| இரண்டாம் ஆயிரம் திருமங்கை ஆழ்வார்
 பெரிய திருமொழி
 
 | 
		| திருச்சாழல் | 
					
			
			
      | | 1991 | மான் அமரும் மென் நோக்கி வைதேவி இன் துணையா கான் அமரும் கல் அதர் போய் காடு உறைந்தான் காண் ஏடீ!-
 கான் அமரும் கல் அதர் போய் காடு உறைந்த பொன் அடிக்கள்
 வானவர்-தம் சென்னி மலர் கண்டாய் சாழலே 1
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 1992 | தந்தை தளை கழலத் தோன்றிப் போய் ஆய்ப்பாடி நந்தன் குல மதலையாய் வளர்ந்தான் காண் ஏடீ!-
 நந்தன் குல மதலையாய் வளர்ந்தான் நான்முகற்குத்
 தந்தை காண் எந்தை பெருமான் காண் சாழலே 2
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 1993 | ஆழ் கடல் சூழ் வையகத்தார் ஏசப் போய் ஆய்ப்பாடித் தாழ் குழலார் வைத்த தயிர் உண்டான் காண் ஏடீ
 தாழ் குழலார் வைத்த தயிர் உண்ட பொன் வயிறு இவ்
 ஏழ் உலகும் உண்டும் இடம் உடைத்தால் சாழலே 3
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 1994 | அறியாதார்க்கு ஆன் ஆயன் ஆகிப் போய் ஆய்ப்பாடி உறி ஆர் நறு வெண்ணெய் உண்டு உகந்தான் காண் ஏடீ!-
 உறி ஆர் நறு வெண்ணெய் உண்டு உகந்த பொன் வயிற்றுக்கு
 எறி நீர் உலகு அனைத்தும் எய்தாதால் சாழலே 4
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 1995 | வண்ணக் கருங் குழல் ஆய்ச்சியால் மொத்துண்டு கண்ணிக் குறுங் கயிற்றால் கட்டுண்டான் காண் ஏடீ-
 கண்ணிக் குறுங் கயிற்றால் கட்டுண்டான் ஆகிலும்
 எண்ணற்கு அரியன் இமையோர்க்கும் சாழலே             (5)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 1996 | கன்றப் பறை கறங்க கண்டவர்-தம் கண் களிப்ப மன்றில் மரக்கால் கூத்து ஆடினான் காண் ஏடீ!-
 மன்றில் மரக்கால் கூத்து ஆடினான் ஆகிலும்
 என்றும் அரியன் இமையோர்க்கும் சாழலே             (6)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 1997 | கோதை வேல் ஐவர்க்கு ஆய் மண் அகலம் கூறு இடுவான் தூதன் ஆய் மன்னவனால் சொல்லுண்டான் காண் ஏடீ!-
 தூதன் ஆய் மன்னவனால் சொல்லுண்டான் ஆகிலும்
 ஓத நீர் வையகம் முன் உண்டு உமிழ்ந்தான் சாழலே             (7)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 1998 | பார் மன்னர் மங்கப் படைதொட்டு வெம் சமத்துத் தேர் மன்னற்கு ஆய் அன்று தேர் ஊர்ந்தான் காண் ஏடீ!-
 தேர் மன்னற்கு ஆய் அன்று தேர் ஊர்ந்தான் ஆகிலும்
 தார் மன்னர்-தங்கள் தலைமேலான் சாழலே             (8)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 1999 | கண்டார் இரங்க கழியக் குறள் உரு ஆய் வண் தாரான் வேள்வியில் மண் இரந்தான் காண் ஏடீ
 வண் தாரான் வேள்வியில் மண் இரந்தான் ஆகிலும்
 விண்டு ஏழ் உலகுக்கும் மிக்கான் காண் சாழலே             (9)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 2000 | கள்ளத்தால் மாவலியை மூவடி மண் கொண்டு அளந்தான் வெள்ளத்தான் வேங்கடத்தான் என்பரால் காண் ஏடீ!-
 வெள்ளத்தான் வேங்கடத்தானேலும் கலிகன்றி
 உள்ளத்தின் உள்ளே உளன் கண்டாய் சாழலே             (10)
 | 
 |  | 
		
			|  |  |  |