மூன்றாம் ஆயிரம் இயற்பா பேயாழ்வார்
|
| மூன்றாம் திருவந்தாதி |
| 2281 | திருக் கண்டேன் பொன் மேனி கண்டேன் திகழும் அருக்கன் அணி நிறமும் கண்டேன் செருக் கிளரும் பொன் ஆழி கண்டேன் புரி சங்கம் கைக் கண்டேன் என் ஆழி வண்ணன்பால் இன்று (1) | |
|
| |
|
|
| 2282 | இன்றே கழல் கண்டேன் ஏழ் பிறப்பும் யான் அறுத்தேன் பொன் தோய் வரை மார்பில் பூந் துழாய் அன்று திருக் கண்டு கொண்ட திருமாலே உன்னை மருக்கண்டுகொண்டு என் மனம் (2) | |
|
| |
|
|
| 2283 | மனத்து உள்ளான் மா கடல் நீர் உள்ளான் மலராள் தனத்து உள்ளான் தண் துழாய் மார்பன் சினத்துச் செருநர் உகச் செற்று உகந்த தேங்கு ஓத வண்ணன் வரு நரகம் தீர்க்கும் மருந்து (3) | |
|
| |
|
|
| 2284 | மருந்தும் பொருளும் அமுதமும் தானே திருந்திய செங் கண் மால் ஆங்கே பொருந்தியும் நின்று உலகம் உண்டு உமிழ்ந்து நீர் ஏற்று மூவடியால் அன்று உலகம் தாயோன் அடி (4) | |
|
| |
|
|
| 2285 | அடி வண்ணம் தாமரை அன்று உலகம் தாயோன் படி வண்ணம் பார்க் கடல் நீர் வண்ணம் முடி வண்ணம் ஓர் ஆழி வெய்யோன் ஒளியும் அஃது அன்றே ஆர் ஆழி கொண்டாற்கு அழகு (5) | |
|
| |
|
|
| 2286 | அழகு அன்றே ஆழியாற்கு ஆழி நீர் வண்ணம்? அழகு அன்றே அண்டம் கடத்தல்? அழகு அன்றே அங்கை நீர் ஏற்றாற்கு அலர் மேலோன் கால் கழுவ கங்கை நீர் கான்ற கழல்? (6) |
|
|
| |
|
|
| 2287 | கழல் தொழுதும் வா நெஞ்சே! கார்க் கடல் நீர் வேலைப் பொழில் அளந்த புள் ஊர்திச் செல்வன் எழில் அளந்து அங்கு எண்ணற்கு அரியானை எப் பொருட்கும் சேயானை நண்ணற்கு அரியானை நாம் (7) | |
|
| |
|
|
| 2288 | நாமம் பல சொல்லி நாராயணா என்று நாம் அங்கையால் தொழுதும் நல் நெஞ்சே வா மருவி மண்ணுலகம் உண்டு உமிழ்ந்த வண்டு அறையும் தண் துழாய் கண்ணனையே காண்க நம் கண் (8) | |
|
| |
|
|
| 2289 | கண்ணும் கமலம் கமலமே கைத்தலமும் மண் அளந்த பாதமும் மற்று அவையே எண்ணில் கரு மா முகில் வண்ணன் கார்க் கடல் நீர் வண்ணன் திரு மா மணி வண்ணன் தேசு (9) | |
|
| |
|
|
| 2290 | தேசும் திறலும் திருவும் உருவமும் மாசு இல் குடிப்பிறப்பும் மற்றவையும் பேசில் வலம் புரிந்த வான் சங்கம் கொண்டான் பேர் ஓத நலம் புரிந்து சென்று அடையும் நன்கு (10) | |
|
| |
|
|
| 2291 | நன்கு ஓதும் நால் வேதத்து உள்ளான் நறவு இரியும் பொங்கு ஓதருவிப் புனல் வண்ணன் சங்கு ஓதப் பாற்கடலான் பாம்பு அணையின் மேலான் பயின்று உரைப்பார் நூல் கடலான் நுண் அறிவினான் (11) | |
|
| |
|
|
| 2292 | அறிவு என்னும் தாள் கொளுவி ஐம்புலனும் தம்மில் செறிவு என்னும் திண் கதவம் செம்மி மறை என்றும் நன்கு ஓதி நன்கு உணர்வார் காண்பரே நாள்தோறும் பைங்கோத வண்ணன் படி (12) | |
|
| |
