| இரண்டாம் ஆயிரம் திருமங்கை ஆழ்வார்
 பெரிய திருமொழி
 
 | 
		| பிரிவு ஆற்றாத தலைவி இரங்கிக் கூறுதல் | 
					
			
			
      | | 1951 | குன்றம் ஒன்று எடுத்து ஏந்தி மா மழை அன்று காத்த அம்மான் அரக்கரை
 வென்ற வில்லியார் வீரமே கொலோ-
 தென்றல் வந்து தீ வீசும்? என் செய்கேன்            (1)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 1952 | காரும் வார் பனிக் கடலும் அன்னவன் தாரும் மார்வமும் கண்ட தண்டமோ-
 சோரும் மா முகில் துளியினூடு வந்து
 ஈர வாடை-தான் ஈரும் என்னையே? 2
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 1953 | சங்கும் மாமையும் தளரும் மேனிமேல் திங்கள் வெம் கதிர் சீறும்-என் செய்கேன்?-
 பொங்கு வெண் திரைப் புணரி வண்ணனார்
 கொங்கு அலர்ந்த தார் கூவும் என்னையே 3
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 1954 | அங்கு ஓர் ஆய்க்குலத்துள் வளர்ந்து சென்று அங்கு ஓர் தாய் உரு ஆகி வந்தவள்
 கொங்கை நஞ்சு உண்ட கோயின்மை கொலோ-
 திங்கள் வெம் கதிர் சீறுகின்றதே? 4
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 1955 | அங்கு ஓர் ஆள் அரி ஆய் அவுணனை பங்கமா இரு கூறு செய்தவன்
 மங்குல் மா மதி வாங்கவே கொலோ-
 பொங்கு மா கடல் புலம்புகின்றதே? 5
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 1956 | சென்று வார் சிலை வளைத்து இலங்கையை வென்ற வில்லியார் வீரமே கொலோ-
 முன்றில் பெண்ணைமேல் முளரிக் கூட்டகத்து
 அன்றிலின் குரல் அடரும் என்னையே? 6
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 1957 | பூவை வண்ணனார் புள்ளின்மேல் வர மேவி நின்று நான் கண்ட தண்டமோ-
 வீவு இல் ஐங்கணை வில்லி அம்பு கோத்து
 ஆவியே இலக்கு ஆக எய்வதே? 7
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 1958 | மால் இனம் துழாய் வரும் என் நெஞ்சகம் மாலின் அம் துழாய் வந்து என் உள்புக
 கோல வாடையும் கொண்டு வந்தது ஓர்
 ஆலி வந்ததால்-அரிது காவலே 8
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 1959 | கெண்டை ஒண் கணும் துயிலும் என் நிறம் பண்டு பண்டு போல் ஒக்கும்-மிக்க சீர்த்
 தொண்டர் இட்ட பூந் துளவின் வாசமே
 வண்டு கொண்டுவந்து ஊதுமாகிலே 9
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 1960 | அன்று பாரதத்து ஐவர் தூதனாய்ச் சென்ற மாயனை செங் கண் மாலினை
 மன்றில் ஆர் புகழ் மங்கை வாள் கலி-
 கன்றி சொல் வல்லார்க்கு அல்லல் இல்லையே 10
 | 
 |  | 
		
			|  |  |  |