மூன்றாம் ஆயிரம் இயற்பா திருமழிசை ஆழ்வார்
|
| நான்முகன் திருவந்தாதி |
| 2381 | நான்முகனை நாராயணன் படைத்தான் நான்முகனும் தான் முகமாய்ச் சங்கரனைத் தான் படைத்தான் யான் முகமாய் அந்தாதி மேலிட்டு அறிவித்தேன் ஆழ் பொருளை சிந்தாமல் கொள்மின் நீர் தேர்ந்து (1) | |
|
| |
|
|
| 2382 | தேருங்கால் தேவன் ஒருவனே என்று உரைப்பர் ஆரும் அறியார் அவன் பெருமை ஓரும் பொருள் முடிவும் இத்தனையே எத் தவம் செய்தார்க்கும் அருள் முடிவது ஆழியான்பால் (2) | |
|
| |
|
|
| 2383 | பாலில் கிடந்ததுவும் பண்டு அரங்கம் மேயதுவும் ஆலில் துயின்றதுவும் ஆர் அறிவார் ஞாலத்து ஒரு பொருளை வானவர் தம் மெய்ப் பொருளை அப்பில் அரு பொருளை யான் அறிந்த ஆறு? (3) | |
|
| |
|
|
| 2384 | ஆறு சடைக் கரந்தான் அண்டர்கோன் தன்னோடும் கூறு உடையன் என்பதுவும் கொள்கைத்தே? வேறு ஒருவர் இல்லாமை நின்றானை எம்மானை எப் பொருட்கும் சொல்லானைச் சொன்னேன் தொகுத்து (4) | |
|
| |
|
|
| 2385 | தொகுத்த வரத்தனாய்த் தோலாதான் மார்வம் வகிர்த்த வளை உகிர் தோள் மாலே உகத்தில் ஒருநான்று நீ உயர்த்தி உள்வாங்கி நீயே அரு நான்கும் ஆனாய் அறி (5) | |
|
| |
|
|
| 2386 | அறியார் சமணர் அயர்த்தார் பவுத்தர் சிறியார் சிவப்பட்டார் செப்பில் வெறியாய மாயவனை மாலவனை மாதவனை ஏத்தாதார் ஈனவரே ஆதலால் இன்று (6) | |
|
| |
|
|
| 2387 | இன்று ஆக நாளையே ஆக இனிச் சிறிது நின்று ஆக நின் அருள் என்பாலதே நன்றாக நான் உன்னை அன்றி இலேன் கண்டாய் நாரணனே நீ என்னை அன்றி இலை (7) | |
|
| |
|
|
| 2388 | இலை துணை மற்று என் நெஞ்சே! ஈசனை வென்ற சிலை கொண்ட செங்கண் மால் சேரா குலை கொண்ட ஈர் ஐந்தலையான் இலங்கையை ஈடு அழித்த கூர் அம்பன் அல்லால் குறை (8) | |
|
| |
|
|
| 2389 | குறைகொண்டு நான்முகன் குண்டிகை நீர் பெய்து மறைகொண்ட மந்திரத்தால் வாழ்த்தி கறைகொண்ட கண்டத்தான் சென்னிமேல் ஏறக் கழுவினான் அண்டத்தான் சேவடியை ஆங்கு (9) | |
|
| |
|
|
| 2390 | ஆங்கு ஆரவாரம் அது கேட்டு அழல் உமிழும் பூங் கார் அரவு அணையான் பொன் மேனி யாம் காண வல்லமே அல்லமே? மா மலரான் வார் சடையான் வல்லரே அல்லரே வாழ்த்து (10) | |
|
| |
|
|
| 2391 | வாழ்த்துக வாய் காண்க கண் கேட்க செவி மகுடம் தாழ்த்தி வணங்குமின்கள் தண் மலரால் சூழ்த்த துழாய் மன்னு நீள் முடி என் தொல்லை மால் தன்னை வழா வண் கை கூப்பி மதித்து (11) | |
|
| |
|
|
| 2392 | மதித்தாய் போய் நான்கில் மதியார் போய் வீழ மதித்தாய் மதி கோள் விடுத்தாய் மதித்தாய் மடுக் கிடந்த மா முதலை கோள் விடுப்பான் ஆழி விடற்கு இரண்டும் போய் இரண்டின் வீடு (12) | |
