| மூன்றாம் ஆயிரம் இயற்பா
 பேயாழ்வார்
 
 | 
		| மூன்றாம் திருவந்தாதி | 
					
			
			
      | | 2281 | திருக் கண்டேன் பொன் மேனி கண்டேன் திகழும் அருக்கன் அணி நிறமும் கண்டேன் செருக் கிளரும்
 பொன் ஆழி கண்டேன் புரி சங்கம் கைக் கண்டேன்
 என் ஆழி வண்ணன்பால் இன்று             (1)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 2282 | இன்றே கழல் கண்டேன் ஏழ் பிறப்பும் யான் அறுத்தேன் பொன் தோய் வரை மார்பில் பூந் துழாய் அன்று
 திருக் கண்டு கொண்ட திருமாலே உன்னை
 மருக்கண்டுகொண்டு என் மனம்             (2)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 2283 | மனத்து உள்ளான் மா கடல் நீர் உள்ளான் மலராள் தனத்து உள்ளான் தண் துழாய் மார்பன் சினத்துச்
 செருநர் உகச் செற்று உகந்த தேங்கு ஓத வண்ணன்
 வரு நரகம் தீர்க்கும் மருந்து             (3)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 2284 | மருந்தும் பொருளும் அமுதமும் தானே திருந்திய செங் கண் மால் ஆங்கே பொருந்தியும்
 நின்று உலகம் உண்டு உமிழ்ந்து நீர் ஏற்று மூவடியால்
 அன்று உலகம் தாயோன் அடி             (4)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 2285 | அடி வண்ணம் தாமரை அன்று உலகம் தாயோன் படி வண்ணம் பார்க் கடல் நீர் வண்ணம் முடி வண்ணம்
 ஓர் ஆழி வெய்யோன் ஒளியும் அஃது அன்றே
 ஆர் ஆழி கொண்டாற்கு அழகு             (5)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 2286 | அழகு அன்றே ஆழியாற்கு ஆழி நீர் வண்ணம்? அழகு அன்றே அண்டம் கடத்தல்? அழகு அன்றே
 அங்கை நீர் ஏற்றாற்கு அலர் மேலோன் கால் கழுவ
 கங்கை நீர் கான்ற கழல்?             (6)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 2287 | கழல் தொழுதும் வா நெஞ்சே! கார்க் கடல் நீர் வேலைப் பொழில் அளந்த புள் ஊர்திச் செல்வன் எழில் அளந்து அங்கு
 எண்ணற்கு அரியானை எப் பொருட்கும் சேயானை
 நண்ணற்கு அரியானை நாம்             (7)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 2288 | நாமம் பல சொல்லி நாராயணா என்று நாம் அங்கையால் தொழுதும் நல் நெஞ்சே வா மருவி
 மண்ணுலகம் உண்டு உமிழ்ந்த வண்டு அறையும் தண் துழாய்
 கண்ணனையே காண்க நம் கண்             (8)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 2289 | கண்ணும் கமலம் கமலமே கைத்தலமும் மண் அளந்த பாதமும் மற்று அவையே எண்ணில்
 கரு மா முகில் வண்ணன் கார்க் கடல் நீர் வண்ணன்
 திரு மா மணி வண்ணன் தேசு             (9)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 2290 | தேசும் திறலும் திருவும் உருவமும் மாசு இல் குடிப்பிறப்பும் மற்றவையும் பேசில்
 வலம் புரிந்த வான் சங்கம் கொண்டான் பேர் ஓத
 நலம் புரிந்து சென்று அடையும் நன்கு             (10)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 2291 | நன்கு ஓதும் நால் வேதத்து உள்ளான் நறவு இரியும் பொங்கு ஓதருவிப் புனல் வண்ணன் சங்கு ஓதப்
 பாற்கடலான் பாம்பு அணையின் மேலான் பயின்று உரைப்பார்
 நூல் கடலான் நுண் அறிவினான்             (11)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 2292 | அறிவு என்னும் தாள் கொளுவி ஐம்புலனும் தம்மில் செறிவு என்னும் திண் கதவம் செம்மி மறை என்றும்
 நன்கு ஓதி நன்கு உணர்வார் காண்பரே நாள்தோறும்
