| மூன்றாம் ஆயிரம் இயற்பா
 நம்மாழ்வார்
 
 | 
		| பெரியதிருவந்தாதி | 
					
			
			
      | | 2584 | முயற்றி சுமந்து எழுந்து முந்துற்ற நெஞ்சே இயற்றுவாய் எம்மொடு நீ கூடி நயப்பு உடைய
 நா ஈன் தொடைக் கிளவியுள் பொதிவோம் நல் பூவைப்
 பூ ஈன்ற வண்ணன் புகழ்       (1)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 2585 | புகழ்வோம் பழிப்போம் புகழோம் பழியோம் இகழ்வோம் மதிப்போம் மதியோம் இகழோம் மற்று
 எங்கள் மால் செங்கண் மால் சீறல் நீ தீவினையோம்
 எங்கள் மால் கண்டாய் இவை   (2)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 2586 | இவை அன்றே நல்ல இவை அன்றே தீய இவை என்று இவை அறிவனேலும் இவை எல்லாம்
 என்னால் அடைப்பு நீக்கு ஒண்ணாது இறையவனே
 என்னால் செயற்பாலது என்?   (3)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 2587 | என்னின் மிகு புகழார் யாவரே? பின்னையும் மற்று எண் இல் மிகு புகழேன் யான் அல்லால் என்ன
 கருஞ் சோதிக் கண்ணன் கடல் புரையும் சீலப்
 பெருஞ்சோதிக்கு என் நெஞ்சு ஆட்பெற்று             (4)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 2588 | பெற்ற தாய் நீயே பிறப்பித்த தந்தை நீ மற்றையார் ஆவாரும் நீ பேசில் எற்றேயோ
 மாய மா மாயவளை மாய முலை வாய் வைத்த
 நீ அம்மா காட்டும் நெறி?             (5)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 2589 | நெறி காட்டி நீக்குதியோ? நின்பால் கரு மா முறி மேனி காட்டுதியோ? மேல் நாள் அறியோமை
 என் செய்வான் எண்ணினாய்? கண்ணனே ஈது உரையாய்
 என் செய்தால் என் படோம் யாம்?     (6)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 2590 | யாமே அருவினையோம் சேயோம் என் நெஞ்சினார் தாமே அணுக்கராய்ச் சார்ந்தொழிந்தார் பூ மேய
 செம்மாதை நின் மார்வில் சேர்வித்துப் பார் இடந்த
 அம்மா! நின் பாதத்து அருகு   (7)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 2591 | அருகும் சுவடும் தெரிவு உணரோம் அன்பே பெருகும் மிக இது என்? பேசீர் பருகலாம்
 பண்புடையீர் பார் அளந்தீர் பாவியெம் கண் காண்பு அரிய
 நுண்பு உடையீர்! நும்மை நுமக்கு   (8)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 2592 | நுமக்கு அடியோம் என்று என்று நொந்து உரைத்து என்? மாலார் தமக்கு அவர் தாம் சார்வு அரியர் ஆனால் எமக்கு இனி
 யாதானும் ஆகிடு காண் நெஞ்சே அவர்திறத்தே
 யாதானும் சிந்தித்து இரு   (9)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 2593 | இரு நால்வர் ஈரைந்தின் மேல் ஒருவர் எட்டோடு ஒரு நால்வர் ஓர் இருவர் அல்லால் திருமாற்கு
 யாம் ஆர்? வணக்கம் ஆர்? ஏ பாவம் நல் நெஞ்சே
 நாமா மிக உடையோம் நாழ்   (10)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 2594 | நாழால் அமர் முயன்ற வல் அரக்கன் இன் உயிரை வாழாவகை வலிதல் நின் வலியே? ஆழாத
 பாரும் நீ வானும் நீ காலும் நீ தீயும் நீ
 நீரும் நீ ஆய் நின்ற நீ   (11)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 2595 | நீ அன்றே ஆழ் துயரில் வீழ்விப்பான் நின்று உழன்றாய் போய் ஒன்று சொல்லி என்? போ நெஞ்சே நீ என்றும்
 காழ்த்து உபதேசம் தரினும் கைக்கொள்ளாய் கண்ணன்தாள்
 வாழ்த்துவதே கண்டாய் வழக்கு   (12)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 2596 | வழக்கொடு மாறுகோள் அன்று அடியார் வேண்ட இழக்கவும் காண்டும் இறைவ இழப்பு உண்டே?
