மூன்றாம் ஆயிரம் இயற்பா நம்மாழ்வார்
|
| பெரியதிருவந்தாதி |
| 2584 | முயற்றி சுமந்து எழுந்து முந்துற்ற நெஞ்சே இயற்றுவாய் எம்மொடு நீ கூடி நயப்பு உடைய நா ஈன் தொடைக் கிளவியுள் பொதிவோம் நல் பூவைப் பூ ஈன்ற வண்ணன் புகழ் (1) | |
|
| |
|
|
| 2585 | புகழ்வோம் பழிப்போம் புகழோம் பழியோம் இகழ்வோம் மதிப்போம் மதியோம் இகழோம் மற்று எங்கள் மால் செங்கண் மால் சீறல் நீ தீவினையோம் எங்கள் மால் கண்டாய் இவை (2) | |
|
| |
|
|
| 2586 | இவை அன்றே நல்ல இவை அன்றே தீய இவை என்று இவை அறிவனேலும் இவை எல்லாம் என்னால் அடைப்பு நீக்கு ஒண்ணாது இறையவனே என்னால் செயற்பாலது என்? (3) | |
|
| |
|
|
| 2587 | என்னின் மிகு புகழார் யாவரே? பின்னையும் மற்று எண் இல் மிகு புகழேன் யான் அல்லால் என்ன கருஞ் சோதிக் கண்ணன் கடல் புரையும் சீலப் பெருஞ்சோதிக்கு என் நெஞ்சு ஆட்பெற்று (4) | |
|
| |
|
|
| 2588 | பெற்ற தாய் நீயே பிறப்பித்த தந்தை நீ மற்றையார் ஆவாரும் நீ பேசில் எற்றேயோ மாய மா மாயவளை மாய முலை வாய் வைத்த நீ அம்மா காட்டும் நெறி? (5) | |
|
| |
|
|
| 2589 | நெறி காட்டி நீக்குதியோ? நின்பால் கரு மா முறி மேனி காட்டுதியோ? மேல் நாள் அறியோமை என் செய்வான் எண்ணினாய்? கண்ணனே ஈது உரையாய் என் செய்தால் என் படோம் யாம்? (6) | |
|
| |
|
|
| 2590 | யாமே அருவினையோம் சேயோம் என் நெஞ்சினார் தாமே அணுக்கராய்ச் சார்ந்தொழிந்தார் பூ மேய செம்மாதை நின் மார்வில் சேர்வித்துப் பார் இடந்த அம்மா! நின் பாதத்து அருகு (7) | |
|
| |
|
|
| 2591 | அருகும் சுவடும் தெரிவு உணரோம் அன்பே பெருகும் மிக இது என்? பேசீர் பருகலாம் பண்புடையீர் பார் அளந்தீர் பாவியெம் கண் காண்பு அரிய நுண்பு உடையீர்! நும்மை நுமக்கு (8) | |
|
| |
|
|
| 2592 | நுமக்கு அடியோம் என்று என்று நொந்து உரைத்து என்? மாலார் தமக்கு அவர் தாம் சார்வு அரியர் ஆனால் எமக்கு இனி யாதானும் ஆகிடு காண் நெஞ்சே அவர்திறத்தே யாதானும் சிந்தித்து இரு (9) | |
|
| |
|
|
| 2593 | இரு நால்வர் ஈரைந்தின் மேல் ஒருவர் எட்டோடு ஒரு நால்வர் ஓர் இருவர் அல்லால் திருமாற்கு யாம் ஆர்? வணக்கம் ஆர்? ஏ பாவம் நல் நெஞ்சே நாமா மிக உடையோம் நாழ் (10) | |
|
| |
|
|
| 2594 | நாழால் அமர் முயன்ற வல் அரக்கன் இன் உயிரை வாழாவகை வலிதல் நின் வலியே? ஆழாத பாரும் நீ வானும் நீ காலும் நீ தீயும் நீ நீரும் நீ ஆய் நின்ற நீ (11) | |
|
| |