 பைங்கோத வண்ணன் படி             (12)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 2293 | படி வட்டத் தாமரை பண்டு உலகம் நீர் ஏற்று அடி வட்டத்தால் அளப்ப நீண்ட முடி வட்டம்
 ஆகாயம் ஊடறுத்து அண்டம் போய் நீண்டதே
 மா காயமாய் நின்ற மாற்கு             (13)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 2294 | மால்பால் மனம் சுழிப்ப மங்கையர் தோள் கைவிட்டு நூல்பால் மனம் வைக்க நொய்விது ஆம் நால் பால
 வேதத்தான் வேங்கடத்தான் விண்ணோர் முடி தோயும்
 பாதத்தான் பாதம் பணிந்து             (14)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 2295 | பணிந்து உயர்ந்த பௌவப் படு திரைகள் மோத பணிந்த பண மணிகளாலே அணிந்து அங்கு
 அனந்தன் அணைக் கிடக்கும் அம்மான் அடியேன்
 மனம் தன் அணைக் கிடக்கும் வந்து             (15)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 2296 | வந்து உதைத்த வெண் திரைகள் செம் பவள வெண் முத்தம் அந்தி விளக்கும் அணி விளக்காம் எந்தை
 ஒரு அல்லித் தாமரையாள் ஒன்றிய சீர் மார்வன்
 திருவல்லிக்கேணியான் சென்று             (16)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 2297 | சென்ற நாள் செல்லாத செங்கண் மால் எங்கள் மால் என்ற நாள் எந் நாளும் நாள் ஆகும் என்றும்
 இறவாத எந்தை இணை அடிக்கே ஆளாய்
 மறவாது வாழ்த்துக என் வாய்             (17)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 2298 | வாய் மொழிந்து வாமனனாய் மாவலிபால் மூவடி மண் நீ அளந்து கொண்ட நெடுமாலே தாவிய நின்
 எஞ்சா இணை அடிக்கே ஏழ் பிறப்பும் ஆளாகி
 அஞ்சாது இருக்க அருள்             (18)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 2299 | அருளாது ஒழியுமே ஆல் இலைமேல் அன்று தெருளாத பிள்ளையாய்ச் சேர்ந்தான் இருளாத
 சிந்தையராய் சேவடிக்கே செம் மலர் தூய் கைதொழுது
 முந்தையராய் நிற்பார்க்கு முன்?             (19)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 2300 | அருளாது ஒழியுமே ஆல் இலைமேல் அன்று தெருளாத பிள்ளையாய்ச் சேர்ந்தான் இருளாத
 சிந்தையராய் சேவடிக்கே செம் மலர் தூய் கைதொழுது
 ந்தையராய் நிற்பார்க்கு முன்?             (20)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 2301 | பேசுவார் எவ்வளவு பேசுவர் அவ்வளவே வாச மலர்த் துழாய் மாலையான் தேசு உடைய
 சக்கரத்தான் சங்கினான் சார்ங்கத்தான் பொங்கு அரவ
 வக்கரனைக் கொன்றான் வடிவு             (21)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 2302 | வடிவு ஆர் முடி கோட்டி வானவர்கள் நாளும் கடி ஆர் மலர் தூவி காணும் படியானை
 செம்மையால் உள் உருகி செவ்வனே நெஞ்சமே
 மெய்ம்மையே காண விரும்பு             (22)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 2303 | விரும்பி விண் மண் அளந்த அஞ் சிறைய வண்டு ஆர் சுரும்பு தொளையில் சென்று ஊத அரும்பும்
 புனந் துழாய் மாலையான் பொன் அம் கழற்கே
 மனம் துழாய் மாலாய் வரும்             (23)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 2304 | வருங்கால் இரு நிலனும் மால் விசும்பும் காற்றும் நெருங்கு தீ நீர் உருவும் ஆனான் பொருந்தும்
 சுடர் ஆழி ஒன்று உடையான் சூழ் கழலே நாளும்
 தொடர் ஆழி நெஞ்சே தொழுது             (24)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 2305 | தொழுதால் பழுது உண்டே தூ நீர் உலகம் முழுது உண்டு மொய் குழலாள் ஆய்ச்சி விழுது உண்ட