 எம் ஆட்கொண்டு ஆகிலும் யான் வேண்ட என் கண்கள்
 தம்மால் காட்டு உன் மேனிச் சாய்             (13)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 2597 | சாயால் கரியானை உள் அறியாராய் நெஞ்சே பேயார் முலை கொடுத்தார் பேயர் ஆய் நீ யார்? போய்த்
 தேம்பு ஊண் சுவைத்து ஊன் அறிந்து அறிந்தும் தீவினை ஆம்
 பாம்பார் வாய்க் கைந் நீட்டல் பார்த்து             (14)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 2598 | பார்த்து ஓர் எதிரிதா நெஞ்சே படு துயரம் பேர்த்து ஓதப் பீடு அழிவு ஆம் பேச்சு இல்லை ஆர்த்து ஓதம்
 தம் மேனித் தாள் தடவ தாம் கிடந்து தம்முடைய
 செம்மேனிக் கண்வளர்வார் சீர்             (15)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 2599 | சீரால் பிறந்து சிறப்பால் வளராது பேர் வாமன் ஆகாக்கால் பேராளா மார்பு ஆரப்
 புல்கி நீ உண்டு உமிழ்ந்த பூமி நீர் ஏற்பு அரிதே?
 சொல்லு நீ யாம் அறிய சூழ்ந்து     (16)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 2600 | சூழ்ந்து அடியார் வேண்டினக்கால் தோன்றாது விட்டாலும் வாழ்ந்திடுவர் பின்னும் தம் வாய்திறவார் சூழ்ந்து எங்கும்
 வாள் வரைகள் போல் அரக்கன் வன் தலைகள் தாம் இடிய
 தாள் வரை வில் ஏந்தினார் தாம்   (17)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 2601 | தாம்பால் ஆப்புண்டாலும் அத் தழும்பு தான் இளகப் பாம்பால் ஆப்புண்டு பாடு உற்றாலும் சோம்பாது இப்
 பல் உருவை எல்லாம் படர்வித்த வித்தா உன்
 தொல் உருவை யார் அறிவார்? சொல்லு             (18)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 2602 | சொல்லில் குறை இல்லை சூது அறியா நெஞ்சமே எல்லி பகல் என்னாது எப்போதும் தொல்லைக்கண்
 மாத் தானைக்கு எல்லாம் ஓர் ஐவரையே மாறு ஆகக்
 காத்தானைக் காண்டும் நீ காண்             (19)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 2603 | காணப்புகில் அறிவு கைக்கொண்ட நல் நெஞ்சம் நாணப்படும் அன்றே நாம் பேசில்! மாணி
 உரு ஆகிக்கொண்டு உலகம் நீர் ஏற்ற சீரான்
 திரு ஆகம் தீண்டிற்றுச் சென்று             (20)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 2604 | சென்று அங்கு வெம் நரகில் சேராமல் காப்பதற்கு இன்று இங்கு என் நெஞ்சால் இடுக்குண்ட அன்று அங்குப்
 பார் உருவும் பார் வளைத்த நீர் உருவும் கண் புதையக்
 கார் உருவன் தான் நிமிர்த்த கால்             (21)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 2605 | காலே பொதத் திரிந்து கத்துவராம் இனநாள் மாலார் குடிபுகுந்தார் என் மனத்தே மேலால்
 தருக்கும் இடம்பாட்டினொடும் வல்வினையார் தாம் வீற்று
 இருக்கும் இடம் காணாது இளைத்து             (22)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 2606 | இளைப்பாய் இளையாப்பாய் நெஞ்சமே சொன்னேன் இளைக்க நமன் தமர்கள் பற்றி இளைப்பு எய்த
 நாய் தந்து மோதாமல் நல்குவான் நல்காப்பான்
 தாய் தந்தை எவ் உயிர்க்கும் தான்             (23)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 2607 | தானே தனித் தோன்றல் தன் அளப்பு ஒன்று இல்லாதான் தானே பிறர்கட்கும் தன் தோன்றல் தானே
 இளைக்கில் பார் கீழ் மேல் ஆம் மீண்டு அமைப்பான் ஆனால்
 அளக்கிற்பார் பாரின்மேல் ஆர்?             (24)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 2608 | ஆரானும் ஆதானும் செய்ய அகலிடத்தை ஆராய்ந்து அது திருத்தல் ஆவதே? சீர் ஆர்