|
|
| 2293 | படி வட்டத் தாமரை பண்டு உலகம் நீர் ஏற்று அடி வட்டத்தால் அளப்ப நீண்ட முடி வட்டம் ஆகாயம் ஊடறுத்து அண்டம் போய் நீண்டதே மா காயமாய் நின்ற மாற்கு (13) | |
|
| |
|
|
| 2294 | மால்பால் மனம் சுழிப்ப மங்கையர் தோள் கைவிட்டு நூல்பால் மனம் வைக்க நொய்விது ஆம் நால் பால வேதத்தான் வேங்கடத்தான் விண்ணோர் முடி தோயும் பாதத்தான் பாதம் பணிந்து (14) | |
|
| |
|
|
| 2295 | பணிந்து உயர்ந்த பௌவப் படு திரைகள் மோத பணிந்த பண மணிகளாலே அணிந்து அங்கு அனந்தன் அணைக் கிடக்கும் அம்மான் அடியேன் மனம் தன் அணைக் கிடக்கும் வந்து (15) | |
|
| |
|
|
| 2296 | வந்து உதைத்த வெண் திரைகள் செம் பவள வெண் முத்தம் அந்தி விளக்கும் அணி விளக்காம் எந்தை ஒரு அல்லித் தாமரையாள் ஒன்றிய சீர் மார்வன் திருவல்லிக்கேணியான் சென்று (16) | |
|
| |
|
|
| 2297 | சென்ற நாள் செல்லாத செங்கண் மால் எங்கள் மால் என்ற நாள் எந் நாளும் நாள் ஆகும் என்றும் இறவாத எந்தை இணை அடிக்கே ஆளாய் மறவாது வாழ்த்துக என் வாய் (17) | |
|
| |
|
|
| 2298 | வாய் மொழிந்து வாமனனாய் மாவலிபால் மூவடி மண் நீ அளந்து கொண்ட நெடுமாலே தாவிய நின் எஞ்சா இணை அடிக்கே ஏழ் பிறப்பும் ஆளாகி அஞ்சாது இருக்க அருள் (18) | |
|
| |
|
|
| 2299 | அருளாது ஒழியுமே ஆல் இலைமேல் அன்று தெருளாத பிள்ளையாய்ச் சேர்ந்தான் இருளாத சிந்தையராய் சேவடிக்கே செம் மலர் தூய் கைதொழுது முந்தையராய் நிற்பார்க்கு முன்? (19) | |
|
| |
|
|
| 2300 | அருளாது ஒழியுமே ஆல் இலைமேல் அன்று தெருளாத பிள்ளையாய்ச் சேர்ந்தான் இருளாத சிந்தையராய் சேவடிக்கே செம் மலர் தூய் கைதொழுது ந்தையராய் நிற்பார்க்கு முன்? (20) | |
|
| |
|
|
| 2301 | பேசுவார் எவ்வளவு பேசுவர் அவ்வளவே வாச மலர்த் துழாய் மாலையான் தேசு உடைய சக்கரத்தான் சங்கினான் சார்ங்கத்தான் பொங்கு அரவ வக்கரனைக் கொன்றான் வடிவு (21) | |
|
| |
|
|
| 2302 | வடிவு ஆர் முடி கோட்டி வானவர்கள் நாளும் கடி ஆர் மலர் தூவி காணும் படியானை செம்மையால் உள் உருகி செவ்வனே நெஞ்சமே மெய்ம்மையே காண விரும்பு (22) | |
|
| |
|
|
| 2303 | விரும்பி விண் மண் அளந்த அஞ் சிறைய வண்டு ஆர் சுரும்பு தொளையில் சென்று ஊத அரும்பும் புனந் துழாய் மாலையான் பொன் அம் கழற்கே மனம் துழாய் மாலாய் வரும் (23) | |
|
| |
|
|
| 2304 | வருங்கால் இரு நிலனும் மால் விசும்பும் காற்றும் நெருங்கு தீ நீர் உருவும் ஆனான் பொருந்தும் சுடர் ஆழி ஒன்று உடையான் சூழ் கழலே நாளும் தொடர் ஆழி நெஞ்சே தொழுது (24) | |
|
| |
|
|
| 2305 | தொழுதால் பழுது உண்டே தூ நீர் உலகம் முழுது உண்டு மொய் குழலாள் ஆய்ச்சி விழுது உண்ட வாயானை மால் விடை ஏழ் செற்றானை வானவர்க்கும் சேயானை நெஞ்சே சிறந்து? (25) | |