 வாயானை மால் விடை ஏழ் செற்றானை வானவர்க்கும்
 சேயானை நெஞ்சே சிறந்து?             (25)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 2306 | சிறந்த என் சிந்தையும் செங்கண் அரவும் நிறைந்த சீர் நீள் கச்சியுள்ளும் உறைந்ததுவும்
 வேங்கடமும் வெஃகாவும் வேளுக்கைப்பாடியுமே
 தாம் கடவார் தண் துழாயார்             (26)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 2307 | ஆரே துயர் உழந்தார் துன்பு உற்றார் ஆண்டையார் காரே மலிந்த கருங் கடலை நேரே
 கடைந்தானை காரணனை நீர் அணைமேல் பள்ளி
 அடைந்தானை நாளும் அடைந்து?             (27)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 2308 | அடைந்தது அரவு அணைமேல் ஐவர்க்கு ஆய் அன்று மிடைந்தது பாரத வெம் போர் உடைந்ததுவும்
 ஆய்ச்சிபால் மத்துக்கே அம்மனே! வாள் எயிற்றுப்
 பேய்ச்சி பால் உண்ட பிரான்             (28)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 2309 | பேய்ச்சி பால் உண்ட பெருமானைப் பேர்ந்து எடுத்து ஆய்ச்சி முலைகொடுத்தாள் அஞ்சாதே வாய்த்த
 இருள் ஆர் திருமேனி இன் பவளச் செவ்வாய்த்
 தெருளா மொழியானைச் சேர்ந்து             (29)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 2310 | சேர்ந்த திருமால் கடல் குடந்தை வேங்கடம் நேர்ந்த என் சிந்தை நிறை விசும்பு வாய்ந்த
 மறை பாடகம் அனந்தன் வண் துழாய்க் கண்ணி
 இறைபாடி ஆய இவை             (30)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 2311 | இவை அவன் கோயில் இரணியனது ஆகம் அவைசெய்து அரி உருவம் ஆனான் செவி தெரியா
 நாகத்தான் நால் வேதத்து உள்ளான் நறவு ஏற்றான்
 பாகத்தான் பாற்கடல் உளான்             (31)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 2312 | பாற்கடலும் வேங்கடமும் பாம்பும் பனி விசும்பும் நூல் கடலும் நுண் நூல தாமரைமேல் பாற்பட்டு
 இருந்தார் மனமும் இடமாகக் கொண்டான்
 குருந்து ஒசித்த கோபாலகன்             (32)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 2313 | பாலகனாய் ஆல் இலைமேல் பைய உலகு எல்லாம் மேல் ஒருநாள் உண்டவனே! மெய்ம்மையே மாலவனே
 மந்தரத்தால் மா நீர்க் கடல் கடைந்து வான் அமுதம்
 அந்தரத்தார்க்கு ஈந்தாய் நீ அன்று             (33)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 2314 | அன்று இவ் உலகம் அளந்த அசைவேகொல்? நின்று இருந்து வேளுக்கை நீள் நகர்வாய் அன்று
 கிடந்தானை கேடு இல் சீரானை முன் கஞ்சைக்
 கடந்தானை நெஞ்சமே! காண்             (34)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 2315 | காண் காண் என விரும்பும் கண்கள் கதிர் இலகு பூண் தார் அகலத்தான் பொன் மேனி பாண்கண்
 தொழில் பாடி வண்டு அறையும் தொங்கலான் செம்பொன்
 கழல் பாடி யாம் தொழுதும் கை             (35)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 2316 | கைய கனல் ஆழி கார்க் கடல் வாய் வெண் சங்கம் வெய்ய கதை சார்ங்கம் வெம் சுடர் வாள் செய்ய
 படை பரவை பாழி பனி நீர் உலகம்
 அடி அளந்த மாயன் அவற்கு             (36)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 2317 | அவற்கு அடிமைப் பட்டேன் அகத்தான் புறத்தான் உவர்க்கும் கருங் கடல் நீர் உள்ளான் துவர்க்கும்
 பவள வாய்ப் பூமகளும் பல் மணிப் பூண் ஆரம்