|
|
| 2595 | நீ அன்றே ஆழ் துயரில் வீழ்விப்பான் நின்று உழன்றாய் போய் ஒன்று சொல்லி என்? போ நெஞ்சே நீ என்றும் காழ்த்து உபதேசம் தரினும் கைக்கொள்ளாய் கண்ணன்தாள் வாழ்த்துவதே கண்டாய் வழக்கு (12) | |
|
| |
|
|
| 2596 | வழக்கொடு மாறுகோள் அன்று அடியார் வேண்ட இழக்கவும் காண்டும் இறைவ இழப்பு உண்டே? எம் ஆட்கொண்டு ஆகிலும் யான் வேண்ட என் கண்கள் தம்மால் காட்டு உன் மேனிச் சாய் (13) | |
|
| |
|
|
| 2597 | சாயால் கரியானை உள் அறியாராய் நெஞ்சே பேயார் முலை கொடுத்தார் பேயர் ஆய் நீ யார்? போய்த் தேம்பு ஊண் சுவைத்து ஊன் அறிந்து அறிந்தும் தீவினை ஆம் பாம்பார் வாய்க் கைந் நீட்டல் பார்த்து (14) | |
|
| |
|
|
| 2598 | பார்த்து ஓர் எதிரிதா நெஞ்சே படு துயரம் பேர்த்து ஓதப் பீடு அழிவு ஆம் பேச்சு இல்லை ஆர்த்து ஓதம் தம் மேனித் தாள் தடவ தாம் கிடந்து தம்முடைய செம்மேனிக் கண்வளர்வார் சீர் (15) | |
|
| |
|
|
| 2599 | சீரால் பிறந்து சிறப்பால் வளராது பேர் வாமன் ஆகாக்கால் பேராளா மார்பு ஆரப் புல்கி நீ உண்டு உமிழ்ந்த பூமி நீர் ஏற்பு அரிதே? சொல்லு நீ யாம் அறிய சூழ்ந்து (16) | |
|
| |
|
|
| 2600 | சூழ்ந்து அடியார் வேண்டினக்கால் தோன்றாது விட்டாலும் வாழ்ந்திடுவர் பின்னும் தம் வாய்திறவார் சூழ்ந்து எங்கும் வாள் வரைகள் போல் அரக்கன் வன் தலைகள் தாம் இடிய தாள் வரை வில் ஏந்தினார் தாம் (17) | |
|
| |
|
|
| 2601 | தாம்பால் ஆப்புண்டாலும் அத் தழும்பு தான் இளகப் பாம்பால் ஆப்புண்டு பாடு உற்றாலும் சோம்பாது இப் பல் உருவை எல்லாம் படர்வித்த வித்தா உன் தொல் உருவை யார் அறிவார்? சொல்லு (18) | |
|
| |
|
|
| 2602 | சொல்லில் குறை இல்லை சூது அறியா நெஞ்சமே எல்லி பகல் என்னாது எப்போதும் தொல்லைக்கண் மாத் தானைக்கு எல்லாம் ஓர் ஐவரையே மாறு ஆகக் காத்தானைக் காண்டும் நீ காண் (19) | |
|
| |
|
|
| 2603 | காணப்புகில் அறிவு கைக்கொண்ட நல் நெஞ்சம் நாணப்படும் அன்றே நாம் பேசில்! மாணி உரு ஆகிக்கொண்டு உலகம் நீர் ஏற்ற சீரான் திரு ஆகம் தீண்டிற்றுச் சென்று (20) | |
|
| |
|
|
| 2604 | சென்று அங்கு வெம் நரகில் சேராமல் காப்பதற்கு இன்று இங்கு என் நெஞ்சால் இடுக்குண்ட அன்று அங்குப் பார் உருவும் பார் வளைத்த நீர் உருவும் கண் புதையக் கார் உருவன் தான் நிமிர்த்த கால் (21) | |
|
| |
|
|
