| இரண்டாம் ஆயிரம் திருமங்கை ஆழ்வார்
 பெரிய திருமொழி
 
 | 
		| பதினென் திருப்பதிகள் | 
					
			
			
      | | 1847 | ஒரு நல் சுற்றம் எனக்கு உயிர் ஒண் பொருள் வரும் நல் தொல் கதி ஆகிய மைந்தனை
 நெருநல் கண்டது நீர்மலை இன்று போய்
 கரு நெல் சூழ் கண்ணமங்கையுள் காண்டுமே            (1)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 1848 | பொன்னை மா மணியை அணி ஆர்ந்தது ஓர் மின்னை வேங்கடத்து உச்சியில் கண்டு போய்
 என்னை ஆளுடை ஈசனை எம்பிரான்-
 தன்னை யாம் சென்று காண்டும்-தண்காவிலே            (2)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 1849 | வேலை ஆல் இலைப் பள்ளி விரும்பிய பாலை ஆர் அமுதத்தினை பைந் துழாய்
 மாலை ஆலியில் கண்டு மகிழ்ந்து போய்
 ஞாலம் உன்னியைக் காண்டும்-நாங்கூரிலே            (3)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 1850 | துளக்கம் இல் சுடரை அவுணன் உடல் பிளக்கும் மைந்தனைப் பேரில் வணங்கிப் போய்
 அளப்பு இல் ஆர் அமுதை அமரர்க்கு அருள்
 விளக்கினைச் சென்று வெள்ளறைக் காண்டுமே            (4)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 1851 | சுடலையில் சுடு நீறன் அமர்ந்தது ஓர் நடலை தீர்த்தவனை நறையூர்க் கண்டு என்
 உடலையுள் புகுந்து உள்ளம் உருக்கி உண்
 விடலையைச் சென்று காண்டும்-மெய்யத்துள்ளே            (5)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 1852 | வானை ஆர் அமுதம் தந்த வள்ளலை தேனை நீள் வயல் சேறையில் கண்டு போய்
 ஆனை வாட்டி அருளும் அமரர்-தம்
 கோனை யாம் குடந்தைச் சென்று காண்டுமே            (6)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 1853 | கூந்தலார் மகிழ் கோவலன் ஆய் வெண்ணெய் மாந்து அழுந்தையில் கண்டு மகிழ்ந்து போய்
 பாந்தள்-பாழியில் பள்ளி விரும்பிய
 வேந்தனைச் சென்று காண்டும்-வெஃகாவுளே            (7)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 1854 | பத்தர் ஆவியை பால் மதியை அணித் தொத்தை மாலிருஞ்சோலைத் தொழுது போய்
 முத்தினை மணியை மணி மாணிக்க
 வித்தினைச் சென்று விண்ணகர்க் காண்டுமே            (8)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 1855 | கம்ப மா களிறு அஞ்சிக் கலங்க ஓர் கொம்பு கொண்ட குரை கழல் கூத்தனை
 கொம்பு உலாம் பொழில் கோட்டியூர்க் கண்டு போய்
 நம்பனைச் சென்று காண்டும்-நாவாயுளே            (9)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 1856 | பெற்ற மாளிகைப் பேரில் மணாளனை கற்ற நூல் கலிகன்றி உரைசெய்த
 சொல் திறம்-இவை சொல்லிய தொண்டர்கட்கு
 அற்றம் இல்லை அண்டம் அவர்க்கு ஆட்சியே            (10)
 | 
 |  | 
		
			|  |  |  |