 திகழும் திருமார்பன் தான்             (37)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 2318 | தானே தனக்கு உவமன் தன் உருவே எவ் உருவும் தானே தவ உருவும் தாரகையும் தானே
 எரி சுடரும் மால் வரையும் எண் திசையும் அண்டத்து
 இரு சுடரும் ஆய இறை             (38)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 2319 | இறை ஆய் நிலன் ஆகி எண் திசையும் தான் ஆய் மறை ஆய் மறைப் பொருள் ஆய் வான் ஆய் பிறை வாய்ந்த
 வெள்ளத்து அருவி விளங்கு ஒலி நீர் வேங்கடத்தான்
 உள்ளத்தின் உள்ளே உளன்             (39)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 2320 | உளன் கண்டாய் நல் நெஞ்சே உத்தமன் என்றும் உளன் கண்டாய் உள்ளுவார் உள்ளத்து உளன் கண்டாய்
 விண் ஒடுங்கக் கோடு உயரும் வீங்கு அருவி வேங்கடத்தான்
 மண் ஒடுங்க தான் அளந்த மன்             (40)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 2321 | மன்னு மணி முடி நீண்டு அண்டம் போய் எண் திசையும் துன்னு பொழில் அனைத்தும் சூழ் கழலே மின்னை
 உடையாகக் கொண்டு அன்று உலகு அளந்தான் குன்றம்
 குடையாக ஆ காத்த கோ             (41)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 2322 | கோவலனாய் ஆ நிரைகள் மேய்த்து குழல் ஊதி மா வலனாய்க் கீண்ட மணி வண்ணன் மேவி
 அரி உருவம் ஆகி இரணியனது ஆகம்
 தெரி உகிரால் கீண்டான் சினம்             (42)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 2323 | சின மா மத களிற்றின் திண் மருப்பைச் சாய்த்து புனம் மேய பூமி அதனைத் தனமாக
 பேர் அகலத்துள் ஒடுக்கும் பேர் ஆர மார்வனார்
 ஓர் அகலத்து உள்ளது உலகு             (43)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 2324 | உலகமும் ஊழியும் ஆழியும் ஒண் கேழ் அலர் கதிரும் செந்தீயும் ஆவான் பல கதிர்கள்
 பாரித்த பைம் பொன் முடியான் அடி இணைக்கே
 பூரித்து என் நெஞ்சே புரி             (44)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 2325 | புரிந்து மத வேழம் மாப் பிடியோடு ஊடி திரிந்து சினத்தால் பொருது விரிந்த சீர்
 வெண் கோட்டு முத்து உதிர்க்கும் வேங்கடமே மேல் ஒரு நாள்
 மண் கோட்டுக் கொண்டான் மலை             (45)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 2326 | மலை முகடு மேல் வைத்து வாசுகியைச் சுற்றி தலை முகடு தான் ஒரு கை பற்றி அலை முகட்டு
 அண்டம் போய் நீர் தெறிப்ப அன்று கடல் கடைந்தான்
 பிண்டமாய் நின்ற பிரான்             (46)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 2327 | நின்ற பெருமானே நீர் ஏற்று உலகு எல்லாம் சென்ற பெருமானே செங்கண்ணா அன்று
 துரக வாய் கீண்ட துழாய் முடியாய்! நங்கள்
 நரக வாய் கீண்டாயும் நீ             (47)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 2328 | நீ அன்றே நீர் ஏற்று உலகம் அடி அளந்தாய்? நீ அன்றே நின்று நிரை மேய்த்தாய்? நீ அன்றே
 மா வாய் உரம் பிளந்து மா மருதின் ஊடு போய்
 தேவாசுரம் பொருதாய் செற்று?             (48)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 2329 | செற்றதுவும் சேரா இரணியனை சென்று ஏற்றுப் பெற்றதுவும் மா நிலம் பின்னைக்கு ஆய் முற்றல்
 முரி ஏற்றின் முன் நின்று மொய்ம்பு ஒழித்தாய் மூரிச்