| 2605 | காலே பொதத் திரிந்து கத்துவராம் இனநாள் மாலார் குடிபுகுந்தார் என் மனத்தே மேலால் தருக்கும் இடம்பாட்டினொடும் வல்வினையார் தாம் வீற்று இருக்கும் இடம் காணாது இளைத்து (22) | |
|
| |
|
|
| 2606 | இளைப்பாய் இளையாப்பாய் நெஞ்சமே சொன்னேன் இளைக்க நமன் தமர்கள் பற்றி இளைப்பு எய்த நாய் தந்து மோதாமல் நல்குவான் நல்காப்பான் தாய் தந்தை எவ் உயிர்க்கும் தான் (23) | |
|
| |
|
|
| 2607 | தானே தனித் தோன்றல் தன் அளப்பு ஒன்று இல்லாதான் தானே பிறர்கட்கும் தன் தோன்றல் தானே இளைக்கில் பார் கீழ் மேல் ஆம் மீண்டு அமைப்பான் ஆனால் அளக்கிற்பார் பாரின்மேல் ஆர்? (24) | |
|
| |
|
|
| 2608 | ஆரானும் ஆதானும் செய்ய அகலிடத்தை ஆராய்ந்து அது திருத்தல் ஆவதே? சீர் ஆர் மனத்தலை வன் துன்பத்தை மாற்றினேன் வானோர் இனத் தலைவன் கண்ணனால் யான் (25) | |
|
| |
|
|
| 2609 | யானும் என் நெஞ்சும் இசைந்தொழிந்தோம் வல்வினையைக் கானும் மலையும் புகக் கடிவான் தான் ஓர் இருள் அன்ன மா மேனி எம் இறையார் தந்த அருள் என்னும் தண்டால் அடித்து (26) | |
|
| |
|
|
| 2610 | அடியால் படி கடந்த முத்தோ? அது அன்றேல் முடியால் விசும்பு அளந்த முத்தோ? நெடியாய் செறி கழல் கொள் தாள் நிமிர்த்துச் சென்று உலகம் எல்லாம் அறிகிலமால் நீ அளந்த அன்று (27) | |
|
| |
|
|
| 2611 | அன்றே நம் கண் காணும் ஆழியான் கார் உருவம் இன்றே நாம் காணாது இருப்பதுவும் என்றேனும் கட்கண்ணால் காணாத அவ் உருவை நெஞ்சு என்னும் உட்கண்ணேல் காணும் உணர்ந்து (28) | |
|
| |
|
|
| 2612 | உணர ஒருவர்க்கு எளியேனே செவ்வே இணரும் துழாய் அலங்கல் எந்தை? உணரத் தனக்கு எளியர் எவ் அளவர் அவ் அளவன் ஆனால் எனக்கு எளியன் எம் பெருமான் இங்கு (29) | |
|
| |
|
|
| 2613 | இங்கு இல்லை பண்டுபோல் வீற்றிருத்தல் என்னுடைய செங்கண் மால் சீர்க்கும் சிறிது உள்ளம் அங்கே மடி அடக்கி நிற்பதனில் வல்வினையார் தாம் ஈண்டு அடி எடுப்பது அன்றோ அழகு? (30) | |
|
| |
|
|
| 2614 | அழகும் அறிவோமாய் வல்வினையைத் தீர்ப்பான் நிழலும் அடி தாறும் ஆனோம் சுழலக் குடங்கள் தலைமீது எடுத்துக் கொண்டு ஆடி அன்று அத் தடங் கடலை மேயார் தமக்கு (31) | |
|
| |
|
|
| 2615 | தமக்கு அடிமை வேண்டுவார் தாமோதரனார் தமக்கு அடிமை செய் என்றால் செய்யாது எமக்கு என்று தம் செய்யும் தீவினைக்கே தாழ்வுறுவர் நெஞ்சினார் யாம் செய்வது இவ்விடத்து இங்கு யாது? (32) | |
|
| |
|
|