|
| |
|
|
| 2393 | வீடு ஆக்கும் பெற்றி அறியாது மெய் வருத்திக் கூடு ஆக்கி நின்று உண்டு கொன்று உழல்வீர் வீடு ஆக்கும் மெய்ப்பொருள் தான் வேத முதற்பொருள் தான் விண்ணவர்க்கு நற்பொருள் தான் நாராயணன (13) | |
|
| |
|
|
| 2394 | நாராயணன் என்னை ஆளி நரகத்துச் சேராமல் காக்கும் திருமால் தன் பேரான பேசப் பெறாத பிணச் சமயர் பேசக் கேட்டு ஆசைப்பட்டு ஆழ்வார் பலர (14) | |
|
| |
|
|
| 2395 | பல தேவர் ஏத்த படி கடந்தான் பாதம் மலர் ஏற இட்டு இறைஞ்சி வாழ்த்த வலர் ஆகில் மார்க்கண்டன் கண்ட வகையே வரும் கண்டீர் நீர்க்கண்டன் கண்ட நிலை (15) | |
|
| |
|
|
| 2396 | நிலைமன்னும் என் நெஞ்சம் அந்நான்று தேவர் தலைமன்னர் தாமே மாற்றாக பல மன்னர் போர் மாள வெம் கதிரோன்மாய பொழில் மறைய தேர் ஆழியால் மறைத்தாரால் (16) | |
|
| |
|
|
| 2397 | ஆல நிழற்கீழ் அறநெறியை நால்வர்க்கு மேலை யுகத்து உரைத்தான் மெய்த் தவத்தோன் ஞாலம் அளந்தானை ஆழிக் கிடந்தானை ஆல்மேல் வளர்ந்தானைத் தான் வணங்குமாறு (17) | |
|
| |
|
|
| 2398 | மாறு ஆய தானவனை வள் உகிரால் மார்வு இரண்டு கூறாகக் கீறிய கோளரியை வேறாக ஏத்தியிருப்பாரை வெல்லுமே மற்று அவரைச் சாத்தியிருப்பார் தவம் (18) | |
|
| |
|
|
| 2399 | தவம் செய்து நான்முகனால் பெற்ற வரத்தை அவம் செய்த ஆழியாய் அன்றே? உவந்து எம்மைக் காப்பாய் நீ காப்பதனை ஆவாய் நீ வைகுந்தம் ஈப்பாயும் எவ் உயிர்க்கும் ந (19) | |
|
| |
|
|
| 2400 | நீயே உலகும் எல்லாம் நின் அருளே நிற்பனவும் நீயே தவத் தேவ தேவனும் நீயே எரி சுடரும் மால் வரையும் எண் திசையும் அண்டத்து இரு சுடரும் ஆய இவை (20) | |
|
| |
|
|
| 2401 | இவையா பில வாய் திறந்து எரி கான்ற இவையா எரிவட்டக் கண்கள் இவையா எரி பொங்கிக் காட்டும் இமையோர் பெருமான் அரி பொங்கிக் காட்டும் அழகு (21) | |
|
| |
|
|
| 2402 | அழகியான் தானே அரி உருவன் தானே பழகியான் தாளே பணிமின் குழவியாய்த் தான் ஏழ் உலகுக்கும் தன்மைக்கும் தன்மையனே மீன் ஆய் உயிர் அளிக்கும் வித்து (22) | |
|
| |
|
|
| 2403 | வித்தும் இடவேண்டும் கொல்லோ விடை அடர்த்த பத்தி உழவன் பழம் புனத்து? மொய்த்து எழுந்த கார் மேகம் அன்ன கரு மால் திருமேனி நீர் வானம் காட்டும் நிகழ்ந்து (23) | |
|
| |
|
|
| 2404 | நிகழ்ந்தாய் பால் பொன் பசுப்புக் கார் வண்ணம் நான்கும் இகழ்ந்தாய் இருவரையும் வீய புகழ்ந்தாய் சினப் போர்ச் சுவேதனைச் சேனாபதியாய் மனப் போர் முடிக்கும் வகை (24) | |
|
| |
|
|
