| இரண்டாம் ஆயிரம் திருமங்கை ஆழ்வார்
 பெரிய திருமொழி
 
 | 
		| பொங்கத்தம் பொங்கோ | 
					
			
			
      | | 1857 | இரக்கம் இன்றி எம் கோன் செய்த தீமை இம்மையே எமக்கு எய்திற்றுக் காணீர்
 பரக்க யாம் இன்று உரைத்து என்? இராவணன்
 பட்டனன் இனி யாவர்க்கு உரைக்கோம்?
 குரக்கு-நாயகர்காள் இளங்கோவே
 கோல வல் வில் இராமபிரானே
 அரக்கர் ஆடு அழைப்பார் இல்லை நாங்கள்
 அஞ்சினோம்-தடம் பொங்கத்தம் பொங்கோ            (1)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 1858 | பத்து நீள் முடியும் அவற்று இரட்டிப் பாழித் தோளும் படைத்தவன் செல்வம்
 சித்தம் மங்கையர்பால் வைத்துக் கெட்டான்
 செய்வது ஒன்று அறியா அடியோங்கள்
 ஒத்த தோள் இரண்டும் ஒரு முடியும்
 ஒருவர்-தம் திறத்தோம் அன்றி வாழ்ந்தோம்
 அத்த எம் பெருமான் எம்மைக் கொல்லேல்
 அஞ்சினோம்-தடம் பொங்கத்தம் பொங்கோ            (2)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 1859 | தண்டகாரணியம் புகுந்து அன்று தையலை தகவிலி எம் கோமான்
 கொண்டுபோந்து கெட்டான் எமக்கு இங்கு ஓர்
 குற்றம் இல்லை கொல்லேல் குல வேந்தே
 பெண்டிரால் கெடும் இக் குடி-தன்னைப்
 பேசுகின்றது என்? தாசரதீ உன்
 அண்டவாணர் உகப்பதே செய்தாய்
 அஞ்சினோம்-தடம் பொங்கத்தம் பொங்கோ            (3)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 1860 | எஞ்சல் இல் இலங்கைக்கு இறை எம் கோன் தன்னை முன் பணிந்து எங்கள் கண்முகப்பே
 நஞ்சு-தான் அரக்கர் குடிக்கு என்று
 நங்கையை அவன் தம்பியே சொன்னான்
 விஞ்சை வானவர் வேண்டிற்றே பட்டோம்
 வேரி வார் பொழில் மா மயில் அன்ன
 அஞ்சு அல் ஓதியைக் கொண்டு நடமின்
 அஞ்சினோம்-தடம் பொங்கத்தம் பொங்கோ            (4)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 1861 | செம்பொன் நீள் முடி எங்கள் இராவணன் சீதை என்பது ஓர் தெய்வம் கொணர்ந்து
 வம்பு உலாம் கடி காவில் சிறையா
 வைத்ததே குற்றம் ஆயிற்றுக் காணீர்
 கும்பனோடு நிகும்பனும் பட்டான்
 கூற்றம் மானிடமாய் வந்து தோன்றி
 அம்பினால் எம்மைக் கொன்றிடுகின்றது
 அஞ்சினோம்-தடம் பொங்கத்தம் பொங்கோ             (5)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 1862 | ஓத மா கடலைக் கடந்து ஏறி உயர்கொள் மாக் கடி காவை இறுத்து
 காதல் மக்களும் சுற்றமும் கொன்று
 கடி இலங்கை மலங்க எரித்து
 தூது வந்த குரங்குக்கே உங்கள்
 தோன்றல் தேவியை விட்டுக் கொடாதே
 ஆதர் நின்று படுகின்றது அந்தோ
 அஞ்சினோம்-தடம் பொங்கத்தம் பொங்கோ            (6)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 1863 | தாழம் இன்றி முந்நீரை அஞ்ஞான்று தகைந்ததே கண்டு வஞ்சி நுண் மருங்குல்
 மாழை மான் மட நோக்கியை விட்டு
 வாழகில்லா மதி இல் மனத்தானை
 ஏழையை இலங்கைக்கு இறை-தன்னை
 எங்களை ஒழியக் கொலையவனை
 சூழுமா நினை மா மணி வண்ணா
 சொல்லினோம்-தடம் பொங்கத்தம் பொங்கோ            (7)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 1864 | மனம் கொண்டு ஏறும் மண்டோதரி முதலா அம் கயல் கண்ணினார்கள் இருப்ப
 தனம்கொள் மென் முலை நோக்கம் ஒழிந்து
 தஞ்சமே சில தாபதர் என்று
 புனம்கொள் மென் மயிலைச் சிறைவைத்த
 புன்மையாளன் நெஞ்சில் புக எய்த
 அனங்கன் அன்ன திண் தோள் எம் இராமற்கு
 அஞ்சினோம்-தடம் பொங்கத்தம் பொங்கோ            (8)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 1865 | புரங்கள் மூன்றும் ஓர் மாத்திரைப் போதில் பொங்கு எரிக்கு இரை கண்டவன் அம்பின்
 சரங்களே கொடிது ஆய் அடுகின்ற
 சாம்பவான் உடன் நிறகத் தொழுதோம்
 இரங்கு நீ எமக்கு எந்தை பிரானே
 இலங்கு வெம் கதிரோன்-தன் சிறுவா
 குரங்குகட்கு அரசே எம்மைக் கொல்லேல்
 கூறினோம்-தடம் பொங்கத்தம் பொங்கோ (9)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 1866 | அங்கு அவ் வானவர்க்கு ஆகுலம் தீர அணி இலங்கை அழித்தவன்-தன்னை
 பொங்கு மா வலவன் கலிகன்றி
 புகன்ற பொங்கத்தம் கொண்டு இவ் உலகினில்
 எங்கும் பாடி நின்று ஆடுமின் தொண்டீர்
 இம்மையே இடர் இல்லை இறந்தால்
 தங்கும் ஊர் அண்டமே கண்டு கொள்மின்
 சாற்றினோம்-தடம் பொங்கத்தம் பொங்கோ            (10)
 | 
 |  | 
		
			|  |  |  |