| 2616 | யாதானும் ஒன்று அறியில் தன் உகக்கில் என் கொலோ யாதானும் நேர்ந்து அணுகா ஆறு தான் யாதானும் தேறுமா செய்யா அசுரர்களை நேமியால் பாறுபாறு ஆக்கினான்பால்? (33) | |
|
| |
|
|
| 2617 | பால் ஆழி நீ கிடக்கும் பண்பை யாம் கேட்டேயும் கால் ஆழும் நெஞ்சு அழியும் கண் சுழலும் நீல் ஆழிச் சோதியாய் ஆதியாய் தொல்வினை எம்பால் கடியும் நீதியாய் நின் சார்ந்து நின்று (34) | |
|
| |
|
|
| 2618 | நின்றும் இருந்தும் கிடந்தும் திரிதந்தும் ஒன்றும் ஓவாற்றான் என் நெஞ்சு அகலான் அன்று அம் கை வன் புடையால் பொன்பெயரோன் வாய் தகர்த்து மார்வு இடந்தான் அன்புடையன் அன்றே அவன்? (35) | |
|
| |
|
|
| 2619 | அவன் ஆம்? இவன் ஆம்? உவன் ஆம்? மற்று உம்பர் அவன் ஆம்? அவன் என்று இராதே அவன் ஆம் அவனே எனத் தெளிந்து கண்ணனுக்கே தீர்ந்தால் அவனே எவனேலும் ஆம் (36) | |
|
| |
|
|
| 2620 | ஆம் ஆறு அறிவுடையார் ஆவது அரிது அன்றே? நாமே அது உடையோம் நல் நெஞ்சே பூ மேய் மதுகரம் மே தண் துழாய் மாலாரை வாழ்த்து ஆம் அது கரமே அன்பால் அமை (37) | |
|
| |
|
|
| 2621 | அமைக்கும் பொழுது உண்டே ஆராயில் நெஞ்சே இமைக்கும் பொழுதும்? இடைச்சி குமைத்திறங்கள் ஏசியே ஆயினும் ஈன் துழாய் மாயனையே பேசியே போக்காய் பிழை (38) | |
|
| |
|
|
| 2622 | பிழைக்க முயன்றோமோ நெஞ்சமே பேசாய்? தழைக்கும் துழாய் மார்வன் தன்னை அழைத்து ஒருகால் போய் உபகாரம் பொலியக் கொள்ளாது அவன் புகழே வாய் உபகாரம் கொண்ட வாய்ப்பு (39) | |
|
| |
|
|
| 2623 | வாய்ப்போ இது ஒப்ப மற்று இல்லை வா நெஞ்சே போய்ப் போஒய் வெம் நரகில் பூவியேல் தீப் பால பேய்த் தாய் உயிர் கலாய்ப் பால் உண்டு அவள் உயிரை மாய்த்தானை வாழ்த்தே வலி (40) | |
|
| |
|
|
| 2624 | வலியம் என நினைந்து வந்து எதிர்ந்த மல்லர் வலிய முடி இடிய வாங்கி வலிய நின் பொன் ஆழிக் கையால் புடைத்திடுதி கீளாதே பல் நாளும் நிற்கும் இப் பார் (41) | |
|
| |
|
|
| 2625 | பார் உண்டான் பார் உமிழ்ந்தான் பார் இடந்தான் பார் அளந்தான் பார் இடம் முன் படைத்தான் என்பரால் பார் இடம் ஆவானும் தான் ஆனால் ஆர் இடமே? மற்றொருவர்க்கு ஆவான் புகாவால் அவை (42) | |
|
| |
|
|
| 2626 | அவையம் என நினைந்து வந்த சுரர்பாலே நவையை நளிர்விப்பான் தன்னை கவை இல் மனத்து உயர வைத்திருந்து வாழ்த்தாதார்க்கு உண்டோ மனத் துயரை மாய்க்கும் வகை? (43) | |
|
| |
|
|