| 2405 | வகையால் மதியாது மண் கொண்டாய் மற்றும் வகையால் வருவது ஒன்று உண்டே? வகையால் வயிரம் குழைத்து உண்ணும் மாவலி தான் என்னும் வயிர வழக்கு ஒழித்தாய் மற்று (25) | |
|
| |
|
|
| 2406 | மற்றுத் தொழுவார் ஒருவரையும் யான் இன்மை கற்றைச் சடையான் கரி கண்டாய் எற்றைக்கும் கண்டுகொள் கண்டாய் கடல்வண்ணா! யான் உன்னைக் கண்டுகொளகிற்குமாறு (26) | |
|
| |
|
|
| 2407 | மால் தான் புகுந்த மட நெஞ்சம் மற்றதுவும் பேறாகக் கொள்வனோ பேதைகாள்! நீறாடி தான் காண மாட்டாத தார் அகலச் சேவடியை யான் காண வல்லேற்கு இது? (27) | |
|
| |
|
|
| 2408 | இது இலங்கை ஈடு அழியக் கட்டிய சேது இது விலங்கு வாலியை வீழ்த்தது இது இலங்கை தான் ஒடுங்க வில் நுடங்க தண் தார் இராவணனை ஊன் ஒடுங்க எய்தான் உகப்பு (28) | |
|
| |
|
|
| 2409 | உகப்பு உருவன் தானே ஒளி உருவன் தானே மகப்பு உருவன் தானே மதிக்கில் மிகப் புருவம் ஒன்றுக்கு ஒன்று ஓசனையான் வீழ ஒரு கணையால் அன்றிக்கொண்டு எய்தான் அவன் (29) | |
|
| |
|
|
| 2410 | அவன் என்னை ஆளி அரங்கத்து அரங்கில் அவன் என்னை எய்தாமல் காப்பான் அவன் என்னது உள்ளத்து நின்றான் இருந்தான் கிடக்குமே வெள்ளத்து அரவு அணையின்மேல்? (30) | |
|
| |
|
|
| 2411 | மேல் நான்முகன் அரனை இட்ட விடு சாபம் தான் நாரணன் ஒழித்தான் தாரகையுள் வானோர் பெருமானை ஏத்தாத பேய்காள் பிறக்கும் கரு மாயம் பேசில் கதை (31) | |
|
| |
|
|
| 2412 | கதைப் பொருள் தான் கண்ணன் திருவயிற்றின் உள்ள உதைப்பளவு போதுபோக்கு இன்றி வதைப்பொருள் தான் வாய்ந்த குணத்துப் படாதது அடைமினோ ஆய்ந்த குணத்தான் அடி (32) | |
|
| |
|
|
| 2413 | அடிச் சகடம் சாடி அரவு ஆட்டி யானை பிடித்து ஒசித்து பேய் முலை நஞ்சு உண்டு வடிப் பவள வாய்ப் பின்னை தோளிக்கா வல் ஏற்று எருத்து இறுத்து கோ பின்னும் ஆனான் குறிப்பு (33) | |
|
| |
|
|
| 2414 | குறிப்பு எனக்குக் கோட்டியூர் மேயானை ஏத்த குறிப்பு எனக்கு நன்மை பயக்க வெறுப்பனோ வேங்கடத்து மேயானை மெய் வினை நோய் எய்தாமல் தான் கடத்தும் தன்மையான் தாள்? (34) | |
|
| |
|
|
| 2415 | தாளால் உலகம் அளந்த அசைவேகொல்? வாளா கிடந்தருளும் வாய்திறவான் நீள் ஓதம் வந்து அலைக்கும் மா மயிலை மா அல்லிக் கேணியான் ஐந்தலை வாய் நாகத்து அணை (35) | |
|
| |
|
|
| 2416 | நாகத்து அணைக் குடந்தை வெஃகா திரு எவ்வுள் நாகத்து அணை அரங்கம் பேர் அன்பில் நாகத்து அணைப் பாற்கடல் கிடக்கும் ஆதி நெடுமால் அணைப்பார் கருத்தன் ஆவான் (36) | |
|
| |
|
|