|
| |
|
|
| 2306 | சிறந்த என் சிந்தையும் செங்கண் அரவும் நிறைந்த சீர் நீள் கச்சியுள்ளும் உறைந்ததுவும் வேங்கடமும் வெஃகாவும் வேளுக்கைப்பாடியுமே தாம் கடவார் தண் துழாயார் (26) | |
|
| |
|
|
| 2307 | ஆரே துயர் உழந்தார் துன்பு உற்றார் ஆண்டையார் காரே மலிந்த கருங் கடலை நேரே கடைந்தானை காரணனை நீர் அணைமேல் பள்ளி அடைந்தானை நாளும் அடைந்து? (27) | |
|
| |
|
|
| 2308 | அடைந்தது அரவு அணைமேல் ஐவர்க்கு ஆய் அன்று மிடைந்தது பாரத வெம் போர் உடைந்ததுவும் ஆய்ச்சிபால் மத்துக்கே அம்மனே! வாள் எயிற்றுப் பேய்ச்சி பால் உண்ட பிரான் (28) | |
|
| |
|
|
| 2309 | பேய்ச்சி பால் உண்ட பெருமானைப் பேர்ந்து எடுத்து ஆய்ச்சி முலைகொடுத்தாள் அஞ்சாதே வாய்த்த இருள் ஆர் திருமேனி இன் பவளச் செவ்வாய்த் தெருளா மொழியானைச் சேர்ந்து (29) | |
|
| |
|
|
| 2310 | சேர்ந்த திருமால் கடல் குடந்தை வேங்கடம் நேர்ந்த என் சிந்தை நிறை விசும்பு வாய்ந்த மறை பாடகம் அனந்தன் வண் துழாய்க் கண்ணி இறைபாடி ஆய இவை (30) | |
|
| |
|
|
| 2311 | இவை அவன் கோயில் இரணியனது ஆகம் அவைசெய்து அரி உருவம் ஆனான் செவி தெரியா நாகத்தான் நால் வேதத்து உள்ளான் நறவு ஏற்றான் பாகத்தான் பாற்கடல் உளான் (31) | |
|
| |
|
|
| 2312 | பாற்கடலும் வேங்கடமும் பாம்பும் பனி விசும்பும் நூல் கடலும் நுண் நூல தாமரைமேல் பாற்பட்டு இருந்தார் மனமும் இடமாகக் கொண்டான் குருந்து ஒசித்த கோபாலகன் (32) | |
|
| |
|
|
| 2313 | பாலகனாய் ஆல் இலைமேல் பைய உலகு எல்லாம் மேல் ஒருநாள் உண்டவனே! மெய்ம்மையே மாலவனே மந்தரத்தால் மா நீர்க் கடல் கடைந்து வான் அமுதம் அந்தரத்தார்க்கு ஈந்தாய் நீ அன்று (33) | |
|
| |
|
|
| 2314 | அன்று இவ் உலகம் அளந்த அசைவேகொல்? நின்று இருந்து வேளுக்கை நீள் நகர்வாய் அன்று கிடந்தானை கேடு இல் சீரானை முன் கஞ்சைக் கடந்தானை நெஞ்சமே! காண் (34) | |
|
| |
|
|
| 2315 | காண் காண் என விரும்பும் கண்கள் கதிர் இலகு பூண் தார் அகலத்தான் பொன் மேனி பாண்கண் தொழில் பாடி வண்டு அறையும் தொங்கலான் செம்பொன் கழல் பாடி யாம் தொழுதும் கை (35) | |
|
| |
|
|
| 2316 | கைய கனல் ஆழி கார்க் கடல் வாய் வெண் சங்கம் வெய்ய கதை சார்ங்கம் வெம் சுடர் வாள் செய்ய படை பரவை பாழி பனி நீர் உலகம் அடி அளந்த மாயன் அவற்கு (36) | |
|
| |
|
|
| 2317 | அவற்கு அடிமைப் பட்டேன் அகத்தான் புறத்தான் உவர்க்கும் கருங் கடல் நீர் உள்ளான் துவர்க்கும் பவள வாய்ப் பூமகளும் பல் மணிப் பூண் ஆரம் திகழும் திருமார்பன் தான் (37) | |
|
| |
|
|