| 2627 | வகை சேர்ந்த நல் நெஞ்சும் நா உடைய வாயும் மிக வாய்ந்து வீழா எனிலும் மிக ஆய்ந்து மாலைத் தாம் வாழ்த்தாது இருப்பர் இது அன்றே மேலைத் தாம் செய்யும் வினை? (44) | |
|
| |
|
|
| 2628 | வினையார் தர முயலும் வெம்மையை அஞ்சி தினையாம் சிறிதளவும் செல்ல நினையாது வாசகத்தால் ஏத்தினேன் வானோர் தொழுது இறைஞ்சும் நாயகத்தான் பொன் அடிக்கள் நான் (45) | |
|
| |
|
|
| 2629 | நான் கூறும் கூற்றாவது இத்தனையே நாள்நாளும் தேங்கு ஓத நீர் உருவன் செங்கண் மால் நீங்காத மா கதி ஆம் வெம் நரகில் சேராமல் காப்பதற்கு நீ கதி ஆம் நெஞ்சே நினை (46) | |
|
| |
|
|
| 2630 | நினைத்து இறைஞ்சி மானிடவர் ஒன்று இரப்பர் என்றே நினைத்திடவும் வேண்டா நீ நேரே நினைத்து இறைஞ்ச எவ் அளவர்? எவ் இடத்தோர்? மாலே அது தானும் எவ் அளவும் உண்டோ எமக்கு? (47) | |
|
| |
|
|
| 2631 | எமக்கு யாம் விண் நாட்டுக்கு உச்சமது ஆம் வீட்டை அமைத்திருந்தோம் அஃது அன்றே ஆம் ஆறு? அமைப் பொலிந்த மென் தோளி காரணமா வெம் கோட்டு ஏறு ஏழ் உடனே கொன்றானையே மனத்துக் கொண்டு (48) | |
|
| |
|
|
| 2632 | கொண்டல் தான் மால் வரை தான் மா கடல் தான் கூர் இருள் தான் வண்டு அறாப் பூவை தான் மற்றுத்தான் கண்ட நாள் கார் உருவம் காண்தோறும் நெஞ்சு ஓடும் கண்ணனார் பேர் உரு என்று எம்மைப் பிரிந்து (49) | |
|
| |
|
|
| 2633 | பிரிந்து ஒன்று நோக்காது தம்முடைய பின்னே திரிந்து உழலும் சிந்தனையார் தம்மை புரிந்து ஒருகால் ஆஆ என இரங்கார் அந்தோ வலிதேகொல் மா வாய் பிளந்தார் மனம்? (50) | |
|
| |
|
|
| 2634 | மனம் ஆளும் ஓர் ஐவர் வன் குறும்பர் தம்மைச் சினம் மாள்வித்து ஓர் இடத்தே சேர்த்து புனம் மேய தண் துழாயான் அடியைத் தாம் காணும் அஃது அன்றே வண் துழாம் சீரார்க்கு மாண்பு? (51) | |
|
| |
|
|
| 2635 | மாண் பாவித்து அஞ்ஞான்று மண் இரந்தான் மாயவள் நஞ்சு ஊண் பாவித்து உண்டானது ஓர் உருவம் காண்பான் நம் கண் அவா மற்று ஒன்று காண் உறா சீர் பரவாது உண்ண வாய் தான் உறுமோ ஒன்று? (52) | |
|
| |
|
|
| 2636 | ஒன்று உண்டு செங்கண்மால் யான் உரைப்பது உன் அடியார்க்கு என் செய்வன் என்றே இருத்தி நீ நின் புகழில் வைகும் தம் சிந்தையிலும் மற்று இனிதோ நீ அவர்க்கு வைகுந்தம் என்று அருளும் வான்? (53) | |
|
| |
|
|
| 2637 | வானோ மறி கடலோ மாருதமோ தீயகமோ கானோ ஒருங்கிற்று? கண்டிலமால் ஆன் ஈன்ற கன்று உயர தாம் எறிந்து காய் உதிர்த்தார் தாள் பணிந்தோம் வன் துயரை ஆஆ மருங்கு (54) | |
|
| |
|
|