 மனத்தலை வன் துன்பத்தை மாற்றினேன் வானோர்
 இனத் தலைவன் கண்ணனால் யான்   (25)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 2609 | யானும் என் நெஞ்சும் இசைந்தொழிந்தோம் வல்வினையைக் கானும் மலையும் புகக் கடிவான் தான் ஓர்
 இருள் அன்ன மா மேனி எம் இறையார் தந்த
 அருள் என்னும் தண்டால் அடித்து     (26)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 2610 | அடியால் படி கடந்த முத்தோ? அது அன்றேல் முடியால் விசும்பு அளந்த முத்தோ? நெடியாய்
 செறி கழல் கொள் தாள் நிமிர்த்துச் சென்று உலகம் எல்லாம்
 அறிகிலமால் நீ அளந்த அன்று             (27)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 2611 | அன்றே நம் கண் காணும் ஆழியான் கார் உருவம் இன்றே நாம் காணாது இருப்பதுவும் என்றேனும்
 கட்கண்ணால் காணாத அவ் உருவை நெஞ்சு என்னும்
 உட்கண்ணேல் காணும் உணர்ந்து             (28)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 2612 | உணர ஒருவர்க்கு எளியேனே செவ்வே இணரும் துழாய் அலங்கல் எந்தை? உணரத்
 தனக்கு எளியர் எவ் அளவர் அவ் அளவன் ஆனால்
 எனக்கு எளியன் எம் பெருமான் இங்கு             (29)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 2613 | இங்கு இல்லை பண்டுபோல் வீற்றிருத்தல் என்னுடைய செங்கண் மால் சீர்க்கும் சிறிது உள்ளம் அங்கே
 மடி அடக்கி நிற்பதனில் வல்வினையார் தாம் ஈண்டு
 அடி எடுப்பது அன்றோ அழகு?             (30)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 2614 | அழகும் அறிவோமாய் வல்வினையைத் தீர்ப்பான் நிழலும் அடி தாறும் ஆனோம் சுழலக்
 குடங்கள் தலைமீது எடுத்துக் கொண்டு ஆடி அன்று அத்
 தடங் கடலை மேயார் தமக்கு             (31)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 2615 | தமக்கு அடிமை வேண்டுவார் தாமோதரனார் தமக்கு அடிமை செய் என்றால் செய்யாது எமக்கு என்று
 தம் செய்யும் தீவினைக்கே தாழ்வுறுவர் நெஞ்சினார்
 யாம் செய்வது இவ்விடத்து இங்கு யாது?             (32)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 2616 | யாதானும் ஒன்று அறியில் தன் உகக்கில் என் கொலோ யாதானும் நேர்ந்து அணுகா ஆறு தான் யாதானும்
 தேறுமா செய்யா அசுரர்களை நேமியால்
 பாறுபாறு ஆக்கினான்பால்?             (33)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 2617 | பால் ஆழி நீ கிடக்கும் பண்பை யாம் கேட்டேயும் கால் ஆழும் நெஞ்சு அழியும் கண் சுழலும் நீல் ஆழிச்
 சோதியாய் ஆதியாய் தொல்வினை எம்பால் கடியும்
 நீதியாய் நின் சார்ந்து நின்று             (34)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 2618 | நின்றும் இருந்தும் கிடந்தும் திரிதந்தும் ஒன்றும் ஓவாற்றான் என் நெஞ்சு அகலான் அன்று அம் கை
 வன் புடையால் பொன்பெயரோன் வாய் தகர்த்து மார்வு இடந்தான்
 அன்புடையன் அன்றே அவன்?             (35)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 2619 | அவன் ஆம்? இவன் ஆம்? உவன் ஆம்? மற்று உம்பர் அவன் ஆம்? அவன் என்று இராதே அவன் ஆம்
 அவனே எனத் தெளிந்து கண்ணனுக்கே தீர்ந்தால்
 அவனே எவனேலும் ஆம்   (36)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 2620 | ஆம் ஆறு அறிவுடையார் ஆவது அரிது அன்றே? நாமே அது உடையோம் நல் நெஞ்சே பூ மேய்
 மதுகரம் மே தண் துழாய் மாலாரை வாழ்த்து ஆம்