| 2318 | தானே தனக்கு உவமன் தன் உருவே எவ் உருவும் தானே தவ உருவும் தாரகையும் தானே எரி சுடரும் மால் வரையும் எண் திசையும் அண்டத்து இரு சுடரும் ஆய இறை (38) | |
|
| |
|
|
| 2319 | இறை ஆய் நிலன் ஆகி எண் திசையும் தான் ஆய் மறை ஆய் மறைப் பொருள் ஆய் வான் ஆய் பிறை வாய்ந்த வெள்ளத்து அருவி விளங்கு ஒலி நீர் வேங்கடத்தான் உள்ளத்தின் உள்ளே உளன் (39) | |
|
| |
|
|
| 2320 | உளன் கண்டாய் நல் நெஞ்சே உத்தமன் என்றும் உளன் கண்டாய் உள்ளுவார் உள்ளத்து உளன் கண்டாய் விண் ஒடுங்கக் கோடு உயரும் வீங்கு அருவி வேங்கடத்தான் மண் ஒடுங்க தான் அளந்த மன் (40) | |
|
| |
|
|
| 2321 | மன்னு மணி முடி நீண்டு அண்டம் போய் எண் திசையும் துன்னு பொழில் அனைத்தும் சூழ் கழலே மின்னை உடையாகக் கொண்டு அன்று உலகு அளந்தான் குன்றம் குடையாக ஆ காத்த கோ (41) | |
|
| |
|
|
| 2322 | கோவலனாய் ஆ நிரைகள் மேய்த்து குழல் ஊதி மா வலனாய்க் கீண்ட மணி வண்ணன் மேவி அரி உருவம் ஆகி இரணியனது ஆகம் தெரி உகிரால் கீண்டான் சினம் (42) | |
|
| |
|
|
| 2323 | சின மா மத களிற்றின் திண் மருப்பைச் சாய்த்து புனம் மேய பூமி அதனைத் தனமாக பேர் அகலத்துள் ஒடுக்கும் பேர் ஆர மார்வனார் ஓர் அகலத்து உள்ளது உலகு (43) | |
|
| |
|
|
| 2324 | உலகமும் ஊழியும் ஆழியும் ஒண் கேழ் அலர் கதிரும் செந்தீயும் ஆவான் பல கதிர்கள் பாரித்த பைம் பொன் முடியான் அடி இணைக்கே பூரித்து என் நெஞ்சே புரி (44) | |
|
| |
|
|
| 2325 | புரிந்து மத வேழம் மாப் பிடியோடு ஊடி திரிந்து சினத்தால் பொருது விரிந்த சீர் வெண் கோட்டு முத்து உதிர்க்கும் வேங்கடமே மேல் ஒரு நாள் மண் கோட்டுக் கொண்டான் மலை (45) | |
|
| |
|
|
| 2326 | மலை முகடு மேல் வைத்து வாசுகியைச் சுற்றி தலை முகடு தான் ஒரு கை பற்றி அலை முகட்டு அண்டம் போய் நீர் தெறிப்ப அன்று கடல் கடைந்தான் பிண்டமாய் நின்ற பிரான் (46) | |
|
| |
|
|
| 2327 | நின்ற பெருமானே நீர் ஏற்று உலகு எல்லாம் சென்ற பெருமானே செங்கண்ணா அன்று துரக வாய் கீண்ட துழாய் முடியாய்! நங்கள் நரக வாய் கீண்டாயும் நீ (47) | |
|
| |
|
|
| 2328 | நீ அன்றே நீர் ஏற்று உலகம் அடி அளந்தாய்? நீ அன்றே நின்று நிரை மேய்த்தாய்? நீ அன்றே மா வாய் உரம் பிளந்து மா மருதின் ஊடு போய் தேவாசுரம் பொருதாய் செற்று? (48) | |
|
| |
|
|
| 2329 | செற்றதுவும் சேரா இரணியனை சென்று ஏற்றுப் பெற்றதுவும் மா நிலம் பின்னைக்கு ஆய் முற்றல் முரி ஏற்றின் முன் நின்று மொய்ம்பு ஒழித்தாய் மூரிச் சுரி ஏறு சங்கினாய்! சூழ்ந்து (49) | |
|
| |
|
|
| 2330 | சூழ்ந்த துழாய் அலங்கல் சோதி மணி முடி மால் தாழ்ந்த அருவித் தட வரைவாய் ஆழ்ந்த மணி நீர்ச் சுனை வளர்ந்த மா முதலை கொன்றான் அணி நீல வண்ணத்தவன் (50) | |
|