| 2417 | வான் உலவு தீவளி மா கடல் மா பொருப்பு தான் உலவு வெம் கதிரும் தண் மதியும் மேல் நிலவு கொண்டல் பெயரும் திசை எட்டும் சூழ்ச்சியும் அண்டம் திருமால் அகைப்பு (37) | |
|
| |
|
|
| 2418 | அகைப்பு இல் மனிசரை ஆறு சமயம் புகைத்தான் பொரு கடல் நீர் வண்ணன் உகைக்குமேல் எத் தேவர் வாலாட்டும் எவ்வாறு செய்கையும் அப்போது ஒழியும் அழைப்பு (38) | |
|
| |
|
|
| 2419 | அழைப்பன் திருவேங்கடத்தானைக் காண இழைப்பன் திருக்கூடல் கூட மழைப் பேர் அருவி மணி வரன்றி வந்து இழிய யானை வெருவி அரவு ஒடுங்கும் வெற்பு (39) | |
|
| |
|
|
| 2420 | வெற்பு என்று வேங்கடம் பாடினேன் வீடு ஆக்கி நிற்கின்றேன் நின்று நினைக்கின்றேன் கற்கின்ற நூல் வலையில் பட்டிருந்த நூலாட்டி கேள்வனார் கால் வலையில் பட்டிருந்தேன் காண் (40) | |
|
| |
|
|
| 2421 | காணல் உறுகின்றேன் கல் அருவி முத்து உதிர ஓண விழவில் ஒலி அதிர பேணி வரு வேங்கடவா என் உள்ளம் புகுந்தாய் திருவேங்கடம் அதனைச் சென்று (41) | |
|
| |
|
|
| 2422 | சென்று வணங்குமினோ சேண் உயர் வேங்கடத்தை நின்று வினை கெடுக்கும் நீர்மையால் என்றும் கடிக் கமல நான்முகனும் கண்மூன்றத்தானும் அடிக் கமலம் இட்டு ஏத்தும் அங்கு (42) | |
|
| |
|
|
| 2423 | மங்குல் தோய் சென்னி வட வேங்கடத்தானை கங்குல் புகுந்தார்கள் காப்பு அணிவான் திங்கள் சடை ஏற வைத்தானும் தாமரைமேலானும் குடை ஏற தாம் குவித்துக் கொண்டு (43) | |
|
| |
|
|
| 2424 | கொண்டு குடங்கால் மேல் வைத்த குழவியாய் தண்ட அரக்கன் தலை தாளால் பண்டு எண்ணிப் போம் குமரன் நிற்கும் பொழில் வேங்கடமலைக்கே போம் குமரருள்ளீர்! புரிந்து (44) | |
|
| |
|
|
| 2425 | புரிந்து மலர் இட்டுப் புண்டரிகப் பாதம் பரிந்து படுகாடு நிற்ப தெரிந்து எங்கும் தான் ஓங்கி நிற்கின்றான் தண் அருவி வேங்கடமே வானோர்க்கும் மண்ணோர்க்கும் வைப்பு (45) | |
|
| |
|
|
| 2426 | வைப்பன் மணி விளக்கா மா மதியை மாலுக்கு என்று எப்பொழுதும் கை நீட்டும் யானையை எப்பாடும் வேடு வளைக்கக் குறவர் வில் எடுக்கும் வேங்கடமே நாடு வளைத்து ஆடுதுமேல் நன்று (46) | |
|
| |
|
|
| 2427 | நன்மணி வண்ணன் ஊர் ஆளியும் கோளரியும் பொன் மணியும் முத்தமும் பூ மரமும் பன்மணி நீ ரோடு பொருது உருளும் கானமும் வானரமும் வேடும் உடை வேங்கடம் (47) | |
|
| |
|
|
| 2428 | வேங்கடமே விண்ணோர் தொழுவதுவும் மெய்ம்மையால் வேங்கடமே மெய் வினை நோய் தீர்ப்பதுவும் வேங்கடமே தானவரை வீழத் தன் ஆழிப் படை தொட்டு வானவரைக் காப்பான் மலை (48) | |
|
| |
|
|