| 2638 | மருங்கு ஓதம் மோதும் மணி நாகணையார் மருங்கே வர அரியரேலும் ஒருங்கே எமக்கு அவரைக் காணலாம் எப்பொழுதும் உள்ளால் மனக் கவலை தீர்ப்பார் வரவு (55) | |
|
| |
|
|
| 2639 | வரவு ஆறு ஒன்று இல்லையால் வாழ்வு இனிதால் எல்லே! ஒரு ஆறு ஒருவன் புகாவாறு உரு மாறும் ஆயவர் தாம் சேயவர் தாம் அன்று உலகம் தாயவர் தாம் மாயவர் தாம் காட்டும் வழி (56) | |
|
| |
|
|
| 2640 | வழித் தங்கு வல்வினையை மாற்றானோ? நெஞ்சே! தழீஇக்கொண்டு போர் அவுணன் தன்னை சுழித்து எங்கும் தாழ்வு இடங்கள் பற்றி புலால் வெள்ளம் தான் உகள வாழ்வு அடங்க மார்வு இடந்த மால் (57) | |
|
| |
|
|
| 2641 | மாலே படிச் சோதி மாற்றேல் இனி உனது பாலே போல் சீரில் பழுத்தொழிந்தேன் மேலால் பிறப்பு இன்மை பெற்று அடிக்கீழ்க் குற்றேவல் அன்று மறப்பு இன்மை யான் வேண்டும் மாடு (58) | |
|
| |
|
|
| 2642 | மாடே வரப்பெறுவராம் என்றே வல்வினையார் காடானும் ஆதானும் கைக்கொள்ளார் ஊடே போய்ப் பேர் ஓதம் சிந்து திரைக் கண்வளரும் பேராளன் பேர் ஓத சிந்திக்க பேர்ந்து? (59) | |
|
| |
|
|
| 2643 | பேர்ந்து ஒன்று நோக்காது பின் நிற்பாய் நில்லாப்பாய் ஈர்ந் துழாய் மாயனையே என் நெஞ்சே பேர்ந்து எங்கும் தொல்லை மா வெம் நரகில் சேராமல் காப்பதற்கு இல்லை காண் மற்றோர் இறை (60) | |
|
| |
|
|
| 2644 | இறை முறையான் சேவடிமேல் மண் அளந்த அந் நாள் மறை முறையால் வான் நாடர் கூடி முறைமுறையின் தாது இலகு பூத் தெளித்தால் ஒவ்வாதே தாழ் விசும்பின் மீது இலகித் தான் கிடக்கும் மீன்? (61) | |
|
| |
|
|
| 2645 | மீன் என்னும் கம்பில் வெறி என்னும் வெள்ளி வேய் வான் என்னும் கேடு இலா வான் குடைக்குத் தான் ஓர் மணிக் காம்பு போல் நிமிர்ந்து மண் அளந்தான் நங்கள் பிணிக்கு ஆம் பெரு மருந்து பின் (62) | |
|
| |
|
|
| 2646 | பின் துரக்கும் காற்று இழந்த சூல் கொண்டல் பேர்ந்தும் போய் வன் திரைக்கண் வந்து அணைந்த வாய்மைத்தே அன்று திருச் செய்ய நேமியான் தீ அரக்கி மூக்கும் பருச் செவியும் ஈர்ந்த பரன் (63) | |
|
| |
|
|
| 2647 | பரன் ஆம் அவன் ஆதல் பாவிப்பர் ஆகில் உரனால் ஒரு மூன்று போதும் மரம் ஏழ் அன்று எய்தானை புள்ளின் வாய் கீண்டானையே அமரர் கைதான் தொழாவே கலந்து? (64) | |
|
| |
|
|
| 2648 | கலந்து நலியும் கடுந் துயரை நெஞ்சே மலங்க அடித்து மடிப்பான் விலங்கல் போல் தொல்மாலை கேசவனை நாரணனை மாதவனை சொல் மாலை எப்பொழுதும் சூட்டு (65) | |