| |
|
|
| 2331 | அவனே அரு வரையால் ஆ நிரைகள் காத்தான் அவனே அணி மருதம் சாய்த்தான் அவனே கலங்காப் பெரு நகரம் காட்டுவான் கண்டீர் இலங்காபுரம் எரித்தான் எய்து (51) | |
|
| |
|
|
| 2332 | எய்தான் மராமரம் ஏழும் இராமனாய் எய்தான் அம் மான் மறியை ஏந்திழைக்கு ஆய் எய்ததுவும் தென் இலங்கைக் கோன் வீழ சென்று குறள் உரு ஆய் முன் நிலம் கைக்கொண்டான் முயன்று (52) | |
|
| |
|
|
| 2333 | முயன்று தொழு நெஞ்சே! மூரி நீர் வேலை இயன்ற மரத்து ஆல் இலையின் மேலால் பயின்று அங்கு ஓர் மண் நலம் கொள் வெள்ளத்து மாயக் குழவியாய் தண் அலங்கல் மாலையான் தாள் (53) | |
|
| |
|
|
| 2334 | தாளால் சகடம் உதைத்து பகடு உந்தி கீளா மருது இடை போய் கேழல் ஆய் மீளாது மண் அகலம் கீண்டு அங்கு ஓர் மாது உகந்த மார்வற்குப் பெண் அகலம் காதல் பெரிது (54) | |
|
| |
|
|
| 2335 | பெரிய வரை மார்பில் பேர் ஆரம் பூண்டு கரிய முகிலிடை மின் போல தெரியுங்கால் பாண் ஒடுங்க வண்டு அறையும் பங்கயமே மற்று அவன் தன் நீள் நெடுங் கண் காட்டும் நிறம் (55) | |
|
| |
|
|
| 2336 | நிறம் வெளிது செய்து பசிது கரிது என்று இறை உருவம் யாம் அறியோம் எண்ணில் நிறைவு உடைய நா மங்கை தானும் நலம் புகழ் வல்லளே பூ மங்கை கேள்வன்பொலிவு? (56) | |
|
| |
|
|
| 2337 | பொலிந்து இருண்ட கார் வானில் மின்னேபோல் தோன்றி மலிந்து திரு இருந்த மார்வன் பொலிந்த கருடன்மேல் கொண்ட கரியான் கழலே தெருள் தன்மேல் கண்டாய் தெளி 57 | |
|
| |
|
|
| 2338 | தெளிந்த சிலாதலத்தின்மேல் இருந்த மந்தி அளிந்த கடுவனையே நோக்கி விளங்கிய வெண் மதியம் தா என்னும் வேங்கடமே மேல் ஒரு நாள் மண் மதியில் கொண்டு உகந்தான் வாழ்வு 58 | |
|
| |
|
|
| 2339 | வாழும் வகை அறிந்தேன் மை போல் நெடு வரைவாய்த் தாழும் அருவி போல் தார் கிடப்ப சூழும் திரு மா மணி வண்ணன் செங்கண் மால் எங்கள் பெருமான் அடி சேரப்பெற்று 59 | |
|
| |
|
|
| 2340 | பெற்றம் பிணை மருதம் பேய் முலை மாச் சகடம் முற்றக் காத்து ஊடு போய் உண்டு உதைத்து கற்றுக் குணிலை விளங் கனிக்குக் கொண்டு எறிந்தான் வெற்றிப் பணிலம் வாய் வைத்து உகந்தான் பண்டு 60 | |
|
| |
|
|
| 2341 | பண்டு எல்லாம் வேங்கடம் பாற்கடல் வைகுந்தம் கொண்டு அங்கு உறைவார்க்கு கோயில் போல் வண்டு வளம் கிளரும் நீள் சோலை வண் பூங் கடிகை இளங் குமரன் தன் விண்ணகர் 61 | |
|
| |
|
|
| 2342 | விண்ணகரம் வெஃகா விரி திரை நீர் வேங்கடம் மண் நகரம் மா மாட வேளுக்கை மண்ணகத்த தென் குடந்தை தேன் ஆர் திருவரங்கம் தென்கோட்டி தன் குடங்கை நீர் ஏற்றான் தாழ்வு 62 | |
|
| |
|
|