| 2429 | மலை ஆமைமேல் வைத்து வாசுகியைச் சுற்றி தலை ஆமை தான் ஒரு கை பற்றி அலையாமல் பீறக் கடைந்த பெருமான் திரு நாமம் கூறுவதே யாவர்க்கும் கூற்று (49) | |
|
| |
|
|
| 2430 | கூற்றமும் சாரா கொடு வினையும் சாரா தீ மாற்றமும் சாராவகை அறிந்தேன் ஆற்றங் கரைக் கிடக்கும் கண்ணன் கடல் கிடக்கும் மாயன் உரைக் கிடக்கும் உள்ளத்து எனக்கு (50) | |
|
| |
|
|
| 2431 | எனக்கு ஆவார் ஆர் ஒருவரே? எம் பெருமான் தனக்கு ஆவான் தானே மற்று அல்லால் புனக் காயா வண்ணனே உன்னைப் பிறர் அறியார் என் மதிக்கு விண் எல்லாம் உண்டோ விலை? (51) | |
|
| |
|
|
| 2432 | விலைக்கு ஆட்படுவர் விசாதி ஏற்று உண்பர் தலைக்கு ஆட்பலி திரிவர் தக்கோர் முலைக்கால் விடம் உண்ட வேந்தனையே வேறா ஏத்தாதார் கடம் உண்டார் கல்லாதவர் (52) | |
|
| |
|
|
| 2433 | கல்லாதவர் இலங்கை கட்டழித்த காகுத்தன் அல்லால் ஒரு தெய்வம் யான் இலேன் பொல்லாத தேவரை தேவர் அல்லாரை திரு இல்லாத் தேவரைத் தேறேல்மின் தேவு (53) | |
|
| |
|
|
| 2434 | தேவராய் நிற்கும் அத் தேவும் அத் தேவரில் மூவராய் நிற்கும் முது புணர்ப்பும் யாவராய் நிற்கின்றது எல்லாம் நெடுமால் என்று ஓராதார் கற்கின்றது எல்லாம் கடை (54) | |
|
| |
|
|
| 2435 | கடை நின்று அமரர் கழல் தொழுது நாளும் இடைநின்ற இன்பத்தர் ஆவர் புடைநின்ற நீர் ஓத மேனி நெடுமாலே நின் அடியை யார் ஓத வல்லார் அவர்? (55) | |
|
| |
|
|
| 2436 | அவர் இவர் என்று இல்லை அனங்கவேள் தாதைக்கு எவரும் எதிர் இல்லை கண்டீர் உவரிக் கடல் நஞ்சம் உண்டான் கடன் என்று வாணற்கு உடன் நின்று தோற்றான் ஒருங்கு (56) | |
|
| |
|
|
| 2437 | ஒருங்கு இருந்த நல் வினையும் தீவினையும் ஆவான் பெரும் குருந்தம் சாய்த்தவனே பேசில் மருங்கு இருந்த வானவர் தாம் தானவர் தாம் தாரகை தான் என் நெஞ்சம் ஆனவர் தாம் அல்லாதது என்? (57) | |
|
| |
|
|
| 2438 | என் நெஞ்சம் மேயான் இருள் நீக்கி எம்பிரான் மன் அஞ்ச முன் ஒருநாள் மண் அளந்தான் என் நெஞ்சம் மேயானை இல்லா விடை ஏற்றான் வெவ்வினை தீர்த்து ஆயானுக்கு ஆக்கினேன் அன்பு (58) | |
|
| |
|
|
| 2439 | அன்பு ஆவாய் ஆர் அமுதம் ஆவாய் அடியேனுக்கு இன்பு ஆவாய் எல்லாமும் நீ ஆவாய் பொன் பாவை கேள்வா கிளர் ஒளி என் கேசவனே கேடு இன்றி ஆள்வாய்க்கு அடியேன் நான் ஆள் (59) | |
|
| |
|
|
| 2440 | ஆள் பார்த்து உழிதருவாய் கண்டுகொள் என்றும் நின் தாள்பார்த்து உழிதருவேன் தன்மையை கேட்பார்க்கு அரும் பொருளாய் நின்ற அரங்கனே உன்னை விரும்புவதே விள்ளேன் மனம் (60) | |
|
| |
|
|