 அது கரமே அன்பால் அமை             (37)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 2621 | அமைக்கும் பொழுது உண்டே ஆராயில் நெஞ்சே இமைக்கும் பொழுதும்? இடைச்சி குமைத்திறங்கள்
 ஏசியே ஆயினும் ஈன் துழாய் மாயனையே
 பேசியே போக்காய் பிழை             (38)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 2622 | பிழைக்க முயன்றோமோ நெஞ்சமே பேசாய்? தழைக்கும் துழாய் மார்வன் தன்னை அழைத்து ஒருகால்
 போய் உபகாரம் பொலியக் கொள்ளாது அவன் புகழே
 வாய் உபகாரம் கொண்ட வாய்ப்பு             (39)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 2623 | வாய்ப்போ இது ஒப்ப மற்று இல்லை வா நெஞ்சே போய்ப் போஒய் வெம் நரகில் பூவியேல் தீப் பால
 பேய்த் தாய் உயிர் கலாய்ப் பால் உண்டு அவள் உயிரை
 மாய்த்தானை வாழ்த்தே வலி             (40)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 2624 | வலியம் என நினைந்து வந்து எதிர்ந்த மல்லர் வலிய முடி இடிய வாங்கி வலிய நின்
 பொன் ஆழிக் கையால் புடைத்திடுதி கீளாதே
 பல் நாளும் நிற்கும் இப் பார்             (41)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 2625 | பார் உண்டான் பார் உமிழ்ந்தான் பார் இடந்தான் பார் அளந்தான் பார் இடம் முன் படைத்தான் என்பரால் பார் இடம்
 ஆவானும் தான் ஆனால் ஆர் இடமே? மற்றொருவர்க்கு
 ஆவான் புகாவால் அவை             (42)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 2626 | அவையம் என நினைந்து வந்த சுரர்பாலே நவையை நளிர்விப்பான் தன்னை கவை இல்
 மனத்து உயர வைத்திருந்து வாழ்த்தாதார்க்கு உண்டோ
 மனத் துயரை மாய்க்கும் வகை?             (43)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 2627 | வகை சேர்ந்த நல் நெஞ்சும் நா உடைய வாயும் மிக வாய்ந்து வீழா எனிலும் மிக ஆய்ந்து
 மாலைத் தாம் வாழ்த்தாது இருப்பர் இது அன்றே
 மேலைத் தாம் செய்யும் வினை?             (44)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 2628 | வினையார் தர முயலும் வெம்மையை அஞ்சி தினையாம் சிறிதளவும் செல்ல நினையாது
 வாசகத்தால் ஏத்தினேன் வானோர் தொழுது இறைஞ்சும்
 நாயகத்தான் பொன் அடிக்கள் நான்             (45)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 2629 | நான் கூறும் கூற்றாவது இத்தனையே நாள்நாளும் தேங்கு ஓத நீர் உருவன் செங்கண் மால் நீங்காத
 மா கதி ஆம் வெம் நரகில் சேராமல் காப்பதற்கு
 நீ கதி ஆம் நெஞ்சே நினை     (46)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 2630 | நினைத்து இறைஞ்சி மானிடவர் ஒன்று இரப்பர் என்றே நினைத்திடவும் வேண்டா நீ நேரே நினைத்து இறைஞ்ச
 எவ் அளவர்? எவ் இடத்தோர்? மாலே அது தானும்
 எவ் அளவும் உண்டோ எமக்கு?   (47)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 2631 | எமக்கு யாம் விண் நாட்டுக்கு உச்சமது ஆம் வீட்டை அமைத்திருந்தோம் அஃது அன்றே ஆம் ஆறு? அமைப் பொலிந்த
 மென் தோளி காரணமா வெம் கோட்டு ஏறு ஏழ் உடனே
 கொன்றானையே மனத்துக் கொண்டு             (48)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 2632 | கொண்டல் தான் மால் வரை தான் மா கடல் தான் கூர் இருள் தான் வண்டு அறாப் பூவை தான் மற்றுத்தான் கண்ட நாள்
 கார் உருவம் காண்தோறும் நெஞ்சு ஓடும் கண்ணனார்
 பேர் உரு என்று எம்மைப் பிரிந்து             (49)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 2633 | பிரிந்து ஒன்று நோக்காது தம்முடைய பின்னே திரிந்து உழலும் சிந்தனையார் தம்மை புரிந்து ஒருகால்