| 2343 | தாழ் சடையும் நீள் முடியும் ஒண் மழுவும் சக்கரமும் சூழ் அரவும் பொன் நாணும் தோன்றுமால் சூழும் திரண்டு அருவி பாயும் திருமலைமேல் எந்தைக்கு இரண்டு உருவும் ஒன்றாய் இசைந்து 63 | |
|
| |
|
|
| 2344 | இசைந்த அரவமும் வெற்பும் கடலும் பசைந்து அங்கு அமுது படுப்ப அசைந்து கடைந்த வருத்தமோ கச்சி வெஃகாவில் கிடந்து இருந்து நின்றதுவும் அங்கு? 64 | |
|
| |
|
|
| 2345 | அங்கற்கு இடர் இன்றி அந்திப் பொழுதத்து மங்க இரணியனது ஆகத்தை பொங்கி அரி உருவமாய்ப் பிளந்த அம்மான் அவனே கரி உருவம் கொம்பு ஒசித்தான் காய்ந்து 65 | |
|
| |
|
|
| 2346 | காய்ந்து இருளை மாற்றி கதிர் இலகு மா மணிகள் ஏய்ந்த பணக் கதிர்மேல் வெவ்வுயிர்ப்ப வாய்ந்த மது கைடபரும் வயிறு உருகி மாண்டார் அது கேடு அவர்க்கு இறுதி ஆங்கு 66 | |
|
| |
|
|
| 2347 | ஆங்கு மலரும் குவியுமால் உந்திவாய் ஓங்கு கமலத்தின் ஒண் போது ஆம் கைத் திகிரி சுடர் என்றும் வெண் சங்கம் வானில் பகரும் மதி என்றும் பார்த்து 67 | |
|
| |
|
|
| 2348 | பார்த்த கடுவன் சுனை நீர் நிழல் கண்டு பேர்த்து ஓர் கடுவன் எனப் பேர்ந்து கார்த்த களங் கனிக்குக் கை நீட்டும் வேங்கடமே மேல் நாள் விளங் கனிக்குக் கன்று எறிந்தான் வெற்பு 68 | |
|
| |
|
|
| 2349 | வெற்பு என்று வேங்கடம் பாடும் வியன் துழாய் கற்பு என்று சூடும் கருங் குழல்மேல் மல் பொன்ற நீண்ட தோள் மால் கிடந்த நீள் கடல் நீர் ஆடுவான் பூண்ட நாள் எல்லாம் புகும் 69 | |
|
| |
|
|
| 2350 | புகு மதத்தால் வாய் பூசி கீழ் தாழ்ந்து அருவி உகு மதத்தால் கால் கழுவி கையால் மிகு மதத் தேன் விண்ட மலர் கொண்டு விறல் வேங்கடவனையே கண்டு வணங்கும் களிறு 70 | |
|
| |
|
|
| 2351 | களிறு முகில் குத்த கை எடுத்து ஓடி ஒளிறு மருப்பு ஒசி கை யாளி பிளிறி விழ கொன்று நின்று அதிரும் வேங்கடமே மேல் நாள் குழக் கன்று கொண்டு எறிந்தான் குன்று 71 | |
|
| |
|
|
| 2352 | குன்று ஒன்றின் ஆய குற மகளிர் கோல் வளைக் கை சென்று விளையாடும் தீம் கழை போய் வென்று விளங்கு மதி கோள் விடுக்கும் வேங்கடமே மேலை இளங் குமரர் கோமான் இடம் 72 | |
|
| |
|
|
| 2353 | இடம் வலம் ஏழ் பூண்ட இரவித் தேர் ஓட்டி வட முக வேங்கடத்து மன்னும் குடம் நயந்த கூத்தனாய் நின்றான் குரை கழலே கூறுவதே நாத்தன்னால் உள்ள நலம் 73 | |
|
| |
|
|
| 2354 | நலமே வலிதுகொல் நஞ்சு ஊட்டு வன் பேய் நிலமே புரண்டு போய் வீழ சலமே தான் வெம் கொங்கை உண்டானை மீட்டு ஆய்ச்சி ஊட்டுவான் தன் கொங்கை வாய் வைத்தாள் சார்ந்து? 74 | |
|
| |
|
|
| 2355 | சார்ந்து அகடு தேய்ப்பத் தடாவிய கோட்டு உச்சிவாய் ஊர்ந்து இயங்கும் வெண் மதியின் ஒண் முயலைச் சேர்ந்து சின வேங்கை பார்க்கும் திருமலையே ஆயன் புன வேங்கை நாறும் பொருப்பு 75 | |
|
| |
|
|