|
| |
|
|
| 2649 | சூட்டாய நேமியான் தொல் அரக்கன் இன் உயிரை மாட்டே துயர் இழைத்த மாயவனை ஈட்ட வெறி கொண்ட தண் துழாய் வேதியனை நெஞ்சே அறி கண்டாய் சொன்னேன் அது (66) | |
|
| |
|
|
| 2650 | அதுவோ நன்று என்று அங்கு அமர் உலகோ வேண்டில் அதுவோ பொருள் இல்லை அன்றே? அது ஒழிந்து மண் நின்று ஆள்வேன் எனிலும் கூடும் மட நெஞ்சே கண்ணன் தாள் வாழ்த்துவதே கல் (67) | |
|
| |
|
|
| 2651 | கல்லும் கனை கடலும் வைகுந்த வான் நாடும் புல் என்று ஒழிந்தனகொல்? ஏ பாவம் வெல்ல நெடியான் நிறம் கரியான் உள்புகுந்து நீங்கான் அடியேனது உள்ளத்து அகம் (68) | |
|
| |
|
|
| 2652 | அகம் சிவந்த கண்ணினர் ஆய் வல்வினையர் ஆவார் முகம் சிதைவராம் அன்றே முக்கி மிகும் திருமால் சீர்க் கடலை உள் பொதிந்த சிந்தனையேன் தன்னை ஆர்க்கு அடல் ஆம் செவ்வே அடர்த்து? (69) | |
|
| |
|
|
| 2653 | அடர் பொன் முடியானை ஆயிரம் பேரானை சுடர் கொள் சுடர் ஆழியானை இடர் கடியும் மாதா பிதாவாக வைத்தேன் எனது உள்ளே யாது ஆகில் யாதே இனி? (70) | |
|
| |
|
|
| 2654 | இனி நின்று நின் பெருமை யான் உரைப்பது என்னே? தனி நின்ற சார்வு இலா மூர்த்தி பனி நீர் அகத்து உலவு செஞ்சடையான் ஆகத்தான் நான்கு முகத்தான் நின் உந்தி முதல் (71) | |
|
| |
|
|
| 2655 | முதல் ஆம் திரு உருவம் மூன்று அன்பர் ஒன்றே முதல் ஆகும் மூன்றுக்கும் என்பர் முதல்வா நிகர் இலகு கார் உருவா நின் அகத்தது அன்றே புகர் இலகு தாமரையின் பூ? (72) | |
|
| |
|
|
| 2656 | பூவையும் காயாவும் நீலமும் பூக்கின்ற காவி மலர் என்றும் காண்தோறும் பாவியேன் மெல் ஆவி மெய் மிகவே பூரிக்கும் அவ்வவை எல்லாம் பிரான் உருவே என்று (73) | |
|
| |
|
|
| 2657 | என்றும் ஒருநாள் ஒழியாமை யான் இரந்தால் ஒன்றும் இரங்கார் உருக் காட்டார் குன்று குடை ஆக ஆ காத்த கோவலனார் நெஞ்சே புடை தான் பெரிதே புவி (74) | |
|
| |
|
|
| 2658 | புவியும் இரு விசும்பும் நின் அகத்த நீ என் செவியின் வழி புகுந்து என் உள்ளாய் அவிவு இன்றி யான் பெரியன் நீ பெரியை என்பதனை யார் அறிவார்? ஊன் பருகு நேமியாய் உள்ளு (75) | |
|
| |
|
|
| 2659 | உள்ளிலும் உள்ளம் தடிக்கும் வினைப் படலம் விள்ள விழித்து உன்னை மெய் உற்றால் உள்ள உலகு அளவும் யானும் உளன் ஆவன் என்கொல்? உலகு அளந்த மூர்த்தி உரை (76) | |
|
| |
|
|