 சுரி ஏறு சங்கினாய்! சூழ்ந்து             (49)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 2330 | சூழ்ந்த துழாய் அலங்கல் சோதி மணி முடி மால் தாழ்ந்த அருவித் தட வரைவாய் ஆழ்ந்த
 மணி நீர்ச் சுனை வளர்ந்த மா முதலை கொன்றான்
 அணி நீல வண்ணத்தவன்             (50)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 2331 | அவனே அரு வரையால் ஆ நிரைகள் காத்தான் அவனே அணி மருதம் சாய்த்தான் அவனே
 கலங்காப் பெரு நகரம் காட்டுவான் கண்டீர்
 இலங்காபுரம் எரித்தான் எய்து             (51)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 2332 | எய்தான் மராமரம் ஏழும் இராமனாய் எய்தான் அம் மான் மறியை ஏந்திழைக்கு ஆய் எய்ததுவும்
 தென் இலங்கைக் கோன் வீழ சென்று குறள் உரு ஆய்
 முன் நிலம் கைக்கொண்டான் முயன்று             (52)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 2333 | முயன்று தொழு நெஞ்சே! மூரி நீர் வேலை இயன்ற மரத்து ஆல் இலையின் மேலால் பயின்று அங்கு ஓர்
 மண் நலம் கொள் வெள்ளத்து மாயக் குழவியாய்
 தண் அலங்கல் மாலையான் தாள்             (53)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 2334 | தாளால் சகடம் உதைத்து பகடு உந்தி கீளா மருது இடை போய் கேழல் ஆய் மீளாது
 மண் அகலம் கீண்டு அங்கு ஓர் மாது உகந்த மார்வற்குப்
 பெண் அகலம் காதல் பெரிது             (54)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 2335 | பெரிய வரை மார்பில் பேர் ஆரம் பூண்டு கரிய முகிலிடை மின் போல தெரியுங்கால்
 பாண் ஒடுங்க வண்டு அறையும் பங்கயமே மற்று அவன் தன்
 நீள் நெடுங் கண் காட்டும் நிறம்             (55)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 2336 | நிறம் வெளிது செய்து பசிது கரிது என்று இறை உருவம் யாம் அறியோம் எண்ணில் நிறைவு உடைய
 நா மங்கை தானும் நலம் புகழ் வல்லளே
 பூ மங்கை கேள்வன்பொலிவு?             (56)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 2337 | பொலிந்து இருண்ட கார் வானில் மின்னேபோல் தோன்றி மலிந்து திரு இருந்த மார்வன் பொலிந்த
 கருடன்மேல் கொண்ட கரியான் கழலே
 தெருள் தன்மேல் கண்டாய் தெளி 57
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 2338 | தெளிந்த சிலாதலத்தின்மேல் இருந்த மந்தி அளிந்த கடுவனையே நோக்கி விளங்கிய
 வெண் மதியம் தா என்னும் வேங்கடமே மேல் ஒரு நாள்
 மண் மதியில் கொண்டு உகந்தான் வாழ்வு 58
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 2339 | வாழும் வகை அறிந்தேன் மை போல் நெடு வரைவாய்த் தாழும் அருவி போல் தார் கிடப்ப சூழும்
 திரு மா மணி வண்ணன் செங்கண் மால் எங்கள்
 பெருமான் அடி சேரப்பெற்று 59
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 2340 | பெற்றம் பிணை மருதம் பேய் முலை மாச் சகடம் முற்றக் காத்து ஊடு போய் உண்டு உதைத்து கற்றுக்
 குணிலை விளங் கனிக்குக் கொண்டு எறிந்தான் வெற்றிப்
 பணிலம் வாய் வைத்து உகந்தான் பண்டு 60
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 2341 | பண்டு எல்லாம் வேங்கடம் பாற்கடல் வைகுந்தம் கொண்டு அங்கு உறைவார்க்கு கோயில் போல் வண்டு
 வளம் கிளரும் நீள் சோலை வண் பூங் கடிகை
 இளங் குமரன் தன் விண்ணகர் 61
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 2342 | விண்ணகரம் வெஃகா விரி திரை நீர் வேங்கடம் மண் நகரம் மா மாட வேளுக்கை மண்ணகத்த