| 2441 | மனக் கேதம் சாரா மதுசூதன் தன்னைத் தனக்கே தான் தஞ்சமாக் கொள்ளில் எனக்கே தான் இன்று ஒன்றி நின்று உலகை ஏழ் ஆணை ஓட்டினான் சென்று ஒன்றி நின்ற திரு (61) | |
|
| |
|
|
| 2442 | திரு நின்ற பக்கம் திறவிது என்று ஓரார் கரு நின்ற கல்லார்க்கு உரைப்பர் திரு இருந்த மார்பில் சிரீதரன் தன் வண்டு உலவு தண் துழாய்த் தார் தன்னைச் சூடித் தரித்து (62) | |
|
| |
|
|
| 2443 | தரித்திருந்தேன் ஆகவே தாராகணப் போர் விரித்து உரைத்த வெம் நாகத்து உன்னைத் தெரித்து எழுதி வாசித்தும் கேட்டும் வணங்கி வழிபட்டும் பூசித்தும் போக்கினேன் போது (63) | |
|
| |
|
|
| 2444 | போதான இட்டு இறைஞ்சி ஏத்துமினோ பொன் மகரக் காதானை ஆதிப் பெருமானை நாதானை நல்லானை நாரணனை நம் ஏழ் பிறப்பு அறுக்கும் சொல்லானை சொல்லுவதே சூது (64) | |
|
| |
|
|
| 2445 | சூது ஆவது என் நெஞ்சத்து எண்ணினேன் சொல் மாலை மாது ஆய மாலவனை மாதவனை யாதானும் வல்லவா சிந்தித்திருப்பேற்கு வைகுந்தத்து இல்லையோ சொல்லீர் இடம்? (65) | |
|
| |
|
|
| 2446 | இடம் ஆவது என் நெஞ்சம் இன்றெல்லாம் பண்டு பட நாகணை நெடிய மாற்கு திடமாக வையேன் மதிசூடி தன்னோடு அயனை நான் வையேன் ஆட் செய்யேன் வலம் (66) | |
|
| |
|
|
| 2447 | வலம் ஆக மாட்டாமை தான் ஆக வைகல் குலம் ஆக குற்றம் தான் ஆக நலம் ஆக நாரணனை நா பதியை ஞானப் பெருமானை சீரணனை ஏத்தும் திறம் (67) | |
|
| |
|
|
| 2448 | திறம்பேல்மின் கண்டீர் திருவடி தன் நாமம் மறந்தும் புரம் தொழா மாந்தர் இறைஞ்சியும் சாதுவராய்ப் போதுமின்கள் என்றான் நமனும் தன் தூதுவரைக் கூவிச் செவிக்கு (68) | |
|
| |
|
|
| 2449 | செவிக்கு இன்பம் ஆவதுவும் செங்கண் மால் நாமம் புவிக்கும் புவி அதுவே கண்டீர் கவிக்கு நிறை பொருளாய் நின்றானை நேர்பட்டேன் பார்க்கில் மறைப் பொருளும் அத்தனையேதான் (69) | |
|
| |
|
|
| 2450 | தான் ஒருவன் ஆகி தரணி இடந்து எடுத்து ஏன் ஒருவனாய் எயிற்றில் தாங்கியதும் யான் ஒருவன் இன்றா அறிகின்றேன் அல்லேன் இரு நிலத்தைச் சென்று ஆங்கு அடிப்படுத்த சேய் (70) | |
|
| |
|
|
| 2451 | சேயன் அணியன் சிறியன் மிகப் பெரியன் ஆயன் துவரைக் கோனாய் நின்ற மாயன் அன்று ஓதிய வாக்கு அதனைக் கல்லார் உலகத்தில் ஏதிலர் ஆம் மெய்ஞ் ஞானம் இல் (71) | |
|
| |
|
|
| 2452 | இல்லறம் அல்லேல் துறவறம் இல் என்னும் சொல் அறம் அல்லனவும் சொல் அல்ல நல்லறம் ஆவனவும் நால் வேத மாத் தவமும் நாரணனே ஆவது ஈது அன்று என்பார் ஆர்? (72) | |
|
| |
|
|
| 2453 | ஆரே அறிவார் அனைத்து உலகும் உண்டு உமிழ்ந்த பேர் ஆழியான் தன் பெருமையை? கார் செறிந்த கண்டத்தான் எண் கண்ணான் காணான் அவன் வைத்த பண்டைத் தானத்தின் பதி (73) | |
