இரண்டாம் ஆயிரம் திருமங்கை ஆழ்வார் பெரிய திருமொழி
|
| சப்பாணி கொட்ட வேண்டுதல் |
| 1887 | பூங் கோதை ஆய்ச்சி கடை வெண்ணெய் புக்கு உண்ண ஆங்கு அவள் ஆர்த்துப் புடைக்க புடையுண்டு ஏங்கி இருந்து சிணுங்கி விளையாடும் ஓங்கு ஓத வண்ணனே சப்பாணி ஒளி மணி வண்ணனே சப்பாணி (1) | |
|
| |
|
|
| 1888 | தாயர் மனங்கள் தடிப்ப தயிர் நெய் உண்டு ஏய் எம் பிராக்கள் இரு நிலத்து எங்கள்-தம் ஆயர் அழக அடிகள் அரவிந்த வாயவனே கொட்டாய் சப்பாணி மால் வண்ணனே கொட்டாய் சப்பாணி 2 | |
|
| |
|
|
| 1889 | தாம் மோர் உருட்டி தயிர் நெய் விழுங்கிட்டு தாமோ தவழ்வர் என்று ஆய்ச்சியர் தாம்பினால் தாம் மோதரக் கையால் ஆர்க்க தழும்பு இருந்த தாமோதரா கொட்டாய் சப்பாணி தாமரைக் கண்ணனே சப்பாணி (3) | |
|
| |
|
|
| 1890 | பெற்றார் தளை கழலப் பேர்ந்து அங்கு அயல் இடத்து உற்றார் ஒருவரும் இன்றி உலகினில் மற்றாரும் அஞ்சப் போய் வஞ்சப் பெண் நஞ்சு உண்ட கற்றாயனே கொட்டாய் சப்பாணி கார் வண்ணனே கொட்டாய் சப்பாணி (4) | |
|
| |
|
|
| 1891 | சோத்து என நின்னைத் தொழுவன் வரம் தர பேய்ச்சி முலை உண்ட பிள்ளாய் பெரியன ஆய்ச்சியர் அப்பம் தருவர் அவர்க்காகச் சாற்றி ஓர் ஆயிரம் சப்பாணி தடங் கைகளால் கொட்டாய் சப்பாணி (5) | |
|
| |
|
|
| 1892 | கேவலம் அன்று உன் வயிறு வயிற்றுக்கு நான் அவல் அப்பம் தருவன் கருவிளைப் பூ அலர் நீள் முடி நந்தன்-தன் போர் ஏறே கோவலனே கொட்டாய் சப்பாணி குடம் ஆடீ கொட்டாய் சப்பாணி (6) | |
|
| |
|
|
| 1893 | புள்ளினை வாய் பிளந்து பூங் குருந்தம் சாய்த்து துள்ளி விளையாடி தூங்கு உறி வெண்ணெயை அள்ளிய கையால் அடியேன் முலை நெருடும் பிள்ளைப் பிரான் கொட்டாய் சப்பாணி பேய் முலை உண்டானே சப்பாணி (7) | |
|
| |
|
|
| 1894 | யாயும் பிறரும் அறியாத யாமத்து மாய வலவைப் பெண் வந்து முலை தர பேய் என்று அவளைப் பிடித்து உயிர் உண்ட வாயவனே கொட்டாய் சப்பாணி மால்வண்ணனே கொட்டாய் சப்பாணி (8) | |
|
| |
|
|
| 1895 | கள்ளக் குழவி ஆய் காலால் சகடத்தைத் தள்ளி உதைத்திட்டு தாய் ஆய் வருவாளை மெள்ளத் தொடர்ந்து பிடித்து ஆர் உயிர் உண்ட வள்ளலே கொட்டாய் சப்பாணி மால் வண்ணனே கொட்டாய் சப்பாணி (9) | |
|
| |
|
|
| 1896 | கார் ஆர் புயல் கைக் கலிகன்றி மங்கையர்-கோன் பேராளன் நெஞ்சில் பிரியாது இடம்கொண்ட சீராளா செந்தாமரைக் கண்ணா தண் துழாய்த் தார் ஆளா கொட்டாய் சப்பாணி தட மார்வா கொட்டாய் சப்பாணி (10) | |
|
| |
|
|