| 2356 | பொருப்பிடையே நின்றும் புனல் குளித்தும் ஐந்து நெருப்பிடையே நிற்கவும் நீர் வேண்டா விருப்பு உடைய வெஃகாவே சேர்ந்தானை மெய்ம் மலர் தூய்க் கைதொழுதால் அஃகாவே தீவினைகள் ஆய்ந்து? 76 | |
|
| |
|
|
| 2357 | ஆய்ந்த அரு மறையோன் நான்முகத்தோன் நன் குறங்கில் வாய்ந்த குழவியாய் வாள் அரக்கன் ஏய்ந்த முடிப் போது மூன்று ஏழ் என்று எண்ணினான் ஆர்ந்த அடிப் போது நங்கட்கு அரண் 77 | |
|
| |
|
|
| 2358 | அரண் ஆம் நமக்கு என்றும் ஆழி வலவன் முரன் நாள் வலம் சுழிந்த மொய்ம்பன் சரண் ஆமேல் ஏது கதி? ஏது நிலை? ஏது பிறப்பு? என்னாதே ஓது கதி மாயனையே ஓர்த்து 78 | |
|
| |
|
|
| 2359 | ஓர்த்த மனத்தராய் ஐந்து அடக்கி ஆராய்ந்து பேர்த்தால் பிறப்பு ஏழும் பேர்க்கலாம் கார்த்த விரை ஆர் நறும் துழாய் வீங்கு ஓத மேனி நிரை ஆர மார்வனையே நின்று 79 | |
|
| |
|
|
| 2360 | நின்று எதிராய நிரை மணித் தேர் வாணன் தோள் ஒன்றிய ஈர் ஐஞ்ஞூறு உடன் துணிய வென்று இலங்கும் ஆர் படு வான் நேமி அரவு அணையான் சேவடிக்கே நேர்படுவான் தான் முயலும் நெஞ்சு 80 | |
|
| |
|
|
| 2361 | நெஞ்சால் நினைப்பு அரியனேலும் நிலைப்பெற்று என் நெஞ்சமே பேசாய் நினைக்குங்கால் நெஞ்சத்துப் பேராது நிற்கும் பெருமானை என்கொலோ ஓராது நிற்பது உணர்வு? 81 | |
|
| |
|
|
| 2362 | உணரில் உணர்வு அரியன் உள்ளம் புகுந்து புணரிலும் காண்பு அரியன் உண்மை இணர் அணைய கொங்கு அணைந்து வண்டு அறையும் தண் துழாய்க் கோமானை எங்கு அணைந்து காண்டும் இனி? 82 | |
|
| |
|
|
| 2363 | இனி அவன் மாயன் என உரைப்பரேலும் இனி அவன் காண்பு அரியனேலும் இனியவன் கள்ளத்தால் மண் கொண்டு விண் கடந்த பைங் கழலான் உள்ளத்தின் உள்ளே உளன் 83 | |
|
| |
|
|
| 2364 | உளனாய நான்மறையின் உட்பொருளை உள்ளத்து உளனாகத் தேர்ந்து உணர்வரேலும் உளனாய வண் தாமரை நெடுங் கண் மாயவனை யாவரே கண்டார்? உகப்பர் கவி 84 | |
|
| |
|
|
| 2365 | கவியினார் கை புனைந்து கண் ஆர் கழல் போய் செவியின் ஆர் கேள்வியராய்ச் சேர்ந்தார் புவியினார் போற்றி உரைக்க பொலியுமே பின்னைக்கு ஆய் ஏற்று உயிரை அட்டான் எழில்? 85 | |
|
| |
|
|
| 2366 | எழில் கொண்ட மின்னுக் கொடி எடுத்து வேகத் தொழில்கொண்டு தான் முழங்கித் தோன்றும் எழில்கொண்ட நீர் மேகம் அன்ன நெடு மால் நிறம் போல கார் வானம் காட்டும் கலந்து 86 | |
|
| |
|
|
| 2367 | கலந்து மணி இமைக்கும் கண்ணா நின் மேனி மலர்ந்து மரகதமே காட்டும் நலம் திகழும் கொந்தின்வாய் வண்டு அறையும் தண் துழாய்க் கோமானை அந்தி வான் காட்டும் அது 87 | |
|
| |
|
|
| 2368 | அது நன்று இது தீது என்று ஐயப்படாதே மது நின்ற தண் துழாய் மார்வன் பொது நின்ற பொன் அம் கழலே தொழுமின் முழுவினைகள் முன்னம் கழலும் முடிந்து 88 | |