|
| |
|
|
| 2454 | பதிப் பகைஞற்கு ஆற்றாது பாய் திரை நீர்ப் பாழி மதித்து அடைந்த வாள் அரவம் தன்னை மதித்து அவன் தன் வல் ஆகத்து ஏற்றிய மா மேனி மாயவனை அல்லாது ஒன்று ஏத்தாது என் நா (74) | |
|
| |
|
|
| 2455 | நாக் கொண்டு மானிடம் பாடேன் நலம் ஆக தீக் கொண்ட செஞ்சடையான் சென்று என்றும் பூக் கொண்டு வல்லவாறு ஏத்த மகிழாத வைகுந்தச் செல்வனார் சேவடிமேல் பாட்டு (75) | |
|
| |
|
|
| 2456 | பாட்டும் முறையும் படு கதையும் பல் பொருளும் ஈட்டிய தீயும் இரு விசும்பும் கேட்ட மனுவும் சுருதி மறை நான்கும் மாயன் தன மாயையில் பட்ட தற்பு (76) | |
|
| |
|
|
| 2457 | தற்பு என்னைத் தான் அறியானேலும் தடங் கடலைக் கல் கொண்டு தூர்த்த கடல் வண்ணன் என் கொண்ட வெவ்வினையும் நீங்க விலங்கா மனம் வைத்தான் எவ் வினையும் மாயுமால் கண்டு (77) | |
|
| |
|
|
| 2458 | கண்டு வணங்கினார்க்கு என்னாம்கொல் காமன் உடல் கொண்ட தவத்தாற்கு உமை உணர்த்த வண்டு அலம்பும் தார் அலங்கல் நீள் முடியான் தன் பெயரே கேட்டிருந்து அங்கு ஆர் அலங்கல் ஆனமையால் ஆய்ந்து? (78) | |
|
| |
|
|
| 2459 | ஆய்ந்துகொண்டு ஆதிப் பெருமானை அன்பினால் வாய்ந்த மனத்து இருத்த வல்லார்கள் ஏய்ந்த தம் மெய் குந்தம் ஆக விரும்புவரே தாமும் தம் வைகுந்தம் காண்பார் விரைந்து (79) | |
|
| |
|
|
| 2460 | விரைந்து அடைமின் மேல் ஒரு நாள் வெள்ளம் பரக்க கரந்து உலகம் காத்து அளித்த கண்ணன் பரந்து உலகம் பாடின ஆடின கேட்டு படு நரகம் வீடின வாசற் கதவு (80) | |
|
| |
|
|
| 2461 | கதவு மனம் என்றும் காணலாம் என்றும் குதையும் வினை ஆவி தீர்ந்தேன் விதை ஆக நல் தமிழை வித்தி என் உள்ளத்தை நீ விளைத்தாய் கற்ற மொழி ஆகிக் கலந்து (81) | |
|
| |
|
|
| 2462 | கலந்தான் என் உள்ளத்து காம வேள் தாதை நலம் தானும் ஈது ஒப்பது உண்டே? அலர்ந்தலர்கள் இட்டு ஏத்தும் ஈசனும் நான்முகனும் என்றிவர்கள் விட்டு ஏத்த மாட்டாத வேந்து (82) | |
|
| |
|
|
| 2463 | வேந்தர் ஆய் விண்ணவர் ஆய் விண் ஆகி தண்ணளி ஆய் மாந்தர் ஆய் மாது ஆய் மற்று எல்லாம் ஆய் சார்ந்தவர்க்குத் தன் ஆற்றான் நேமியான் மால் வண்ணன் தான் கொடுக்கும் பின்னால் தான் செய்யும் பிதிர் (83) | |
|
| |
|
|
| 2464 | பிதிரும் மனம் இலேன் பிஞ்ஞகன் தன்னோடு எதிர்வன்;அவன் எனக்கு நேரான் அதிரும் கழற் கால மன்னனையே கண்ணனையே நாளும் தொழக் காதல் பூண்டேன் தொழில் (84) | |
|
| |
|
|
