இரண்டாம் ஆயிரம் திருமங்கை ஆழ்வார் பெரிய திருமொழி
|
| பிரிவு ஆற்றாத தலைவி இரங்கிக் கூறுதல் |
| 1951 | குன்றம் ஒன்று எடுத்து ஏந்தி மா மழை அன்று காத்த அம்மான் அரக்கரை வென்ற வில்லியார் வீரமே கொலோ- தென்றல் வந்து தீ வீசும்? என் செய்கேன் (1) | |
|
| |
|
|
| 1952 | காரும் வார் பனிக் கடலும் அன்னவன் தாரும் மார்வமும் கண்ட தண்டமோ- சோரும் மா முகில் துளியினூடு வந்து ஈர வாடை-தான் ஈரும் என்னையே? 2 | |
|
| |
|
|
| 1953 | சங்கும் மாமையும் தளரும் மேனிமேல் திங்கள் வெம் கதிர் சீறும்-என் செய்கேன்?- பொங்கு வெண் திரைப் புணரி வண்ணனார் கொங்கு அலர்ந்த தார் கூவும் என்னையே 3 | |
|
| |
|
|
| 1954 | அங்கு ஓர் ஆய்க்குலத்துள் வளர்ந்து சென்று அங்கு ஓர் தாய் உரு ஆகி வந்தவள் கொங்கை நஞ்சு உண்ட கோயின்மை கொலோ- திங்கள் வெம் கதிர் சீறுகின்றதே? 4 | |
|
| |
|
|
| 1955 | அங்கு ஓர் ஆள் அரி ஆய் அவுணனை பங்கமா இரு கூறு செய்தவன் மங்குல் மா மதி வாங்கவே கொலோ- பொங்கு மா கடல் புலம்புகின்றதே? 5 | |
|
| |
|
|
| 1956 | சென்று வார் சிலை வளைத்து இலங்கையை வென்ற வில்லியார் வீரமே கொலோ- முன்றில் பெண்ணைமேல் முளரிக் கூட்டகத்து அன்றிலின் குரல் அடரும் என்னையே? 6 | |
|
| |
|
|
| 1957 | பூவை வண்ணனார் புள்ளின்மேல் வர மேவி நின்று நான் கண்ட தண்டமோ- வீவு இல் ஐங்கணை வில்லி அம்பு கோத்து ஆவியே இலக்கு ஆக எய்வதே? 7 | |
|
| |
|
|
| 1958 | மால் இனம் துழாய் வரும் என் நெஞ்சகம் மாலின் அம் துழாய் வந்து என் உள்புக கோல வாடையும் கொண்டு வந்தது ஓர் ஆலி வந்ததால்-அரிது காவலே 8 | |
|
| |
|
|
| 1959 | கெண்டை ஒண் கணும் துயிலும் என் நிறம் பண்டு பண்டு போல் ஒக்கும்-மிக்க சீர்த் தொண்டர் இட்ட பூந் துளவின் வாசமே வண்டு கொண்டுவந்து ஊதுமாகிலே 9 | |
|
| |
|
|
| 1960 | அன்று பாரதத்து ஐவர் தூதனாய்ச் சென்ற மாயனை செங் கண் மாலினை மன்றில் ஆர் புகழ் மங்கை வாள் கலி- கன்றி சொல் வல்லார்க்கு அல்லல் இல்லையே 10 | |
|
| |
|
|