இரண்டாம் ஆயிரம் திருமங்கை ஆழ்வார் பெரிய திருமொழி
|
| தலைவி பிரிவு ஆற்றாது வருந்திக் கூறுதல் |
| 1961 | குன்றம் எடுத்து மழை தடுத்து இளையாரொடும் மன்றில் குரவை பிணைந்த மால் என்னை மால்செய்தான் முன்றில் தனி நின்ற பெண்ணைமேல் கிடந்து ஈர்கின்ற அன்றிலின் கூட்டைப் பிரிக்ககிற்பவர் ஆர்கொலோ? 1 | |
|
| |
|
|
| 1962 | பூங் குருந்து ஒசித்து ஆனை காய்ந்து அரி மாச் செகுத்து ஆங்கு வேழத்தின் கொம்பு கொண்டு வன் பேய் முலை வாங்கி உண்ட அவ் வாயன் நிற்க இவ் ஆயன் வாய் ஏங்கு வேய்ங்குழல் என்னோடு ஆடும் இளமையே 2 |
|
|
| |
|
|
| 1963 | மல்லொடு கஞ்சனும் துஞ்ச வென்ற மணிவண்ணன் அல்லி மலர்த் தண் துழாய் நினைந்திருந்தேனையே எல்லியில் மாருதம் வந்து அடும் அது அன்றியும் கொல்லை வல் ஏற்றின் மணியும் கோயின்மை செய்யுமே 3 | |
|
| |
|
|
| 1964 | பொருந்து மா மரம் ஏழும் எய்த புனிதனார் திருந்து சேவடி என் மனத்து நினைதொறும் கருந் தண் மா கடல் கங்குல் ஆர்க்கும் அது அன்றியும் வருந்த வாடை வரும் இதற்கு இனி என் செய்கேன்? 4 | |
|
| |
|
|
| 1965 | அன்னை முனிவதும் அன்றிலின் குரல் ஈர்வதும் மன்னு மறி கடல் ஆர்ப்பதும் வளை சோர்வதும்- பொன் அம் கலை அல்குல் அன்ன மென் நடை பூங் குழல்- பின்னை மணாளர்திறத்தம் ஆயின பின்னையே 5 | |
|
| |
|
|
| 1966 | ஆழியும் சங்கும் உடைய நங்கள் அடிகள்-தாம் பாழிமையான கனவில் நம்மைப் பகர்வித்தார் தோழியும் நானும் ஒழிய வையம் துயின்றது கோழியும் கூகின்றது இல்லை கூர் இருள் ஆயிற்றே 6 | |
|
| |
|
|
| 1967 | காமன்-தனக்கு முறை அல்லேன் கடல் வண்ணனார் மா மணவாளர் எனக்குத் தானும் மகன் சொல்லில் யாமங்கள் தோறு எரி வீசும் என் இளங் கொங்கைகள் மா மணி வண்ணர்திறத்தவாய் வளர்கின்றவே 7 | |
|
| |
|
|
| 1968 | மஞ்சு உறு மாலிருஞ்சோலை நின்ற மணாளனார் நெஞ்சம் நிறைகொண்டு போயினார் நினைகின்றிலர் வெம் சுடர் போய் விடியாமல் எவ்விடம் புக்கதோ? நஞ்சு உடலம் துயின்றால் நமக்கு இனி நல்லதே 8 | |
|
| |
|
|
| 1969 | காமன் கணைக்கு ஓர் இலக்கம் ஆய் நலத்தின் மிகு பூ மரு கோலம் நம் பெண்மை சிந்தித்து இராது போய் தூ மலர் நீர் கொடு தோழி நாம் தொழுது ஏத்தினால் கார் முகில் வண்ணரைக் கண்களால் காணல் ஆம்கொலோ? 9 | |
|
| |
|
|
| 1970 | வென்றி விடை உடன் ஏழ் அடர்த்த அடிகளை மன்றில் மலி புகழ் மங்கை மன் கலிகன்றி சொல் ஒன்று நின்ற ஒன்பதும் உரைப்பவர்-தங்கள்மேல் என்றும் நில்லா வினை ஒன்றும் சொல்லில் உலகிலே 10 | |
|
| |
|
|