 தென் குடந்தை தேன் ஆர் திருவரங்கம் தென்கோட்டி
 தன் குடங்கை நீர் ஏற்றான் தாழ்வு 62
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 2343 | தாழ் சடையும் நீள் முடியும் ஒண் மழுவும் சக்கரமும் சூழ் அரவும் பொன் நாணும் தோன்றுமால் சூழும்
 திரண்டு அருவி பாயும் திருமலைமேல் எந்தைக்கு
 இரண்டு உருவும் ஒன்றாய் இசைந்து 63
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 2344 | இசைந்த அரவமும் வெற்பும் கடலும் பசைந்து அங்கு அமுது படுப்ப அசைந்து
 கடைந்த வருத்தமோ கச்சி வெஃகாவில்
 கிடந்து இருந்து நின்றதுவும் அங்கு? 64
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 2345 | அங்கற்கு இடர் இன்றி அந்திப் பொழுதத்து மங்க இரணியனது ஆகத்தை பொங்கி
 அரி உருவமாய்ப் பிளந்த அம்மான் அவனே
 கரி உருவம் கொம்பு ஒசித்தான் காய்ந்து 65
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 2346 | காய்ந்து இருளை மாற்றி கதிர் இலகு மா மணிகள் ஏய்ந்த பணக் கதிர்மேல் வெவ்வுயிர்ப்ப வாய்ந்த
 மது கைடபரும் வயிறு உருகி மாண்டார்
 அது கேடு அவர்க்கு இறுதி ஆங்கு 66
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 2347 | ஆங்கு மலரும் குவியுமால் உந்திவாய் ஓங்கு கமலத்தின் ஒண் போது ஆம் கைத்
 திகிரி சுடர் என்றும் வெண் சங்கம் வானில்
 பகரும் மதி என்றும் பார்த்து 67
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 2348 | பார்த்த கடுவன் சுனை நீர் நிழல் கண்டு பேர்த்து ஓர் கடுவன் எனப் பேர்ந்து கார்த்த
 களங் கனிக்குக் கை நீட்டும் வேங்கடமே மேல் நாள்
 விளங் கனிக்குக் கன்று எறிந்தான் வெற்பு 68
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 2349 | வெற்பு என்று வேங்கடம் பாடும் வியன் துழாய் கற்பு என்று சூடும் கருங் குழல்மேல் மல் பொன்ற
 நீண்ட தோள் மால் கிடந்த நீள் கடல் நீர் ஆடுவான்
 பூண்ட நாள் எல்லாம் புகும் 69
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 2350 | புகு மதத்தால் வாய் பூசி கீழ் தாழ்ந்து அருவி உகு மதத்தால் கால் கழுவி கையால் மிகு மதத் தேன்
 விண்ட மலர் கொண்டு விறல் வேங்கடவனையே
 கண்டு வணங்கும் களிறு 70
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 2351 | களிறு முகில் குத்த கை எடுத்து ஓடி ஒளிறு மருப்பு ஒசி கை யாளி பிளிறி
 விழ கொன்று நின்று அதிரும் வேங்கடமே மேல் நாள்
 குழக் கன்று கொண்டு எறிந்தான் குன்று 71
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 2352 | குன்று ஒன்றின் ஆய குற மகளிர் கோல் வளைக் கை சென்று விளையாடும் தீம் கழை போய் வென்று
 விளங்கு மதி கோள் விடுக்கும் வேங்கடமே மேலை
 இளங் குமரர் கோமான் இடம் 72
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 2353 | இடம் வலம் ஏழ் பூண்ட இரவித் தேர் ஓட்டி வட முக வேங்கடத்து மன்னும் குடம் நயந்த
 கூத்தனாய் நின்றான் குரை கழலே கூறுவதே
 நாத்தன்னால் உள்ள நலம் 73
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 2354 | நலமே வலிதுகொல் நஞ்சு ஊட்டு வன் பேய் நிலமே புரண்டு போய் வீழ சலமே தான்
 வெம் கொங்கை உண்டானை மீட்டு ஆய்ச்சி ஊட்டுவான்
 தன் கொங்கை வாய் வைத்தாள் சார்ந்து? 74
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 2355 | சார்ந்து அகடு தேய்ப்பத் தடாவிய கோட்டு உச்சிவாய் ஊர்ந்து இயங்கும் வெண் மதியின் ஒண் முயலைச் சேர்ந்து