 ஆஆ என இரங்கார் அந்தோ வலிதேகொல்
 மா வாய் பிளந்தார் மனம்?             (50)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 2634 | மனம் ஆளும் ஓர் ஐவர் வன் குறும்பர் தம்மைச் சினம் மாள்வித்து ஓர் இடத்தே சேர்த்து புனம் மேய
 தண் துழாயான் அடியைத் தாம் காணும் அஃது அன்றே
 வண் துழாம் சீரார்க்கு மாண்பு?             (51)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 2635 | மாண் பாவித்து அஞ்ஞான்று மண் இரந்தான் மாயவள் நஞ்சு ஊண் பாவித்து உண்டானது ஓர் உருவம் காண்பான் நம்
 கண் அவா மற்று ஒன்று காண் உறா சீர் பரவாது
 உண்ண வாய் தான் உறுமோ ஒன்று?             (52)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 2636 | ஒன்று உண்டு செங்கண்மால் யான் உரைப்பது உன் அடியார்க்கு என் செய்வன் என்றே இருத்தி நீ நின் புகழில்
 வைகும் தம் சிந்தையிலும் மற்று இனிதோ நீ அவர்க்கு
 வைகுந்தம் என்று அருளும் வான்?             (53)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 2637 | வானோ மறி கடலோ மாருதமோ தீயகமோ கானோ ஒருங்கிற்று? கண்டிலமால் ஆன் ஈன்ற
 கன்று உயர தாம் எறிந்து காய் உதிர்த்தார் தாள் பணிந்தோம்
 வன் துயரை ஆஆ மருங்கு             (54)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 2638 | மருங்கு ஓதம் மோதும் மணி நாகணையார் மருங்கே வர அரியரேலும் ஒருங்கே
 எமக்கு அவரைக் காணலாம் எப்பொழுதும் உள்ளால்
 மனக் கவலை தீர்ப்பார் வரவு   (55)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 2639 | வரவு ஆறு ஒன்று இல்லையால் வாழ்வு இனிதால் எல்லே! ஒரு ஆறு ஒருவன் புகாவாறு உரு மாறும்
 ஆயவர் தாம் சேயவர் தாம் அன்று உலகம் தாயவர் தாம்
 மாயவர் தாம் காட்டும் வழி             (56)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 2640 | வழித் தங்கு வல்வினையை மாற்றானோ? நெஞ்சே! தழீஇக்கொண்டு போர் அவுணன் தன்னை சுழித்து எங்கும்
 தாழ்வு இடங்கள் பற்றி புலால் வெள்ளம் தான் உகள
 வாழ்வு அடங்க மார்வு இடந்த மால்             (57)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 2641 | மாலே படிச் சோதி மாற்றேல் இனி உனது பாலே போல் சீரில் பழுத்தொழிந்தேன் மேலால்
 பிறப்பு இன்மை பெற்று அடிக்கீழ்க் குற்றேவல் அன்று
 மறப்பு இன்மை யான் வேண்டும் மாடு             (58)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 2642 | மாடே வரப்பெறுவராம் என்றே வல்வினையார் காடானும் ஆதானும் கைக்கொள்ளார் ஊடே போய்ப்
 பேர் ஓதம் சிந்து திரைக் கண்வளரும் பேராளன்
 பேர் ஓத சிந்திக்க பேர்ந்து?             (59)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 2643 | பேர்ந்து ஒன்று நோக்காது பின் நிற்பாய் நில்லாப்பாய் ஈர்ந் துழாய் மாயனையே என் நெஞ்சே பேர்ந்து எங்கும்
 தொல்லை மா வெம் நரகில் சேராமல் காப்பதற்கு
 இல்லை காண் மற்றோர் இறை             (60)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 2644 | இறை முறையான் சேவடிமேல் மண் அளந்த அந் நாள் மறை முறையால் வான் நாடர் கூடி முறைமுறையின்
 தாது இலகு பூத் தெளித்தால் ஒவ்வாதே தாழ் விசும்பின்
 மீது இலகித் தான் கிடக்கும் மீன்?             (61)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 2645 | மீன் என்னும் கம்பில் வெறி என்னும் வெள்ளி வேய் வான் என்னும் கேடு இலா வான் குடைக்குத் தான் ஓர்