|
| |
|
|
| 2369 | முடிந்த பொழுதில் குற வாணர் ஏனம் படிந்து உழு சால் பைந் தினைகள் வித்த தடிந்து எழுந்த வேய்ங் கழை போய் விண் திறக்கும் வேங்கடமே மேல் ஒரு நாள் தீம் குழல் வாய் வைத்தான் சிலம்பு 89 | |
|
| |
|
|
| 2370 | சிலம்பும் செறி கழலும் சென்று இசைப்ப விண் ஆறு அலம்பிய சேவடி போய் அண்டம் புலம்பிய தோள் எண் திசையும் சூழ இடம் போதாது என்கொலோ வண் துழாய் மால் அளந்த மண்? 90 | |
|
| |
|
|
| 2371 | மண் உண்டும் பேய்ச்சி முலை உண்டும் ஆற்றாதாய் வெண்ணெய் விழுங்க வெகுண்டு ஆய்ச்சி கண்ணிக் கயிற்றினால் கட்ட தான் கட்டுண்டிருந்தான் வயிற்றினோடு ஆற்றா மகன் 91 | |
|
| |
|
|
| 2372 | மகன் ஒருவர்க்கு அல்லாத மா மேனி மாயன் மகன் ஆம் அவன் மகன் தன் காதல் மகனைச் சிறைசெய்த வாணன் தோள் செற்றான் கழலே நிறைசெய்து என் நெஞ்சே நினை 92 | |
|
| |
|
|
| 2373 | நினைத்து உலகில் ஆர் தெளிவார் நீண்ட திருமால்? அனைத்து உலகும் உள் ஒடுக்கி ஆல்மேல் கனைத்து உலவு வெள்ளத்து ஓர் பிள்ளையாய் மெள்ளத் துயின்றானை உள்ளத்தே வை நெஞ்சமே உய்த்து 93 | |
|
| |
|
|
| 2374 | உய்த்து உணர்வு என்னும் ஒளி கொள் விளக்கு ஏற்றி வைத்து அவனை நாடி வலைப்படுத்தேன் மெத்தெனவே நின்றான் இருந்தான் கிடந்தான் என் நெஞ்சத்து பொன்றாமை மாயன் புகுந்து (94) | |
|
| |
|
|
| 2375 | புகுந்து இலங்கும் அந்திப் பொழுதத்து அரியாய் இகழ்ந்த இரணியனது ஆகம் சுகிர்ந்து எங்கும் சிந்தப் பிளந்த திருமால் திருவடியே வந்தித்து என் நெஞ்சமே வாழ்த்து (95) | |
|
| |
|
|
| 2376 | வாழ்த்திய வாயராய் வானோர் மணி மகுடம் தாழ்த்தி வணங்கத் தழும்பாமே கேழ்த்த அடித் தாமரை மலர்மேல் மங்கை மணாளன் அடித் தாமரை ஆம் அலர் (96) | |
|
| |
|
|
| 2377 | அலர் எடுத்த உந்தியான் ஆங்கு எழில் ஆய மலர் எடுத்த மா மேனி மாயன் அலர் எடுத்த வண்ணத்தான் மா மலரான் வார் சடையான் என்று இவர்கட்கு எண்ணத்தான் ஆமோ இமை? (97) | |
|
| |
|
|
| 2378 | இமம் சூழ் மலையும் இரு விசும்பும் காற்றும் அமம் சூழ்ந்து அற விளங்கித் தோன்றும் நமன் சூழ் நரகத்து நம்மை நணுகாமல் காப்பான் துரகத்தை வாய் பிளந்தான் தொட்டு (98) | |
|
| |
|
|
| 2379 | தொட்ட படை எட்டும் தோலாத வென்றியான் அட்டபுயகரத்தான் அஞ்ஞான்று குட்டத்துக் கோள் முதலை துஞ்ச குறித்து எறிந்த சக்கரத்தான் தாள் முதலே நங்கட்குச் சார்வு (99) | |
|
| |
|
|
| 2380 | சார்வு நமக்கு என்றும் சக்கரத்தான் தண் துழாய்த் தார் வாழ் வரை மார்பன் தான் முயங்கும் கார் ஆர்ந்த வான் அமரும் மின் இமைக்கும் வண் தாமரை நெடுங் கண் தேன் அமரும் பூமேல் திரு (100) | |
|
| |
|
|