பிரான் இமையோர்க்கு நாயகன் ஏத்து அடியவர்-
 தங்கள் தம் மனத்துப் பிரியாது அருள் புரிவான்-
 பொங்கு தண் அருவி புதம் செய்ய
 பொன்களே சிதற இலங்கு ஒளி
 செங்கமலம் மலரும்-திருக்கோட்டியூரானே             (1)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 1838 | எவ்வ நோய் தவிர்ப்பான் எமக்கு இறை இன் நகைத் துவர் வாய் நில-மகள்
 செவ்வி தோய வல்லான் திரு மா மகட்கு இனியான்-
 மௌவல் மாலை வண்டு ஆடும் மல்லிகை
 மாலையொடும் அணைந்த மாருதம்
 தெய்வம் நாற வரும்-திருக்கோட்டியூரானே             (2)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 1839 | வெள்ளியான் கரியான் மணி நிற வண்ணன் விண்ணவர்-தமக்கு இறை எமக்கு
 ஒள்ளியான் உயர்ந்தான் உலகு ஏழும் உண்டு உமிழ்ந்தான்-
 துள்ளு நீர் மொண்டு கொண்டு சாமரைக் கற்றை
 சந்தனம் உந்தி வந்து அசை
 தெள்ளு நீர்ப் புறவில்-திருக்கோட்டியூரானே             (3)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 1840 | ஏறும் ஏறி இலங்கும் ஒண் மழுப் பற்றும் ஈசற்கு இசைந்து உடம்பில் ஓர்
 கூறு-தான் கொடுத்தான் குல மா மகட்கு இனியான்-
 நாறு செண்பகம் மல்லிகை மலர் புல்கி
 இன் இள வண்டு நல் நறும்
 தேறல் வாய்மடுக்கும்-திருக்கோட்டியூரானே             (4)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 1841 | வங்க மா கடல் வண்ணன் மா மணி வண்ணன் விண்ணவர்-கோன் மதுமலர்த்
 தொங்கல் நீள் முடியான் நெடியான் படி கடந்தான்-
 மங்குல் தோய் மணி மாட வெண் கொடி
 மாகம்மீது உயர்ந்து ஏறி வான் உயர்
 திங்கள்-தான் அணவும்-திருக்கோட்டியூரானே             (5)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 1842 | காவலன் இலங்கைக்கு இறை கலங்க சரம் செல உய்த்து மற்று அவன்
 ஏவலம் தவிர்த்தான் என்னை ஆளுடை எம் பிரான்-
 நா வலம் புவி மன்னர் வந்து வணங்க மால்
 உறைகின்றது இங்கு என
 தேவர் வந்து இறைஞ்சும்-திருக்கோட்டியூரானே             (6)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 1843 | கன்று கொண்டு விளங்கனி எறிந்து ஆ-நிரைக்கு அழிவு என்று மா மழை
 நின்று காத்து உகந்தான் நில மா மகட்கு இனியான்-
 குன்றின் முல்லையின் வாசமும் குளிர்
 மல்லிகை மணமும் அளைந்து இளம்
 தென்றல் வந்து உலவும்-திருக்கோட்டியூரானே             (7)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 1844 | பூங் குருந்து ஒசித்து ஆனை காய்ந்து அரி மாச் செகுத்து அடியேனை ஆள் உகந்து
 ஈங்கு என்னுள் புகுந்தான் இமையோர்கள்-தம் பெருமான்-
 தூங்கு தண் பலவின் கனி தொகு
 வாழையின் கனியொடு மாங்கனி
 தேங்கு தண் புனல் சூழ்-திருக்கோட்டியூரானே             (8)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 1845 | கோவை இன் தமிழ் பாடுவார் குடம் ஆடுவார் தட மா மலர்மிசை
 மேவும் நான்முகனில் விளங்கு புரி நூலர்
 மேவும் நான்மறை வாணர் ஐவகை வேள்வி
 ஆறு அங்கம் வல்லவர் தொழும்
 தேவ-தேவபிரான்-திருக்கோட்டியூரானே             (9)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 1846 | ஆலும் மா வலவன் கலிகன்றி மங்கையர் தலைவன் அணி பொழில்
 சேல்கள் பாய் கழனித் திருக்கோட்டியூரானை
 நீல மா முகில் வண்ணனை நெடுமாலை
 இன் தமிழால் நினைந்த இந்
 நாலும் ஆறும் வல்லார்க்கு இடம் ஆகும்-வான் உலகே            (10)
 | 
 |  | 
		
			|  |  |  |