 சின வேங்கை பார்க்கும் திருமலையே ஆயன்
 புன வேங்கை நாறும் பொருப்பு 75
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 2356 | பொருப்பிடையே நின்றும் புனல் குளித்தும் ஐந்து நெருப்பிடையே நிற்கவும் நீர் வேண்டா விருப்பு உடைய
 வெஃகாவே சேர்ந்தானை மெய்ம் மலர் தூய்க் கைதொழுதால்
 அஃகாவே தீவினைகள் ஆய்ந்து? 76
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 2357 | ஆய்ந்த அரு மறையோன் நான்முகத்தோன் நன் குறங்கில் வாய்ந்த குழவியாய் வாள் அரக்கன் ஏய்ந்த
 முடிப் போது மூன்று ஏழ் என்று எண்ணினான் ஆர்ந்த
 அடிப் போது நங்கட்கு அரண் 77
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 2358 | அரண் ஆம் நமக்கு என்றும் ஆழி வலவன் முரன் நாள் வலம் சுழிந்த மொய்ம்பன் சரண் ஆமேல்
 ஏது கதி? ஏது நிலை? ஏது பிறப்பு? என்னாதே
 ஓது கதி மாயனையே ஓர்த்து 78
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 2359 | ஓர்த்த மனத்தராய் ஐந்து அடக்கி ஆராய்ந்து பேர்த்தால் பிறப்பு ஏழும் பேர்க்கலாம் கார்த்த
 விரை ஆர் நறும் துழாய் வீங்கு ஓத மேனி
 நிரை ஆர மார்வனையே நின்று 79
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 2360 | நின்று எதிராய நிரை மணித் தேர் வாணன் தோள் ஒன்றிய ஈர் ஐஞ்ஞூறு உடன் துணிய வென்று இலங்கும்
 ஆர் படு வான் நேமி அரவு அணையான் சேவடிக்கே
 நேர்படுவான் தான் முயலும் நெஞ்சு 80
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 2361 | நெஞ்சால் நினைப்பு அரியனேலும் நிலைப்பெற்று என் நெஞ்சமே பேசாய் நினைக்குங்கால் நெஞ்சத்துப்
 பேராது நிற்கும் பெருமானை என்கொலோ
 ஓராது நிற்பது உணர்வு? 81
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 2362 | உணரில் உணர்வு அரியன் உள்ளம் புகுந்து புணரிலும் காண்பு அரியன் உண்மை இணர் அணைய
 கொங்கு அணைந்து வண்டு அறையும் தண் துழாய்க் கோமானை
 எங்கு அணைந்து காண்டும் இனி? 82
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 2363 | இனி அவன் மாயன் என உரைப்பரேலும் இனி அவன் காண்பு அரியனேலும் இனியவன்
 கள்ளத்தால் மண் கொண்டு விண் கடந்த பைங் கழலான்
 உள்ளத்தின் உள்ளே உளன் 83
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 2364 | உளனாய நான்மறையின் உட்பொருளை உள்ளத்து உளனாகத் தேர்ந்து உணர்வரேலும் உளனாய
 வண் தாமரை நெடுங் கண் மாயவனை யாவரே
 கண்டார்? உகப்பர் கவி 84
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 2365 | கவியினார் கை புனைந்து கண் ஆர் கழல் போய் செவியின் ஆர் கேள்வியராய்ச் சேர்ந்தார் புவியினார்
 போற்றி உரைக்க பொலியுமே பின்னைக்கு ஆய்
 ஏற்று உயிரை அட்டான் எழில்? 85
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 2366 | எழில் கொண்ட மின்னுக் கொடி எடுத்து வேகத் தொழில்கொண்டு தான் முழங்கித் தோன்றும் எழில்கொண்ட
 நீர் மேகம் அன்ன நெடு மால் நிறம் போல
 கார் வானம் காட்டும் கலந்து 86
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 2367 | கலந்து மணி இமைக்கும் கண்ணா நின் மேனி மலர்ந்து மரகதமே காட்டும் நலம் திகழும்
 கொந்தின்வாய் வண்டு அறையும் தண் துழாய்க் கோமானை
 அந்தி வான் காட்டும் அது 87
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 2368 | அது நன்று இது தீது என்று ஐயப்படாதே மது நின்ற தண் துழாய் மார்வன் பொது நின்ற
