| இரண்டாம் ஆயிரம் திருமங்கை ஆழ்வார்
 பெரிய திருமொழி
 
 | 
		| தலைவி இரங்கிக் கூறல் | 
					
			
			
      | | 1971 | மன் இலங்கு பாரதத்துத் தேர் ஊர்ந்து மாவலியைப் பொன் இலங்கு திண் விலங்கில் வைத்து பொரு கடல் சூழ்
 தென் இலங்கை ஈடு அழித்த தேவர்க்கு-இது காணீர்-
 என் இலங்கு சங்கோடு எழில் தோற்றிருந்தேனே 1
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 1972 | இருந்தான் என் உள்ளத்து இறைவன் கறை சேர் பருந் தாள் களிற்றுக்கு அருள் செய்த செங் கண்
 பெருந் தோள் நெடுமாலைப் பேர் பாடி ஆட
 வருந்தாது என் கொங்கை ஒளி மன்னும் அன்னே 2
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 1973 | அன்னே இவரை அறிவன் மறை நான்கும் முன்னே உரைத்த முனிவர் இவர் வந்து
 பொன் ஏய் வளை கவர்ந்து போகார் மனம் புகுந்து
 என்னே-இவர் எண்ணும் எண்ணம்? அறியோமே 3
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 1974 | அறியோமே என்று உரைக்கல் ஆமே எமக்கு- வெறி ஆர் பொழில் சூழ் வியன் குடந்தை மேவி
 சிறியான் ஓர் பிள்ளை ஆய் மெள்ள நடந்திட்டு
 உறி ஆர் நறு வெண்ணெய் உண்டு உகந்தார்-தம்மையே? 4
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 1975 | தம்மையே நாளும் வணங்கித் தொழுவார்க்குத் தம்மையே ஒக்க அருள் செய்வர் ஆதலால்
 தம்மையே நாளும் வணங்கித் தொழுது இறைஞ்சி
 தம்மையே பற்றா மனத்து என்றும் வைத்தோமே 5
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 1976 | வைத்தார் அடியார் மனத்தினில் வைத்து இன்பம் உய்த்தார்-ஒளி விசும்பில் ஓர் அடி வைத்து ஓர் அடிக்கும்
 எய்த்தாது மண் என்று இமையோர் தொழுது ஏத்தி
 கைத்தாமரை குவிக்கும் கண்ணன் என் கண்ணனையே 6
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 1977 | கண்ணன் மனத்துள்ளே நிற்கவும் கை வளைகள் என்னோ கழன்ற? இவை என்ன மாயங்கள்?
 பெண் ஆனோம் பெண்மையோம் நிற்க அவன் மேய
 அண்ணல் மலையும் அரங்கமும் பாடோமே? 7
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 1978 | பாடோமே-எந்தை பெருமானை? பாடிநின்று ஆடோமே-ஆயிரம் பேரானை? பேர் நினைந்து
 சூடோமே-சூடும் துழாய் அலங்கல்? சூடி நாம்
 கூடோமே-கூடக் குறிப்பு ஆகில்? நல் நெஞ்சே 8
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 1979 | நல் நெஞ்சே நம் பெருமான் நாளும் இனிது அமரும் அன்னம் சேர் கானல் அணி ஆலி கைதொழுது
 முன்னம் சேர் வல்வினைகள் போக முகில் வண்ணன்
 பொன்னம் சேர் சேவடிமேல் போது அணியப்பெற்றோமே 9
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 1980 | பெற்று ஆரார்-ஆயிரம் பேரானைப் பேர் பாட பெற்றான் கலியன் ஒலிசெய் தமிழ்-மாலை
 கற்றார் ஓ முற்று உலகு ஆள்வர் இவை கேட்கல்
 உற்றார்க்கு உறு துயர் இல்லை உலகத்தே 10
 | 
 |  | 
		
			|  |  |  |