 மணிக் காம்பு போல் நிமிர்ந்து மண் அளந்தான் நங்கள்
 பிணிக்கு ஆம் பெரு மருந்து பின்             (62)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 2646 | பின் துரக்கும் காற்று இழந்த சூல் கொண்டல் பேர்ந்தும் போய் வன் திரைக்கண் வந்து அணைந்த வாய்மைத்தே அன்று
 திருச் செய்ய நேமியான் தீ அரக்கி மூக்கும்
 பருச் செவியும் ஈர்ந்த பரன்   (63)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 2647 | பரன் ஆம் அவன் ஆதல் பாவிப்பர் ஆகில் உரனால் ஒரு மூன்று போதும் மரம் ஏழ் அன்று
 எய்தானை புள்ளின் வாய் கீண்டானையே அமரர்
 கைதான் தொழாவே கலந்து?   (64)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 2648 | கலந்து நலியும் கடுந் துயரை நெஞ்சே மலங்க அடித்து மடிப்பான் விலங்கல் போல்
 தொல்மாலை கேசவனை நாரணனை மாதவனை
 சொல் மாலை எப்பொழுதும் சூட்டு   (65)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 2649 | சூட்டாய நேமியான் தொல் அரக்கன் இன் உயிரை மாட்டே துயர் இழைத்த மாயவனை ஈட்ட
 வெறி கொண்ட தண் துழாய் வேதியனை நெஞ்சே
 அறி கண்டாய் சொன்னேன் அது   (66)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 2650 | அதுவோ நன்று என்று அங்கு அமர் உலகோ வேண்டில் அதுவோ பொருள் இல்லை அன்றே? அது ஒழிந்து
 மண் நின்று ஆள்வேன் எனிலும் கூடும் மட நெஞ்சே
 கண்ணன் தாள் வாழ்த்துவதே கல்   (67)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 2651 | கல்லும் கனை கடலும் வைகுந்த வான் நாடும் புல் என்று ஒழிந்தனகொல்? ஏ பாவம் வெல்ல
 நெடியான் நிறம் கரியான் உள்புகுந்து நீங்கான்
 அடியேனது உள்ளத்து அகம்   (68)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 2652 | அகம் சிவந்த கண்ணினர் ஆய் வல்வினையர் ஆவார் முகம் சிதைவராம் அன்றே முக்கி மிகும் திருமால்
 சீர்க் கடலை உள் பொதிந்த சிந்தனையேன் தன்னை
 ஆர்க்கு அடல் ஆம் செவ்வே அடர்த்து?   (69)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 2653 | அடர் பொன் முடியானை ஆயிரம் பேரானை சுடர் கொள் சுடர் ஆழியானை இடர் கடியும்
 மாதா பிதாவாக வைத்தேன் எனது உள்ளே
 யாது ஆகில் யாதே இனி?     (70)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 2654 | இனி நின்று நின் பெருமை யான் உரைப்பது என்னே? தனி நின்ற சார்வு இலா மூர்த்தி பனி நீர்
 அகத்து உலவு செஞ்சடையான் ஆகத்தான் நான்கு
 முகத்தான் நின் உந்தி முதல்   (71)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 2655 | முதல் ஆம் திரு உருவம் மூன்று அன்பர் ஒன்றே முதல் ஆகும் மூன்றுக்கும் என்பர் முதல்வா
 நிகர் இலகு கார் உருவா நின் அகத்தது அன்றே
 புகர் இலகு தாமரையின் பூ?     (72)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 2656 | பூவையும் காயாவும் நீலமும் பூக்கின்ற காவி மலர் என்றும் காண்தோறும் பாவியேன்
 மெல் ஆவி மெய் மிகவே பூரிக்கும் அவ்வவை
 எல்லாம் பிரான் உருவே என்று     (73)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 2657 | என்றும் ஒருநாள் ஒழியாமை யான் இரந்தால் ஒன்றும் இரங்கார் உருக் காட்டார் குன்று
 குடை ஆக ஆ காத்த கோவலனார் நெஞ்சே
 புடை தான் பெரிதே புவி     (74)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 2658 | புவியும் இரு விசும்பும் நின் அகத்த நீ என் செவியின் வழி புகுந்து என் உள்ளாய் அவிவு இன்றி
 யான் பெரியன் நீ பெரியை என்பதனை யார் அறிவார்?