 பொன் அம் கழலே தொழுமின் முழுவினைகள்
 முன்னம் கழலும் முடிந்து 88
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 2369 | முடிந்த பொழுதில் குற வாணர் ஏனம் படிந்து உழு சால் பைந் தினைகள் வித்த தடிந்து எழுந்த
 வேய்ங் கழை போய் விண் திறக்கும் வேங்கடமே மேல் ஒரு நாள்
 தீம் குழல் வாய் வைத்தான் சிலம்பு 89
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 2370 | சிலம்பும் செறி கழலும் சென்று இசைப்ப விண் ஆறு அலம்பிய சேவடி போய் அண்டம் புலம்பிய தோள்
 எண் திசையும் சூழ இடம் போதாது என்கொலோ
 வண் துழாய் மால் அளந்த மண்? 90
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 2371 | மண் உண்டும் பேய்ச்சி முலை உண்டும் ஆற்றாதாய் வெண்ணெய் விழுங்க வெகுண்டு ஆய்ச்சி கண்ணிக்
 கயிற்றினால் கட்ட தான் கட்டுண்டிருந்தான்
 வயிற்றினோடு ஆற்றா மகன் 91
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 2372 | மகன் ஒருவர்க்கு அல்லாத மா மேனி மாயன் மகன் ஆம் அவன் மகன் தன் காதல் மகனைச்
 சிறைசெய்த வாணன் தோள் செற்றான் கழலே
 நிறைசெய்து என் நெஞ்சே நினை 92
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 2373 | நினைத்து உலகில் ஆர் தெளிவார் நீண்ட திருமால்? அனைத்து உலகும் உள் ஒடுக்கி ஆல்மேல் கனைத்து உலவு
 வெள்ளத்து ஓர் பிள்ளையாய் மெள்ளத் துயின்றானை
 உள்ளத்தே வை நெஞ்சமே உய்த்து 93
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 2374 | உய்த்து உணர்வு என்னும் ஒளி கொள் விளக்கு ஏற்றி வைத்து அவனை நாடி வலைப்படுத்தேன் மெத்தெனவே
 நின்றான் இருந்தான் கிடந்தான் என் நெஞ்சத்து
 பொன்றாமை மாயன் புகுந்து             (94)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 2375 | புகுந்து இலங்கும் அந்திப் பொழுதத்து அரியாய் இகழ்ந்த இரணியனது ஆகம் சுகிர்ந்து எங்கும்
 சிந்தப் பிளந்த திருமால் திருவடியே
 வந்தித்து என் நெஞ்சமே வாழ்த்து     (95)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 2376 | வாழ்த்திய வாயராய் வானோர் மணி மகுடம் தாழ்த்தி வணங்கத் தழும்பாமே கேழ்த்த
 அடித் தாமரை மலர்மேல் மங்கை மணாளன்
 அடித் தாமரை ஆம் அலர்               (96)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 2377 | அலர் எடுத்த உந்தியான் ஆங்கு எழில் ஆய மலர் எடுத்த மா மேனி மாயன் அலர் எடுத்த
 வண்ணத்தான் மா மலரான் வார் சடையான் என்று இவர்கட்கு
 எண்ணத்தான் ஆமோ இமை?             (97)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 2378 | இமம் சூழ் மலையும் இரு விசும்பும் காற்றும் அமம் சூழ்ந்து அற விளங்கித் தோன்றும் நமன் சூழ்
 நரகத்து நம்மை நணுகாமல் காப்பான்
 துரகத்தை வாய் பிளந்தான் தொட்டு             (98)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 2379 | தொட்ட படை எட்டும் தோலாத வென்றியான் அட்டபுயகரத்தான் அஞ்ஞான்று குட்டத்துக்
 கோள் முதலை துஞ்ச குறித்து எறிந்த சக்கரத்தான்
 தாள் முதலே நங்கட்குச் சார்வு             (99)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 2380 | சார்வு நமக்கு என்றும் சக்கரத்தான் தண் துழாய்த் தார் வாழ் வரை மார்பன் தான் முயங்கும் கார் ஆர்ந்த
 வான் அமரும் மின் இமைக்கும் வண் தாமரை நெடுங் கண்
 தேன் அமரும் பூமேல் திரு             (100)
 | 
 |  | 
		
			|  |  |  |