| 2660 | உரைக்கில் ஓர் சுற்றத்தார் உற்றார் என்று ஆரே? இரைக்கும் கடல் கிடந்த எந்தாய் உரைப்பு எல்லாம் நின் அன்றி மற்று இலேன் கண்டாய் எனது உயிர்க்கு ஓர் சொல் நன்றி ஆகும் துணை (77) | |
|
| |
|
|
| 2661 | துணை நாள் பெருங் கிளையும் தொல் குலமும் சுற்றத்து இணை நாளும் இன்பு உடைத்தாமேலும் கணை நாணில் ஓவாத் தொழில் சார்ங்கன் தொல் சீரை நல் நெஞ்சே ஓவாத ஊணாக உண் (78) | |
|
| |
|
|
| 2662 | உள் நாட்டுத் தேசு அன்றே? ஊழ்வினையை அஞ்சுமே? விண் நாட்டை ஒன்று ஆக மெச்சுமே? மண் நாட்டில் ஆர் ஆகி எவ் இழிவிற்று ஆனாலும் ஆழி அங்கைப் பேர் ஆயற்கு ஆள் ஆம் பிறப்பு (79) | |
|
| |
|
|
| 2663 | பிறப்பு இறப்பு மூப்புப் பிணி துறந்து பின்னும் இறக்கவும் இன்பு உடைத்தாமேலும் மறப்பு எல்லாம் ஏதமே என்று அல்லால் எண்ணுவனே மண் அளந்தான் பாதமே ஏத்தாப் பகல்? (80) | |
|
| |
|
|
| 2664 | பகல் இரா என்பதுவும் பாவியாது எம்மை இகல் செய்து இரு பொழுதும் ஆள்வர் தகவாத் தொழும்பர் இவர் சீர்க்கும் துணை இலர் என்று ஓரார் செழும் பரவை மேயார் தெரிந்து (81) | |
|
| |
|
|
| 2665 | தெரிந்துணர்வு ஒன்று இன்மையால் தீவினையேன் வாளா இருந்தொழிந்தேன் கீழ் நாள்கள் எல்லாம் கரந்துருவின் அம் மானை அந்நான்று பின் தொடர்ந்த ஆழி அங்கை அம்மானை ஏத்தாது அயர்த்து (82) | |
|
| |
|
|
| 2666 | அயர்ப்பாய் அயராப்பாய் நெஞ்சமே சொன்னேன் உயப்போம் நெறி இதுவே கண்டாய் செயற்பால அல்லவே செய்கிறுதி நெஞ்சமே அஞ்சினேன் மல்லர் நாள் வவ்வினனை வாழ்த்து (83) | |
|
| |
|
|
| 2667 | வாழ்த்தி அவன் அடியைப் பூப் புனைந்து நின் தலையைத் தாழ்த்து இரு கை கூப்பு என்றால் கூப்பாத பாழ்த்த விதி எங்கு உற்றாய் என்று அவனை ஏத்தாது என் நெஞ்சமே தங்கத்தான் ஆமேலும் தங்கு (84) | |
|
| |
|
|
| 2668 | தங்கா முயற்றிய ஆய் தாழ் விசும்பின் மீது பாய்ந்து எங்கே புக்கு எத் தவம் செய்திட்டனகொல் பொங்கு ஓதத் தண் அம் பால் வேலைவாய்க் கண்வளரும் என்னுடைய கண்ணன்பால் நல் நிறம் கொள் கார்? (85) | |
|
| |
|
|
| 2669 | கார் கலந்த மேனியான் கை கலந்த ஆழியான் பார் கலந்த வல் வயிற்றான் பாம்பு அணையான் சீர் கலந்த சொல் நினைந்து போக்காரேல் சூழ்வினையின் ஆழ் துயரை என் நினைந்து போக்குவர் இப்போது? (86) | |
|
| |
|
|
| 2670 | இப்போதும் இன்னும் இனிச் சிறிது நின்றாலும் எப்போதும் ஈதே சொல் என் நெஞ்சே எப்போதும் கை கழலா நேமியான் நம்மேல் வினை கடிவான் மொய் கழலே ஏத்த முயல் (87) | |
|
| |
|
|