| 2465 | தொழில் எனக்குத் தொல்லை மால் தன் நாமம் ஏத்த பொழுது எனக்கு மற்று அதுவே போதும் கழி சினத்த வல்லாளன் வானரக் கோன் வாலி மதன் அழித்த வில்லாளன் நெஞ்சத்து உளன் (85) | |
|
| |
|
|
| 2466 | உளன் கண்டாய் நல் நெஞ்சே உத்தமன் என்றும் உளன் கண்டாய் உள்ளுவார் உள்ளத்து உளன் கண்டாய் தன் ஒப்பான் தான் ஆய் உளன் காண் தமியேற்கும் என் ஒப்பார்க்கு ஈசன் இமை (86) | |
|
| |
|
|
| 2467 | இமயப் பெரு மலை போல் இந்திரனார்க்கு இட்ட சமய விருந்து உண்டு ஆர் காப்பார் சமயங்கள் கண்டான் அவை காப்பான் கார்க்கண்டன் நான்முகனோடு உண்டான் உலகோடு உயிர்? (87) | |
|
| |
|
|
| 2468 | உயிர் கொண்டு உடல் ஒழிய ஓதும்போது ஓடி அயர்வு என்ற தீர்ப்பான் பேர் பாடி செயல் தீரச் சிந்தித்து வாழ்வாரே வாழ்வார் சிறு சமயப் பந்தனையார் வாழ்வேல் பழுது (88) | |
|
| |
|
|
| 2469 | பழுது ஆகாது ஒன்று அறிந்தேன் பாற்கடலான் பாதம் வழுவாவகை நினைந்து வைகல் தொழுவாரைக் கண்டு இறைஞ்சி வாழ்வார் கலந்த வினை கெடுத்து விண் திறந்து வீற்றிருப்பார் மிக்கு (89) | |
|
| |
|
|
| 2470 | வீற்றிருந்து விண் ஆள வேண்டுவார் வேங்கடத்தான் பால் திருந்த வைத்தாரே பல் மலர்கள் மேல் திருந்தி வாழ்வார் வரும் மதி பார்த்து அன்பினராய் மற்று அவற்கே தாழ்வாய் இருப்பார் தமர் (90) | |
|
| |
|
|
| 2471 | தமர் ஆவார் யாவர்க்கும் தாமரைமேலாற்கும் அமரர்க்கும் ஆடு அரவு ஆர்த்தாற்கும் அமரர்கள் தாள் தாமரை மலர்கள் இட்டு இறைஞ்சி மால் வண்ணன் தாள் தாமரை அடைவோம் என்று (91) | |
|
| |
|
|
| 2472 | என்றும் மறந்தறியேன் என் நெஞ்சத்தே வைத்து நின்றும் இருந்தும் நெடுமாலை என்றும் திரு இருந்த மார்பன் சிரீதரனுக்கு ஆளாய் கரு இருந்த நாள் முதலாக் காப்பு (92) | |
|
| |
|
|
| 2473 | காப்பு மறந்தறியேன் கண்ணனே என்று இருப்பன் ஆப்பு அங்கு ஒழியவும் பல் உயிர்க்கும் ஆக்கை கொடுத்து அளித்த கோனே குணப்பரனே உன்னை விடத் துணியார் மெய் தெளிந்தார் தாம் (93) | |
|
| |
|
|
| 2474 | மெய் தெளிந்தார் என் செய்யார்? வேறு ஆனார் நீறு ஆக கை தெளிந்து காட்டிக் களப்படுத்து பை தெளிந்த பாம்பின் அணையாய் அருளாய் அடியேற்கு வேம்பும் கறி ஆகும் என்று (94) | |
|
| |
|
|
| 2475 | ஏன்றேன் அடிமை இழிந்தேன் பிறப்பு இடும்பை ஆன்றேன் அமரர்க்கு அமராமை ஆன்றேன் கடன் நாடும் மண் நாடும் கைவிட்டு மேலை இடம் நாடு காண இனி (95) | |
|
| |
|
|
| 2476 | இனி அறிந்தேன் ஈசற்கும் நான்முகற்கும் தெய்வம் இனி அறிந்தேன் எம் பெருமான் உன்னை இனி அறிந்தேன் காரணன் நீ கற்றவை நீ கற்பவை நீ நல் கிரிசை நாரணன் நீ நன்கு அறிந்தேன் நான் 96 | |
|
| |
|
|