இரண்டாம் ஆயிரம் திருமங்கை ஆழ்வார் பெரிய திருமொழி
|
எம்பெருமான் திறத்தில் உதவாத அவயவங்கள் பயனற்றன எனல் |
2011 | நீள் நாகம் சுற்றி நெடு வரை நட்டு ஆழ் கடலைப் பேணான் கடைந்து அமுதம் கொண்டு உகந்த பெம்மானை பூண் ஆர மார்வனை புள் ஊரும் பொன் மலையை- காணாதார் கண் என்றும் கண் அல்ல கண்டாமே 1 | |
|
|
|
|
2012 | நீள்வான் குறள் உரு ஆய் நின்று இரந்து மாவலி மண் தாளால் அளவிட்ட தக்கணைக்கு மிக்கானை தோளாத மா மணியை தொண்டர்க்கு இனியானை- கேளாச் செவிகள் செவி அல்ல கேட்டாமே 2 | |
|
|
|
|
2013 | தூயானை தூய மறையானை தென் ஆலி மேயானை மேவாள் உயிர் உண்டு அமுது உண்ட வாயானை மாலை-வணங்கி அவன் பெருமை பேசாதார் பேச்சு என்றும் பேச்சு அல்ல கேட்டாமே 3 | |
|
|
|
|
2014 | கூடா இரணியனைக் கூர் உகிரால் மார்வு இடந்த ஓடா அடல் அரியை உம்பரார் கோமானை தோடு ஆர் நறுந் துழாய் மார்வனை-ஆர்வத்தால் பாடாதார் பாட்டு என்றும் பாட்டு அல்ல கேட்டாமே 4 | |
|
|
|
|
2015 | மை ஆர் கடலும் மணி வரையும் மா முகிலும் கொய் ஆர் குவளையும் காயாவும் போன்று இருண்ட மெய்யானை மெய்ய மலையானை சங்கு ஏந்தும் கையானை-கை தொழா கை அல்ல கண்டாமே 5 | |
|
|
|
|
2016 | கள் ஆர் துழாயும் கணவலரும் கூவிளையும் முள் ஆர் முளரியும் ஆம்பலும் முன் கண்டக்கால் புள் ஆய் ஓர் ஏனம் ஆய்ப் புக்கு இடந்தான் பொன் அடிக்கு என்று- உள்ளாதார் உள்ளத்தை உள்ளமாக் கொள்ளோமே 6 | |
|
|
|
|
2017 | கனை ஆர் கடலும் கருவிளையும் காயாவும் அனையானை-அன்பினால் ஆர்வத்தால் என்றும் சுனை ஆர் மலர் இட்டு தொண்டராய் நின்று நினையாதார் நெஞ்சு என்றும் நெஞ்சு அல்ல கண்டாமே 7 | |
|
|
|
|
2018 | வெறி ஆர் கருங் கூந்தல் ஆய்ச்சியர் வைத்த உறி ஆர் நறு வெண்ணெய் தான் உகந்து உண்ட சிறியானை செங் கண் நெடியானை-சிந்தித்து அறியாதார் என்றும் அறியாதார் கண்டாமே 8 | |
|
|
|
|
2019 | தேனொடு வண்டு ஆலும் திருமாலிருஞ்சோலை தான் இடமாக் கொண்டான் தட மலர்க் கண்ணிக்காய் ஆன் விடை ஏழ் அன்று அடர்த்தாற்கு-ஆள் ஆனார் அல்லாதார் மானிடவர் அல்லர் என்று என் மனத்தே வைத்தேனே 9 | |
|
|
|
|
2020 | மெய்ந் நின்ற பாவம் அகல திருமாலைக் கைந் நின்ற ஆழியான் சூழும் கழல் சூடிக் கைந் நின்ற வேல் கைக் கலியன் ஒலி மாலை ஐயொன்றும் ஐந்தும் இவை-பாடி ஆடுமினே 10 | |
|
|
|
|