 ஊன் பருகு நேமியாய் உள்ளு     (75)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 2659 | உள்ளிலும் உள்ளம் தடிக்கும் வினைப் படலம் விள்ள விழித்து உன்னை மெய் உற்றால் உள்ள
 உலகு அளவும் யானும் உளன் ஆவன் என்கொல்?
 உலகு அளந்த மூர்த்தி உரை     (76)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 2660 | உரைக்கில் ஓர் சுற்றத்தார் உற்றார் என்று ஆரே? இரைக்கும் கடல் கிடந்த எந்தாய் உரைப்பு எல்லாம்
 நின் அன்றி மற்று இலேன் கண்டாய் எனது உயிர்க்கு ஓர்
 சொல் நன்றி ஆகும் துணை     (77)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 2661 | துணை நாள் பெருங் கிளையும் தொல் குலமும் சுற்றத்து இணை நாளும் இன்பு உடைத்தாமேலும் கணை நாணில்
 ஓவாத் தொழில் சார்ங்கன் தொல் சீரை நல் நெஞ்சே
 ஓவாத ஊணாக உண்     (78)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 2662 | உள் நாட்டுத் தேசு அன்றே? ஊழ்வினையை அஞ்சுமே? விண் நாட்டை ஒன்று ஆக மெச்சுமே? மண் நாட்டில்
 ஆர் ஆகி எவ் இழிவிற்று ஆனாலும் ஆழி அங்கைப்
 பேர் ஆயற்கு ஆள் ஆம் பிறப்பு     (79)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 2663 | பிறப்பு இறப்பு மூப்புப் பிணி துறந்து பின்னும் இறக்கவும் இன்பு உடைத்தாமேலும் மறப்பு எல்லாம்
 ஏதமே என்று அல்லால் எண்ணுவனே மண் அளந்தான்
 பாதமே ஏத்தாப் பகல்?     (80)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 2664 | பகல் இரா என்பதுவும் பாவியாது எம்மை இகல் செய்து இரு பொழுதும் ஆள்வர் தகவாத்
 தொழும்பர் இவர் சீர்க்கும் துணை இலர் என்று ஓரார்
 செழும் பரவை மேயார் தெரிந்து     (81)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 2665 | தெரிந்துணர்வு ஒன்று இன்மையால் தீவினையேன் வாளா இருந்தொழிந்தேன் கீழ் நாள்கள் எல்லாம் கரந்துருவின்
 அம் மானை அந்நான்று பின் தொடர்ந்த ஆழி அங்கை
 அம்மானை ஏத்தாது அயர்த்து     (82)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 2666 | அயர்ப்பாய் அயராப்பாய் நெஞ்சமே சொன்னேன் உயப்போம் நெறி இதுவே கண்டாய் செயற்பால
 அல்லவே செய்கிறுதி நெஞ்சமே அஞ்சினேன்
 மல்லர் நாள் வவ்வினனை வாழ்த்து     (83)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 2667 | வாழ்த்தி அவன் அடியைப் பூப் புனைந்து நின் தலையைத் தாழ்த்து இரு கை கூப்பு என்றால் கூப்பாத பாழ்த்த விதி
 எங்கு உற்றாய் என்று அவனை ஏத்தாது என் நெஞ்சமே
 தங்கத்தான் ஆமேலும் தங்கு     (84)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 2668 | தங்கா முயற்றிய ஆய் தாழ் விசும்பின் மீது பாய்ந்து எங்கே புக்கு எத் தவம் செய்திட்டனகொல் பொங்கு ஓதத்
 தண் அம் பால் வேலைவாய்க் கண்வளரும் என்னுடைய
 கண்ணன்பால் நல் நிறம் கொள் கார்?   (85)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 2669 | கார் கலந்த மேனியான் கை கலந்த ஆழியான் பார் கலந்த வல் வயிற்றான் பாம்பு அணையான் சீர் கலந்த
 சொல் நினைந்து போக்காரேல் சூழ்வினையின் ஆழ் துயரை
 என் நினைந்து போக்குவர் இப்போது?     (86)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 2670 | இப்போதும் இன்னும் இனிச் சிறிது நின்றாலும் எப்போதும் ஈதே சொல் என் நெஞ்சே எப்போதும்
 கை கழலா நேமியான் நம்மேல் வினை கடிவான்
 மொய் கழலே ஏத்த முயல்     (87)
 | 
 |  | 
		
			|  |  |  |